ஸ்டெர்லைட் மூடபடட்டும்
ஸ்டெர்லைட் ஒன்றும் இத்தனை ஆண்டு காலம் அரசின் ஒத்துழைப்பின்றி இயங்கவில்லை ஆனால் மக்கள் எதிர்ப்பு 25 வருடமாக இருந்துகொண்டிருந்தான் இருந்தது
எந்த கட்சி கண்டுகொண்டது ஒரு கட்சியுமில்லை?
காரணம் எல்லா கட்சியும் ஸ்டெர்லைட்டின் கடைக்கண் பார்வையில் இருந்தன. இரு தலமைகள் தமிழ்நாட்டில் வலுவாக இருந்தவரை இருவரையும் “சமாளித்து” ஸ்டெர்லைட் நின்றது
அடிக்கடி உதிரி கட்சிகளையும் கவனித்தது
இப்பொழுது நேரடியாக மத்திய அரசின் மாநிலம் தமிழகம். இங்குள்ள கட்சிகளையோ, இல்லை உதிரி கட்சிகளையோ கவனிக்கும் அவசியம் அவர்களுக்கு இல்லை, ஒரே டீலிங் மத்திய அரசோடு மட்டுமே
தங்களுக்கு கொடுக்கபட்டுக்கொண்டிருந்த பெரும் கவனிப்பை ஸ்டெர்லைட் நிறுத்தினால் விடுவார்களா? வாய்பிற்காக காத்திருந்தார்கள்
மக்களும் இதை கணித்தார்கள், ஸ்டெர்லைட்டோ மாநில அரசு சும்மா, மத்திய அரசு தங்களை கைவிடாது என்ற நோக்கில் விஸ்தரிப்பில் இறங்கியது, மக்கள் களத்தில் இறங்கினார்கள்
விடுமா கட்சிகள்? ஸ்டெர்லைட்டை எச்சரித்து போலவும் ஆயிற்று பழனிச்சாமி அரசுக்கு செக் வைத்தது போலவும் ஆகிற்று வந்துவிட்டார்கள்
இந்நிலையில் இந்த புரட்சி செய்யும் கும்பல் சில யாருடைய கண்ணசைவிலோ உள்ளே புகுந்து கலவரத்தை எற்படுத்தி அப்பாவி மக்கள் சாவிற்கு காரணம் ஆயிற்று
விஷயம் உண்மை, ஸ்டெர்லைட் யாருக்கோ ஒருவருக்கு படிகட்ட மறுத்திருக்கின்றது. வாங்கி தின்றவர்களின் கண்கள் சிவந்திருக்கின்றன அதில் அப்பாவி மக்கள் பலர் கொல்லபட்டிருக்கின்றனர்
இதில் காவல்துறையின் கவனகுறைவும் உண்டு, உளவுதுறையின் தோல்வியும் உன்டு. காவல்துறை வேறு வகைகளை கையாண்டிருக்கலாம், முகத்தில் நெஞ்சில் சுட்டதெல்லாம் மாபெரும் குற்றங்கள்
ஸ்டெர்லைட் நிச்சயம் மூட்படவேண்டும் சந்தேகமில்லை, ஆனால் அதை வைத்து அரசியல் செய்யும் பல காட்சிகள் இங்கே நடக்கின்றன
அந்த ஸ்டெர்லைட்டை மூடமாட்டோம் என அரசும் அடம்பிடிப்பதும் நிச்சயம் நியாயம் இல்லை. தூத்துகுடி அமைதியாய் நலமாய் இருக்க அவர்களுக்கும் விருப்பம் இல்லை என்பதே உண்மை
இதில் சிலர் கிளம்பி இருக்கின்றான், பிரபாகரன் வழி, சேகுவாரே வழி இதுதான் ஸ்டெர்லைட்டை விரட்ட வழி என கிளம்புகின்றான்
இது மகா ஆபத்தான வழி
ஆயுதம் ஏந்துவது ஒன்றும் கஷ்டமல்ல, எங்கிருந்தெல்லாமோ கிடைக்கும். வீரப்பனுக்கே நடுகாட்டில் சங்கடமின்றி நவீன துப்பாக்கி கிடைத்த தமிழகம் இது
இத்தேசத்தில் குழப்பம் விளைவிக்க காத்திருக்கும் உலக நாடுகள் நொடியில் கொண்டு குவிக்கும், விஷயம் ஆயுதமல்ல
மாறாக அழிவு பேரழிவாகும், அது தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் முடிந்தது போல் முடியும்
சேகுவாரே புரட்சியாளன், ஆனால் ஆயுதத்தை விட மக்களை திரட்டினான். மக்களை திரட்டுவதே வெற்றி கொடுக்க்கும்
லெனினும், மாவோவும், ஹோசிமின்னும் , சேவும் மக்களை திரட்டினர், வெறும் ஆயுதங்களை மட்டும் நம்பி ஒன்றும் கிழிக்க முடியாது
அராபத் இதை அனுபவ பூர்வமாக உணர்ந்து கடைசி கட்டத்தில் இண்டிபாதா எனும் மக்கள் புரட்சியினை நடத்தினார், அதில்தான் இன்றைய உரிமைகள் சில கிடைத்தன
ஈழத்திலும் 20 லட்சம் தமிழ் மக்களும் களத்தில் இறங்கியிருந்தால் நடந்திருப்பது வேறு, ஆனால் பணம் மட்டும் கொடு மற்றதை நாங்கள் பார்த்துகொள்வோம் என புலிகள் வெறும் 10 ஆயிரம் பேர் துப்பாக்கியோடு நின்றதுதான் பேரழிவு
ஆயுதம் மேல் நம்பிக்கை வைத்த எந்த போராட்டமும் முழு வெற்றி பெறவே பெறாது
சே புரட்சியாளன் சந்தேகமில்லை, ஆனால் கியூபாவில் பெற்ற வெற்றியினை அவனால் காங்கோவில் பெற முடியவில்லை ஏன்?
அவன் என்ன சொன்னான் “காங்கோ மக்களுக்கு ஒரு மண்ணும் புரியவில்லை, அவர்களுக்கு சிந்தாந்தம் புரியவில்லை. அங்கு நான் இருந்து போராடினால் வெறும் ஆயுத சண்டையாக அழிவு தொடருமே அன்றி நிச்சயம் அமைதி திரும்பாது. உணர்ச்சி வேகத்தில் எடுக்கும் துப்பாக்கி வெற்றி கொடுக்காது”
காங்கோ விஷயம்தான் ஈழத்திலும் நடந்தது. இங்கும் அதுவே நடக்கும்
இங்கும் சில பதர்கள் புரட்சி அது இது என சொல்லிகொண்டிருக்கின்றன, வறுமை இருக்கும் இடத்திலேதான் புரட்சி எல்லாம் வரும்
வளர்ந்துகொண்டிருக்கும் எந்த இடத்திலும் புரட்சி புண்ணாக்கு எல்லாம் வராது, மானிட இயல்பு அது
மாற்றவே முடியாத அரசுகள் இருக்குமிடத்தில்தான் சில விஷயங்கள் பரீசிலக்கபட வேண்டியவை
இங்கு அது சிக்கலே அல்ல, தேர்தலில் அரசை தூக்கி எறியும் சக்தி மக்களிடமே இருக்கின்றது
ஆனால் செய்யமாட்டார்கள்
இவ்வளவு நடந்திருக்கின்றது, அடுத்து தேர்தலில் அங்கு யார் வெல்வார்கள் என நினைக்கின்றீர்கள்?
முன்பு ஸ்டெர்லைட்டை தடுக்காத இதே கட்சிகளில் ஒன்று
வாக்கு எனும் ஆயுதம் தன் கையில் இருப்பதை உணராத சமூகத்திடம் வா துப்பாக்கி தூக்கு, பிரபாகரன் சே வழிக்கு வா என சொல்வனை உடனே பிடித்து தலையில் சுடுவது நல்லது
உன் கையில் வாக்கு இருக்கின்றது என்பதை சொல்லாமல் உனக்கு ஒன்றுமில்லை வா துப்பாக்கி தூக்கு என சொல்வன் பெரும் ஆபத்தானவன்
பல்லாயிரம் பேரை தவறான பாதைக்கு அழைத்து கொல்ல இருக்கும் ஒரே ஒருவனை கொல்வது தவறு ஆகாது
அப்படியும் எவனாவது உண்மையான புரட்சியளன் என்றால் இல்லை, எல்லா பயலும் போலி, ஏதோ ஒரு சக்தி கண்ணசைக்க அந்த நேரத்தில் மட்டும் புகுந்து குழப்பம் விளைவிக்கும் கூலிப்படை
இங்கு ஆயுதமோ மாற்று வீபரீத சிந்தனைகள் எல்லாம் உடனே களைபட வேண்டியவை, அப்படி எவனாவது பேசினால் தூத்துகுடியில் 14வது பலி என தொடரலாம்
மக்கள் திரளா எந்த போராட்டமும் வெற்றி பெறாது, அமைதியாக திரளட்டும். மொத்த தமிழகமும் அவர்களுக்கு ஆதரவாய் அமைதி வழியில் திரளட்டும்
ஸ்டெர்லைட் மூடபடட்டும், அத்தோடு இந்த புரட்சி, பிரிவினை இன்னபிற வன்முறை வெறிகொண்ட மனித மிருகங்களையும் உள்ளே போட்டு மூட வேண்டும்