ஸ்டெர்லைட்டுக்கு பிறகு … மீதம் இருப்பது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி …..
ஸ்டெர்லைட் மூடபடுவதாக அரசு அறிவித்தாயிற்று, கடந்த 1 மாத காலமாகவே அது இயங்கவில்லை , பராமரிபிற்காக நிறுத்தபட்டிருந்தது இனி மொத்தமாக மூடபடும்
அதற்குள், ஒரு கம்பெனி மூடபடுவது சாதாரண விஷயமா? எங்கெல்லாம் இருந்து ஆணைகள் வரவேண்டும் தெரியுமா? உச்சநீதிமன்றம் எல்லாம் அவர்களை கைவிடாது என பல அழுகுரல்கள்
இதெல்லாம் யாருக்கு தெரியாது
பல துறைகளில் இருந்து ஆணைவரத்தான் வேண்டும், அதற்கு அரசு முதல் ஆணையினை பிறப்பிக்க வேண்டும்
அரசு பிறப்பித்தபின்பே ஒவ்வொரு துறையும் களத்தில் இறங்கும், இனி ஒவ்வொரு நடவடிக்கையாக எடுக்கபடும்
அதற்குள் ஆயிரம் அழுகுரல்கள், ஸ்டெர்லைட் மூடபடுவதில் இவர்களுக்கு உள்ளூர வருத்தம் போல..
உச்சநீதிமன்றம் சட்டத்தின் அடிப்படையிலே தீர்ப்பு சொல்லும், மாநில அரசின் ஆணைகளும் முக்கியமானவை இல்லை என்றால் அது மராட்டிய ரத்னகிரியிலே நிலைத்திருக்கும் இங்கு ஏன் வரபோகின்றது
ஆலை மூட்டைகட்டி செல்ல சில மாதம் ஆகலாம், ஆனால் இனி இயங்காது என்பது மிகபெரும் ஆறுதல், அதை ஒரு பயலும் சொல்ல காணோம்
மபி போபாலில் கடைசியில் ஏற்பட்ட பேரழிவுதான் உலகறியும், ஆனால் அதன் சிற் சில விபத்துகளில் அங்கு பலர் செத்துகொண்டேதான் இருந்தார்கள் ஆனால் விழிப்புணர்வில்லா அப்பகுதியில் அதை உணர்ந்து சொல்ல யாருமில்லை
ஒரே ஒரு நள்ளிரவு நச்சு கசிவு பேரழிவினை கொடுத்தது
ஸ்டெர்லைட் அப்படி ஒரு அபாய ஆலை, மறைமுகமாக பலரை கொன்றது, சில நச்சு கசிவுகளில் மறைமுகமாக ஏராளமான மக்களை பாதித்தது
போபால் போல இதுவும் மொத்தமாக ஒரு நாள் கொல்லும் என மக்கள் அஞ்சிய நிலையில்தான் போராட்டம் வலுத்து , பலர் செத்து இப்பொழுது முடிவு கிடைத்திருக்கின்றது.
அந்த சிவசங்கரன் என்பவர் கடும் வயிற்றேரிச்சலில் இருந்திருப்பார் போல, அவருக்கு நல்ல செய்திகள் எல்லாம் கிடைகின்றன
ஏர்செல் அவரின் கம்பெனி அதை மிரட்டி வாங்கினார்கள், அது இன்று திவால்
இந்த ஸ்டெர்லைட் அவரின் கம்பெனி , அவர் வைத்த பெயர். பல சிக்கல்களால் வேதாந்தா எடுத்தது. இன்று அதுவும் காலி
இனி மீதம் இருப்பது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி
நாடார்களால் முன்பொரு காலத்தில் தொடங்கபட்து பின் சிவசங்கரனிடம் சிக்கியது. நாடார்களால் பெரும் போராட்டம் நடத்தி அது சிவசங்கரனிடம் இருந்து மீட்கபட்டது
இப்பொழுது அது நிமித்தம் தனக்கு ஏதும் நல்ல செய்தி வருமா? என சிவசங்கரன் எதிர்பார்த்துகொண்டே இருக்கலாம்….
ஆனால் மெர்கண்டைல் வங்கியின் இன்றைய பெரும் ஆதாரம் யார் என்றால் “தென்னகத்து அம்பானி” அண்ணாச்சி வைகுண்டராஜன் என்கின்றார்கள்
டாடாவிற்கே டாட்டா காட்டிய அண்ணாச்சியினை மீறி சிவசங்கரனுக்கு என்ன நல்ல செய்தி செல்லமுடியும் என்பதுதான் சவால்..