ஸ்ரீதேவி மரணத்தில் சர்ச்சை தொடங்கியாயிற்று…

Image may contain: one or more people

ஸ்ரீதேவி மரணத்தில் சர்ச்சை தொடங்கியாயிற்று, இந்தியா நீதிபதி லோயாவின் போஸ்ட் மார்ட்டம் போல் அல்ல, ஸ்ரீதேவி உடலின் ஆய்வு பல சந்தேகங்களை எழுப்பிவிட்டது

இந்தியா என்றால் நீதிபதி லோயா போல அவசரமாக புதைக்கலாம், அனால் துபாய் தங்கள் நம்பகதன்மையினை நிலைநாட்டுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பதால் சிக்கல் வந்துவிட்டது

சில்க் ஸ்மிதா, திவ்யா பாரதி போல ஸ்ரீதேவி மரணமும் இந்தியாவில் நடந்திருதால் முடிந்திருக்கும், துபாய் போலிஸ் தோண்டி துருவியதில் பல முடிச்சுகள் இருப்பது தெரிகின்றது, அவிழ்க்க பார்க்கின்றார்கள்

முதலாவது விஷயம் ஸ்ரீதேவி அந்த உறவினர் திருமணம் முடிந்தபின்னும் துபாயில் இருந்திருக்கின்றார் கனவர் போனி மட்டும் இந்தியா வந்துவிட்டு 4 நாட்கள் கழித்து சென்றார். அன்று இரவுதான் மரணம் நடந்திருக்கின்றது

ஸ்ரீதேவி ரத்த மாதிரியில் ஆல்ஹகால் இருந்திருக்கின்றது, இரவு 11.30 மணிக்கு அவர் இறந்திருக்கின்றார். ஆக பார்ட்டி முடித்துதான் இறந்தார் என்கின்றார்கள், போனியோ நான் சாப்பிட அழைத்தேன் அவர் குளிக்க சென்றார் என சொல்லிகொண்டிருக்கின்றார்

இரண்டாவது விஷயம் ஸ்ரீதேவி நீர் நிரப்பபட்ட குளியல் தொட்டியில் இறந்திருக்கின்றார் , நுரையீரலில் நீர் நிரம்பி மரணம் சம்பவித்திருக்கின்றது. ஆக நிரம்பிய தொட்டியில் விழுவதற்கு முன்னால் எப்படி நீர் நிரம்பியிருந்தது என்பது அடுத்த கேள்வி

இன்னும் பல விவகாரங்கள் எழுகின்றன, திட்டமிட்டபடி ஸ்ரீதேவி உடல் இன்று வருமா என்பதே கேள்விகுறி

போனிகபூரிடம் கடும் விசாரணை நடகின்றது, இந்திய தூதரக பணி ஸ்ரீதேவி பாஸ்போர்ட்டை ரத்து செய்ததுடன் முடிந்துவிட்டது

துபாய் போலிசாரின் விசாரணை பல கோணங்களில் செல்வதால் பரபரப்பு ஏற்பட்டாயிற்று

ஸ்காட்லாந்து போலிசுக்கு அடுத்த இடத்தை தமிழக போலிசிடமிருந்து துபாய் போலிஸ் பறித்துவிட்டது. துபாய் போலிசின் நேர்மையான விசாரணைக்கு உலகெல்லாம் இருந்து பாராட்டுகள் குவிகின்றன‌

தங்கள் நாட்டில் எல்லாமே சட்டபடிதான் நடக்கும் என மிக கம்பீரமாக சொல்லி தன் நம்பகதன்மையினை நிலை நாட்டுகின்றது துபாய்


ஸ்ரீதேவி மரணத்தை துபாய் போலிஸ் மகா துல்லியமாக விசாரிப்பதாக உலக செய்திகள் சொல்கின்றன‌

தமிழகத்திலும் முன்னாள் நடிகை ஒருவர் முதல்வராக இருந்து மர்மமாக மறைந்தார்

இனி துபாய் போலிஸ் அந்த மர்ம மரணத்தை விசாரிக்க வெண்டும் என பல குரல்கள் எழும்ப தொடங்கியிருக்கின்றன‌

இனி துபாய் போலிசுக்கு தமிழகத்தில்தான் வேலை, வருக துபாய் போலிஸ்.