18.5.2009 என்ற தமிழ் திரைப்படம் …
புலிகள் மொத்தமாய் அழிந்த சம்பவத்தை கொண்டு 18.5.2009 எனும் படம்தயாரிக்கபட்டிருக்கின்றது
லண்டனில் டிரெய்லர் வெளியிட்டு விட்டார்கள், தமிழகத்தில் மே 18ல் படம் வரும் என்கின்றார்கள்
படத்தில் என்ன இருக்கும்? நாம் வீராதி வீரர்கள் , நம் வீரம் பொறுக்காமல் உலகம் நம்மை வீழ்த்திவிட்டது என்ற அதே ரீல் இருக்கும் வேறு ஒன்றும் இருக்காது
இந்தியா நம்மை அழித்துவிட்டது என்ற வசனம் இருக்கலாம், ஆனால் இந்தியாவிற்கும் அவர்களுக்கும் என்ன தகறாறு என்பதெல்லாம் வராது
உலக அரசியல் நிலையோ, வல்லரசு ஆதிக்கமோ பற்றி எல்லாம் ஒருவார்த்தையும் பேசியிருக்கமாட்டார்கள்
இந்த படம் கலைஞரை தாக்கி 4 வரி இருந்தால் தமிழகத்தில் வெளியிட பழனிச்சாமி அரசு சம்மதிக்கும், காங்கிரசை போட்டு தாக்கியிருந்தால் பாஜகவும் குஷியாகும்
ஆனால் இப்போது இருக்கும் நிலையில் இப்படம் இங்கு வெளிவர வாய்ப்பில்லை என்றே தெரிகின்றது
எனினும் இந்நாள் வரை படத்தை வெளியிடாதே, எதிர்ப்பு என்ற குரல்கேட்ட தமிழகத்தில் படத்தை வெளியிடு என்ற குரல் கேட்கலாம்
ஆனால் அங்கிள் சைமன் ஆமைகறி தின்ற காட்சி படத்தில் இல்லை என்றாலும் வைகோ சாயல் சில இடங்களில் வருகின்றது என்கின்றார்கள், இனி எங்கிருந்து தும்பிகள் படத்தை வரவேற்பார்கள்?
படம் உண்மை சம்பவம் என சொல்லிகொள்கின்றார்கள், ஆனால் பிரபாகரனின் முடிவு பற்றி ஒரு தகவலும் இல்லையாம்
பின் எங்கிருந்து அது உண்மையான படம்?
உண்மையான கதையினை ஒரு நாளும் எடுக்கமாட்டார்கள், அது அப்படித்தான்
ஒருவேளை புலிகளின் உண்மை முகத்தை படமாக எடுத்திருந்தால் அப்படம் வெளியீடு கண்டிருக்கும்?
நிச்சயம் இல்லை
படம் சிக்கலின்றி வெளிவந்ததிலே தெரிகின்றது படம் சொல்லி இருப்பதெல்லாம் பொய் என்று
ஆக தமிழகத்தில் இன்னொரு பரபரப்பு விரைவில் இருக்கின்றது
ஏம்பா திருமுருகா , இங்கே மே 18தான் அழிவு நடந்த தினம் என கிளம்ப நீர் ஏன் பங்குனி 17 என கொடிபிடிக்கின்றீர்
உடனே உமது இயக்கபெயரை பங்குனி 18 என மாற்றும்
எந்த நாள் நடந்தது என தெரியாமலே அதன்பெயரில் இயக்கம்..