ஸ்டெர்லைட் போராட்டம் பற்றி கள நிலவரம்

இந்த ஸ்டெர்லைட் போராட்டம் பற்றி களநிலவரத்தை விசாரிக்கலாம் என்றால் பலமாதிரியான செய்திகள் வருகின்றன‌

இது உண்மையான மக்கள் எதிர்ப்பு , அவர்கள் 25 வருடமாக எதிர்த்துகொண்டே இருந்தார்கள் இப்பொழுது விரிவாக்கம் என்பதால் பொங்கிவிட்டார்கள் என்பது ஒரு செய்தி

இன்னொரு செய்தி வித்தியாசமாக சொல்கின்றது, இதெல்லாம் ஸ்டெர்லைட்டிடம் இருந்து பணம் பறிக்க சில கட்சிகளும் பின்னபிற கோஷ்டிகளும் செய்யும் நாடகம் 30% விரிவாக்க பணி முடிந்த நிலையில் ஸ்டெர்லைட்டுக்கு வேறு வழியில்லை, பெரும் தொகைக்காக நடத்தபடும் ஆட்டம் என்கின்றது இன்னொரு பட்சி

போராட்டத்தை நடத்துவது உள்ளூர் தொழிலதிபர் , பல நோக்கங்களுக்காக இது நடத்தபடுகின்றது என்கின்றது இன்னொரு செய்தி

பழனிச்சாமி ஏற்கனவே கையெழுத்து இட்டுவிட்டார், இனி டெல்லியின் மாசு கட்டுபட்டு வாரியமும் இன்னபிற மத்திய 
அரசு துறைகளுமே கையெழுத்திட வேண்டும், இது மத்திய அரசுக்கான மிரட்டல் என்கின்றது இன்னொன்று

இப்பொழுது எம்.எல்.ஏ யாரென்று பார்த்தால் திமுகவின் கீதாஜீவன், இவர்தான் ஸ்டெர்லைட்டின் பெரும் குத்தகை பணியாளர் என்கின்றார்கள், இனி எங்கிருந்து திமுக வாய்திறக்க?

இதில் முக ஸ்டாலின் ஸ்டெர்லைட்டை கண்டித்தாலும் கீதா ஜீவன் பெயர் வந்து விட வேண்டும் என்பதில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மகா ஆசை, உட்கட்சி பிரச்சினையும் உண்டு

தூத்துகுடி எம்பி யாரென தேடினால் சசிகலா புஷ்பா என்கின்றார்கள், அவர் ராஜ்யசபா எம்பி அல்லவா? அவரும் தேனிலவுக்கு போய்விட்டார் உங்கள் லோக்சபா எம்பி யாரென கேட்டால் அவர்களுக்கே தெரியவில்லை

கூகுளிடம் கேட்டால் ஏதோ நட்டார்ஜி பேனர்ஜி என பதில் சொல்கின்றது, இதென்ன கல்கத்தா காரர் தூத்துகுடியில் வென்றாரா என்றால் அவர் ஜெயசிங் நட்டர்ஜியாம், அதிமுகவில்தான் வென்றிருக்கின்றார்

அப்படி ஒரு எம்பி இருப்பதே தூத்துகுடி மக்களுக்கு தெரியவில்லை , கூகுள் சொல்லித்தான் உலகிற்கே தெரிகின்றது

அவர் அதிமுக எம்பி என்பதால் எதிர்பார்க்க என்ன இருக்கின்றது? அவர் என்ன எதிர்பார்ப்பில் இருக்கின்றாரோ? ஆக எம்பியும் காலி

நள்ளிரவில் யாரும் ஏதும் சொன்னால் கூட விடியற்காலம் சேவலுக்கு முன்பே எழும்பி குதிக்கும் தமிழிசையினை காணவில்லை என்பதுதான் ஆச்சரியம்

ஆக அம்மணிக்கு டெல்லியில் இருந்து ஏதோ சிக்னல் வந்ந்திருப்பது ஊகிக்க கூடியது

கமலஹாசன் வேறு வெற்றிலை பாக்கு வைத்து, சென்டை மேளம் அடித்து வரவேற்றால் வருவாராம்

வைகோ ஏன் வரவில்லை என்றால் வைகோவிற்கு மிக வேண்டியவர் இப்பொழுது ஸ்டெர்லைட்டில் மிக முக்கிய பொறுப்பில் இருப்பதால் கலிங்கபட்டி சிங்கம் அமைதி காக்கின்றதாம்

ஆளாளுக்கு பலவிதமான செய்திகள் சொல்கின்றார்கள், தலை சுற்றுகின்றது

ஆனால் மிக உறுதியாக ஸ்டெர்லைட் மூட அட்டகாசமான திட்டங்களை அவர்களே சொல்கின்றார்கள்

நிச்சயம் ஸ்டெர்லைட் வடநாட்டு நிறுவணம், இங்கிருப்பவர் உதவி இல்லாமல் அது இயங்க முடியாது

அதன் பணியாளர்கள் , அதற்கு லாரி ஓட்டுனர்கள், லாரி சொந்தக்காரர்கள் என எல்லோரும் தூத்துகுடிகாரர்கள்

வெளிநாட்டில் இருந்து தாமிர தாது ஏற்றிவரும் கண்டெய்னரை சுமக்கும் கப்பல் முதல், கப்பலில் இருந்து கண்டெய்னரை இறக்கும் லாரிகள் வரை உதவுவது எல்லாம் உள்ளூர்காரர்கள்

சுருக்கமாக சொன்னால் குடிநீர் முதல் அவர்கள் தாது கொண்டுவந்து தாமிரம் பிரித்து விற்பது வரை எல்லாம் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு

அவர்களும் இந்த நாசகார ஸ்டெர்லைட்டுக்கு உதவமாட்டோம், தூத்துகுடி நலம் முக்கியம் என கிளம்பினால் மறுநொடி ஸ்டெர்லைட் முடங்கும்

அதன்பின் அதற்கு பெட்டி கட்டுவதை தவிர வேறு வழி இல்லை

உண்மையில் யதார்த்தமும் இதுதான், உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பின்றி ஸ்டெர்லைட் ஒரு நொடியும் இயங்கமுடியாது

ஸ்டெர்லைட் கொட்டிகொடுக்கும் அந்த கோடிகணக்கான பணம் பெரிதா இல்லை சொந்த மக்களின் நலம் பெரிதா என ஸ்டெர்லைட்டோடு சம்பந்தபட்ட தொழிலாளர்கள் , தொழிலதிபர்கள் சிந்தித்து முடிவுக்கு வந்தாலே முடிந்துவிடும் விஷயம் இது

அவர்கள் திருந்தட்டும், இல்லையேல் போராட்ட குழுவினர் அவர்களுக்கு அதிர்ச்சி அளித்து திருந்த வைக்கட்டும்

அப்படி செய்தால் ஸ்டெர்லைட் போராட்டம் மாபெரும் வெற்றியாக அமையும்

அப்படி மிகபெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள்