ஹீலர் பாஸ்கர் என்பவருக்கு  கொடிபிடிக்கும் கூட்டம்

இந்த ஹீலர் பாஸ்கர் என்பவருக்கு  கொடிபிடிக்கும் கூட்டம் ஒரே சத்தம், பெரும்பாலும் யாரென பார்த்தால் தும்பிகளும் கொஞ்சம் சர்க்கரை வியாதி கோஷ்டிகளும்

தும்பிகள் ஒரு நாளும் சட்டம் ஒழுங்குக்கு வராது, சமூகம் அமைதியாய் இருப்பது அவர்களுக்கு பிடிக்காது, எவனாவது பிரபாகரன் போல் அரைகுறை யாரையாவது கொன்றுகொண்டே இருந்தால் கைதட்டிகொண்டே இருக்கும் கூட்டம் அது

அது இந்த ஹீலர் பாஸ்கர் எனும் அரைகுறைக்கு கைதட்டுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை, அவர்களின் சுபாவம் அது

இதில் சில தும்பிகள் என் வீட்டில் நான் சமைப்பது தவறா , என் வீட்டில் நான் கழிவறை செல்ல யாரிடம் அனுமதி வேண்டும் என சீறிகொண்டிருக்கின்றது

இந்த தேசத்திற்கு மட்டுமல்ல எல்லா தேசங்களுக்கும் அவர்களின் குடிமக்களையும் அவர்களின் உயிரையும் காக்கும் பொறுப்பு இருக்கின்றது

சாலை விதிகள் முதல் மருத்துவம் வரை இங்கு கட்டுபாடுகள் இருப்பது அதனால்தான், ஒவ்வொன்றிற்கும் உரிமம் என ஒரு நிபுணர் குழு உருவாக்கி வைத்திருப்பது அதனால்தான்

உதாரணம் சித்த வைத்தியம், நிச்சயம் அது தமிழர் மரபு சந்தேகமிலை ஆனால் அரசு ஏன் அதை கண்காணிக்கின்றது

சித்த வைத்தியத்தில் விஷத்தை மருந்தாக்க சில வழிகள் உண்டு, அனுபவமில்லாதவர் விஷ மருந்துகள் தயாரித்து பல உயிர்களை கொண்டுவிட கூடாது என்பதற்காக அரசு கடும் கட்டுபாடுகளை வைத்திருக்கின்றது

இதை மீறி இதுதான் சித்த மரபு சித்த வைத்தியம் என யாராவது கிளம்பினால் அரசு என்ன செய்யும் பிடித்து உள்ளேதான் போடும், அரச கடமை அது

ஹீலர் பாஸ்கர் விஷயத்தில் அரசு அதைத்தான் அரசு செய்திருக்கின்றது

எனக்கு ஸ்டியரிங் பிடிக்க தெரியும், எனக்கு கியர் மாற்ற தெரியும் வாருங்கள் டிரைவிங் கற்று தருகின்றேன் என்றால் அவனும் அவனின் கும்பலும் பலரை கொல்லாதா?

அதுதான் இதுவும்

ஹீலர் பாஸ்கர் என்வர் யார்? ஹீலர் எனும் பட்டம் அவனுக்கு யார் கொடுத்தது? ஐ.நாவா , அமெரிக்க பல்கலைகழகமா இல்லை லண்டன் பல்கலைகழகமா?

யாருமில்லை இவராக வைத்துகொண்டது.

அரைகுறை வைத்தியன் ஆபத்தானவன், அதிலும் வைத்தியமே அறியாத வைத்தியன் மிக மிக ஆபத்தானவன்

ஹீலர் பாஸ்கர் சர்க்கரை நோயினை விரட்டினார் என பல பக்த கோடிகள் பொங்கி கொண்டிருக்கின்றன‌

எந்த அங்கீகரிக்கபட்ட மருத்துவனும் சர்க்கரை நோயாளியின் உணவு அவன் சர்க்கரை அளவினை கூட்டும் அளவு சொல்வதில்ல்லை, சர்க்கரையினை குறைக்க என்ன‌ வழி உண்டோ அதைத்தான் சொல்கின்றார்

மரபு வழியினை மறந்தோம், மருத்துவத்தை மறந்தோம் இயற்கை வழிக்கு திரும்புவொம் என்பது எல்லா விஷயங்களிலும் சரிபட்டு வராது

அப்படி திரும்பினால் ஆடையின்றி அமேசான், அந்தபார் காட்டுவாசிகள் போல ஆகிவிட வேண்டியதுதான்

மின்சாரம் இல்லா , இணையமில்லா , விமானமில்லா, போக்குவரத்து வசதியில்லா உலகை நினைத்து பாருங்கள் வாழமுடியுமா?

இக்கும்பல் அந்த காட்டுவாழ்க்கைகே திரும்ப சொல்கின்றது

ஒரு விஷயத்தை மறந்துவிட்டு பலர் பாஸ்கருக்கு சப்பைகட்டு கட்டுகின்றனர்

அந்நாளைய மக்கள் தொகை எப்படி கட்டுக்குள் இருந்தது, வெள்ளையன் பரந்த இந்தியாவினை ஆளும்பொழுது அதன் மக்கள் தொகை என்ன?

வெறும் 5 கோடிக்குள் 1980களில் இருந்திருக்கின்றது எப்படி?

இரண்டே விஷயம், நோய்களும் பஞ்சமும் அப்படி மக்கள் தொகையினை கட்டுக்குள் வைத்திருந்தன, போர்கள் அதற்கு அடுத்த இடமே

கொள்ளை நோய்களும் பஞ்சமும் இந்திய மக்கள் தொகையினை அப்படி கட்டி வைத்திருந்தன, வெறும் 1 லட்சம் பேர் கொண்ட வெள்ளையன் இத்தேசத்தை ஆள அதுதான் காரணம்

புது புது மருந்துகள் வர வர நோய்கள் விடைபெற்றன, குறிப்பாக வெள்ளையர் காலத்தில் மருத்துவமனைகள் பெருக பிரசவகால மரணம் கட்டுபடுத்தபட்டது

விஞ்ஞான வளர்ச்சி அணைகளை கட்டி, விவசாயத்தில் விளைச்சலை பெருகின்ற்று, ரசாயாண உரங்கள் என அலறினாலும் அது கொடுத்த விளைச்சல்தான் இங்கு பசி போக்கிற்று

கொஞ்சம் கொஞ்சமாக நோயும் , பஞ்சமும் நவீன விஞ்ஞானத்தாலும் நல்ல விளைச்சலாலும் விரட்டபட மக்கள் தொகை அதிகரித்தது

1930களில் முப்பது கோடி முகமுடையாள் என பாடுகின்றார் பாரதி, அது பரந்த இந்தியா

1960கலள் நாற்பது கோடி மாந்தர் என பாடுகின்றார் கண்ணதாசன் அது பிரிந்த இந்தியா

இன்று 110 கோடி மக்களோடு இத்தேசம் எழும்பி நிற்கின்றது என்றால் எப்படி?

நவீன மருத்துவமும், விவசாயமுமே அன்றி வேறல்ல‌

கடந்த பாதையினை திரும்பி பார்த்தால் இதெல்லாம் தோன்றும், அது தெரியாபதர்கள் ஏதோ ஹீலர் பாஸ்கர் கிழித்துவிட்டான் என கத்திகொண்டிருக்கின்றன‌

சித்தர்களும், அகத்தியரும் போகரும் சொல்லாத எதையும் பாஸ்கர் சொல்லவில்லை

ஆசார கோவை என பண்டைய இலக்கியம் சொல்லாததை பாஸ்கர் சொல்லவில்லை

நிச்சயம் அவை நம் அஸ்திவாரம், அதின்மேல் விஞ்ஞானத்தை கலந்தால் என்ன தவறு

ஆனால் அஸ்திவாரம் எப்படி அடிபட்டு போனது, ஏன் பண்டை செய்யுளை நாம் படிக்கவில்லை, இத்தலைமுறை எப்படி அதை படிக்காமல் போனது

அந்த செய்யுள் எல்லாம் கடவுளை பற்றியும் சில சாத்வீக முறைகளையும் போதிப்பவை

பின்னாளில் வந்த நாத்திக கட்சிகளுக்கு அதை மறைக்கும் அவசியம் வந்தது, திருகுறளை முன்னிலைபடுத்திவிட்டு அவற்றை புறம் தள்ளினார்கள்

திருக்குறளில் கூட மருத்துவ வழி உண்டு அதை சொல்லாமல் தவிர்த்தார்கள்

ஆக தவறு பல இடங்களில் உண்டு, மறுக்கமுடியாது

நம் கலாச்சாரமும் பண்பாடும் ஆழ்ந்த மருத்துமுறைகளையும் மறந்துவிட்ட் கூட்டம் பாஸ்கர் என்பவனை கொண்டாடிகொண்டிருகின்றது பரிதாபம்

நம்மாழ்வார் என்றொருவர் இருந்தார், பழமையினை மீட்டெடுப்பதில் அவருக்கு இருந்த அக்கறை எவனுக்குமில்லை ஆனால் எல்லை எது என அவருக்கு தெரிந்திருந்தது

நான் பழமையினை மீட்டெடுப்பேன் என பலரை கொல்ல அவர் தயாரில்லை, எதில் சோதிக்க கூடாது என்பது அவருக்கு தெரிந்திருந்தது

இந்நாட்டில் சட்டம் ஒழுங்கினை பாதுகாக்க காவல்துறையும், நீதிமன்றமும் உண்டு அதுவே இங்கு அமைதியான வாழ்வுக்கும், மக்களின் அமைதிக்கும் வழி

அதையே 4 குண்டர்களை சேர்த்து நான் நீதிகொடுப்பேன் என ஒருவன் கிளம்பினால் என்னாகும், அதுதான் கட்டபஞ்சாயத்து

ஹீலர் பாஸ்கர் என்பவன் செய்தது மருத்துவ கட்டபஞ்சாயத்து, அவனை பிடித்து உள்ளே போட்டிருப்பதில் தவறேதுமில்லை

200 ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்த கொடிய நோய்களை விரட்டி இன்று மக்கள் தொகையினை பெருக்கி காத்து கொண்டிருக்கின்றது விஞ்ஞானம்

மறுபடியும் இந்திய மக்கள் தொகையினை அதே சில கோடிகளுக்கு கொண்டு செல்ல இந்த ஹீலர் பாஸ்கரும் அவரின் கூட்டாளிகளும் ஆசைபடுகின்றார்கள், அதை எந்த அரசு ஒப்புகொள்ளும்?