வெரி ஃபன்னி லேடி …..
பன்னீர் ஆட்சிக்கு வந்தாலும் சசிகலா கும்பல் ஆளவிடாது, கவிழ்க்க வழிதேடும்
சசிகலா ஆளவந்தாலும் பன்னீர் கும்பல் எப்பொழுது கவிழ்க்கலாம் என சிந்திக்கும், இன்னொன்று 119 பேருக்கும் அமைச்சர் பதவி, இதர பதவிகள் என்றால் போலிஸ் கமிஷணர் பதவி தவிர எல்லா இடத்திலும் சசிகலா ஆதரவு எம் எல் ஏக்கள் நிறைந்திருப்பார்கள்
அது யதார்த்ததிற்கு சரிவராது, ஆனால் அதிருப்தி கும்பல் விடாது
ஆக நிலையான ஆட்சி இருவருக்குமே சாத்தியமில்லை
எனவே ஆளுநர், வெற்றிலை துப்பிவிட்டு “இனி தேர்தல் தாண்டா முடிவு, அதுவரை ஜனாதிபதி ஆட்சிடா, இது நாட்டாமையோட தீர்ப்புடா” என துண்டை உதறி தோளில் போட்டுவிட்டு பம்பாய்க்கு பறப்பதுதான் தமிழகத்திற்கு நல்லது
அம்மாவின் சமாதியில் ஒரு ஈர்ப்பு சக்தி என்னை அங்கிருந்து போக விடாமல் இழுத்தது : சசிகலாவின் தகவல்
பன்னீர் முதல்வராகட்டும், நீ என்னோடே இரு அதுதான் உனக்கான இடம் என ஜெயா ஆவி சொல்லி இழுத்திருக்கின்றது
போயஸிலிருந்து போகவிடாமல் தடுக்காத ஜெயா ஆவி, கூவத்தூர் செல்லும் பொழுது தடுக்காத ஜெயா ஆவி, ஆளுநரை பார்க்க போகும் பொழுது தடுக்காத ஆவி,…
கல்லறையினை விட்டு செல்லும் பொழுது ஈர்த்தால் என்ன அர்த்தம்???
அங்கே இருக்க சொல்கின்றது, இனி விடவே விடாது என அர்த்தம்
அது புரியாமல் இந்தம்மா ஏதேதோ சொல்லிகொண்டிருக்கின்றது.
வெரி ஃபன்னி லேடி..