ஹாவேர்டு தமிழ் இருக்கை
எதை செய்தாலும் அதில் ஆளாளுக்கு பலத்த சர்ச்சையும் கண்டனமும் இல்லாமல் ஒரு விஷயம் நடந்ததே இல்லை என்பது தமிழக விதி.
எந்த விஷயம் என்றாலும் ஒரு கோஷ்டி ஆதரிக்கும் ஒரு கோஷ்டி எதிர்க்கும், ஒரு கோஷ்டி கழுத்தை பிடிக்கும் இன்னொன்று காதை பிடித்து திருகும், ஒரு கோஷ்டி ஊர்வலம் போகும், ஒரு கோஷ்டி கோர்ட்டு போகும், ஒரு கோஷ்டி போஸ்டர் அடித்து ஒப்பாரி வைக்கும்
இப்படிபட்ட கலாச்சாரத்திலே மூழ்கிவிட்ட தமிழ் சமுதாயத்தில் இந்த ஹாவேர்டு தமிழ் இருக்கை விஷயம் மட்டும் அமைதியாக செல்வது பிடிக்குமா?
ஹாவர்டு அமெரிக்காவின் தனியார் கல்லூரி, அங்கு தமிழுக்கோர் அங்கீகாரம் கிடைத்தால் உலகளவில் தமிழுக்கு ஆராய்ச்சி முதல் பல விஷயங்களில் அனுகூலம் என சொல்லித்தான் இடம்பிடிக்க கிளம்பினார்கள்
அங்கு எந்த துணைவேந்தரோ தெரியாது, அவரும் வெறும் 40 கோடி கொடுங்கள் தமிழுக்கு சீட் கொடுத்துவிடலாம் என்றிருக்க்கின்றார்
இங்கும் எல்லோரும் தமிழ்காக்க நிதி கொடுத்து படமெடும் எடுத்து தொகையினை திரட்டியாயிற்று.
உண்மையில் சர்ச்சை வரும் இடம் இதுதான், உலகளாவிய பல்கலைகழகங்கள் , மிக முக்கிய கழகங்கள் எல்லாம் இவற்றை தானாக எடுக்குமே ஒழிய காசு கேட்காது
லண்டன் முதல் சீனா, ஜப்பான் வரை தமிழ் ஆராய்ச்சி உண்டு, தமிழை தேடி வந்த ஜப்பானியர் உண்டு. சீனாவில் தமிழ் செய்தி வாசிக்க தமிழ்படித்தோர் உண்டு (சீனா வல்லரசு கனவில் மிதக்கும் நாடு, எல்லா மொழிகளிலும் செய்தி உண்டு)
இப்படி உலக நாடுகள் எல்லாம் தமிழை தேடி சில அங்கீகாரம் கொடுத்தபொழுது இந்த ஹாவர்டு மட்டும் ஏன் காசு கேட்கின்றது என்ற்து எதிர் கோஷ்டி
ஹாவர்டு காசு கொடுத்தால் நாய்க்கும் டாக்டர் பட்டம் கொடுக்கும் என வரிந்து கட்ட தொடங்கியாயிற்று, ஹாவர்டு பயங்கரமானது, இனி தமிழ் ஆராய்ச்சி முடிவுகள் என திரித்து வெளியிடும் அது ஆண்டாள் செய்தி போல வரலாம், வைரமுத்து போன்றோர் எடுத்து கொண்டால் ஜீயர்கள் எல்லாம் சாக கிளம்புவார்கள்
இப்படிபட்ட ஆபத்தும் சுட்டிகாட்டபடுகின்றது
40 கோடி வசூல் நெருங்கிற்று என்றால் மாபா பாண்டியராஜன், அவருக்க்கு நன்கொடைக்கும் வசூலுக்கும் வித்தியாசம் தெரியவில்லை, அமைச்சரானால் எல்லாம் வசூல்தான், தொழில் வார்த்தை அப்படி
இப்பொழுது 40 கோடி கொடுத்து இருக்கை உறுதியாகும் நிலையில் சர்ச்சை வெடிக்கின்றது, அமெரிக்க வாழ் விஞ்ஞானியும் , கணினி இயக்க முறையில் ஒரு விஷயமான தகவல் அனுப்புதலை நானே இமெயிலாக மாற்றினேன் என சொல்லிகொண்டிருப்பவருமான சிவா அய்யாத்துரை எல்லாம் களத்திற்கு வந்தாயிற்று
ஏன் தமிழகத்திலே தமிழ் வளர்த்தால் என்ன என்கின்றார் அய்யாதுரை, நீர் தமிழகத்திலே விஞ்ஞான ஆராய்ச்சி செய்தால் என்ன? ஏன் அமெரிக்கா சென்றாய் என்கின்றது எதிர்கோஷ்டி
இனி என்னாகும்? கோஷ்டி சண்டைதான்
அமெரிக்க வாழ் தமிழர்கள் ஒன்று சொல்ல, ஈழ தமிழர் ஒன்று சொல்ல, தமிழக அறிவாளிகள் எல்லாம் பொங்க இனி 40 கோடியினை சுற்றி ஒரே அட்டகாசம் தொடங்கும்
இவ்விஷயத்தில் நாம் சொல்வது ஒன்றுதான்
நம்மை விட தமிழ்பற்றும் உலக விஷயமும் நிரம்ப பெற்றவர்கள் ஈழ தமிழர்கள். புலிகோஷ்டியினை விடுங்கள் மகா அற்புதமான தமிழரிஞர்கள், தமிழ் உணவாளர்கள், தீர்க்க தரிசனம் மிக்கவர்கள் எல்லாம் அவர்கள்தான்
ஆக ஈழ தமிழரில் சிறந்தவர்கள் இந்த ஹாவர்டு இருக்கைபற்றி என்ன முடிவிற்கு வருகின்றார்களோ அதனை ஏற்பதுதான் மிக சிறந்த முடிவு.
மாறாக இந்த சிவா அய்யாத்துரை போன்றவர்கள், தமிழக அல்ட்ராசிட்டிகள் எல்லாம் இவ்விஷயத்தில் விரட்டபட வேண்டிய கோஷ்டி
இவ்விஷயத்தில் அங்கிள் சைமன் இன்னும் மதில்மேல் பூனை, அவரை பொறுத்தவரையில் இந்த 40 கோடி அவருக்கு கிடைத்தால் எளிய தமிழ்பிள்ளைகள் மூலம் “இன விடுதலை” பெற்றுவிடுவார், அவ்வளவுதான்
பாருங்கள், “என்னடா கொடுமை இது, ஒரு இருக்கை, ஒரு சேர் அது தமிழுக்கு என ஒதுக்கபட வேண்டும். என்கிட்ட கேட்டா 100 சேர் வாங்கி கொடுப்பேன்.
எங்கள எவ்வளவு கேணபயலா நினைச்சா 1 சேர்40 கோடின்னு சொல்லுவ?
எண்டா எங்க அண்ணன் பிரபாகரன் இருந்தா இப்படி கேப்பியா? கேட்க ஆளில்ல உறவே, நாதி இல்ல ஒறவே” என அவர் விரைவில் முழங்கினாலும் முழங்கலாம்
இவர்களை விட்டு தொலைக்கலாம்
அறிவிற் சிறந்த தமிழறிவு மிக்க ஈழத்தோர் இந்த இருக்கைபற்றி சொன்னால் தயக்கமின்றி ஏற்போம்
ஹாவர்டுக்கு 40 கோடி கொடுத்தால் ஒரு இருக்கை கொடுத்து ஆராய்ச்சி எல்லாம் செய்வார்களாம்
சங்கம் ஏன் பொறுமையாக இருக்க வேண்டும்? ஒரு 400 கோடி கொடுத்து 10 குஷ்பு
சீட் வாங்கி தங்க தலைவியின் புகழை ஹாவர்டு மூலம் அவனி முழுக்க பரப்பினால் என்ன?
அட முடிந்தால் அந்த பல்கலைகழகத்தையே வாங்கி குஷ்பு பல்கலைகழகம் என பெயர்மாற்றம் செய்தால் என்ன?
உடனடியாக சங்க செயற்குழு கூடி இதுபற்றி முடிவெடுக்கவிருக்கின்றது.