145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது அமெரிக்கா

145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது அமெரிக்கா : செய்தி

சட்டவிரோதமாக நாட்டில் குடியேறுபவர்களை எந்த ஒரு நாடும் அனுமதிக்காது, சில நாடுகள் நாகரீகமாக வெளியேற்றும்.

சிலவை தண்டனை கொடுத்து தண்டித்து அனுப்பும்

மலேசியா அதில் நல்ல நாடு, பொதுமன்னிப்பு என வழங்கி கவுரவமாக அனுப்பிவிடுவார்கள், பொது மன்னிப்பு வாங்கிவிட்டு தப்பி செல்பவன் பின்னும் ஏதாவது உருவில் வருவான் அதே போல் கள்ள குடியேறியாக இருப்பான்

அரசு மறுபடியும் பொதுமன்னிப்பு வழங்கி அனுப்பிவிடும், அவன் திரும்பவும் வருவான்

எல்லா நாடுகளும் அப்படி அல்ல மென்போக்கு அல்ல‌, ஐரோப்பா போன்றவை வலிக்காமல் அடிக்கும், அமெரிக்கா இப்பொழுது இந்த கடும் முறைக்கு மாறிவிட்டது

இதுவே இன்னொரு நாடு செய்தால் மானிட குலத்துக்கே பாடம் நடத்தும் அமெரிக்கா. ஆனால் அவர்கள் செய்தால் எல்லாம் நியாயம். வல்லவன் வகுத்ததே நாகரீகம்

இந்தியா இதை செய்யத்தான் குடியேற்ற கணக்கு எடுக்கின்றது, கள்ளகுடியேறிகள் அடையாளம் காணபட்டபின் அவர்களை சம்பந்தபட்ட நாடுகளுக்கு அனுப்புவார்கள்

இது உலக நடைமுறை, எல்லா நாடுகளும் செய்யும், அதைத்தான் இந்தியாவும் செய்கின்றது