1885ல் இதே நாளில் தொடங்கியது காங்கிரஸ்….
அந்த மனிதன் ஆங்கில ஐ.சி.எஸ் அதிகாரி. கலெக்டராகத்தான் இந்தியா வந்தார் அவர் 1850ல் தன் பணியினை உத்திரபிரதேசத்தில் தொடங்கினார். அவர் செய்த முதல் வேலை நல்ல பள்ளி ஒன்றை அமைத்தது
அவர் கலெக்டராக இருந்த காலத்தில்தான் 1857ல் சிப்பாய் கலகம் ஏற்பட்டது, அதன் முடிவில் கிழக்கிந்திய கம்பெனியின் இந்தியா, பிரிட்டிஷ் அரசின் கட்டுபாட்டில் வந்தது. பிரிட்டிஷ் இந்தியா ஆனது
பிரிட்டிஷ் அரசு கடுமையான சட்டங்களை கொடுத்தது, 1859ல் இந்தியருக்கு கல்வி கூடாது என்றொரு கட்டளையினை பிறப்பித்தது, விக்டர் ஹியூம் அதனை கடுமையாக எதிர்த்தார், அவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள், கல்வி கொடுத்து மாற்றினால் மட்டுமே பிரிட்டிஷ் அரசோடு ஒத்துழைப்பார்கள் என மல்லுக்கு நின்றார்
ஆங்கில அரசு மதுகடைகளை அன்று பரப்பியது, ஹியூம் அதனை கடுமையாக எதிர்த்தார், இது ஏழைகளை பாதிக்கும் செயல் , ஒரு கலெக்டராக நான் அனுமதிக்கமாட்டேன் என்று போர்கொடி தூக்கினார்
ஆங்கிலேய அரசுக்கும் அவருக்கும் மோதல்கள் வெடித்தன, ஆனாலும் சில நல்ல வைஸ்ராய்கள், ரிப்பன் போன்றவர்கள் அவருக்கு ஆதரவளித்தனர். இந்தியாவில் நமது ஆட்சி நிலைக்க வேண்டுமென்றால் அம்மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற கொள்கையுடைவர்கள் அவர்கள்
அப்படிபட்ட நல்ல வெள்ளை அதிகாரிகள் இருந்தார்கள், அதனால்தான் ரிப்பன் மறைந்த பின்னும் சென்னையில் கட்டபட்ட கட்டத்திற்கு அவர் பெயரை வைத்தார்கள்,அது இன்றும் ரிப்பன் பில்டிங் என்றே அழைக்கபடுகின்றது, நல்ல வேளையாக அண்ணா நினைவகம், ராமசந்திரன் நினைவகம் என மாற்றம் பெறவில்லை
அந்த ரிப்பன் இந்த ஹியூமினை ஆதரித்து விவசாயம் , கல்வி போன்ற பணிகளை ஒப்படைத்தார், ஹியுமும் இந்திய மக்களுக்கு பெரும் பணி புரிந்தார், பல விஷயங்கள் அவரால் சாத்தியமாயின மக்கள் கொண்டாடினர்
ரிப்பன் இந்தியாவின் மிக சிறந்த வெள்ளை நிர்வாகிகளில் ஒருவர், அன்று இருவேறு சட்டம் இருந்தது. அதாவது ஐரோப்பியரை ஐரோப்பிய நீதிபதிதான் விசாரிப்பார் அவர் என்ன குற்றம் செய்தாலும் சரி, ஆனால் இந்தியரை யார் வேண்டுமானாலும் விசாரிக்கலாம்
இந்த நீதிபாகுபாட்டினை மாற்ற பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலே புயல் எழுப்பியவர் ரிப்பன், இந்தியர்கள் நம் குடிமக்கள் நம்மில் ஒருவர், அவர்களுக்கு ஏன் பாகுபாட்டு சட்டம்? என அவர் கேட்டது பிரிட்டிசாருக்கு பிடிக்கவில்லை, மாற்ற முடியாது என்றனர்
மனம் உடைந்த ரிப்பன் பதவியினை தூர எறிந்துவிட்டார், என் மனசாட்சிக்கு விரோதமான பணியினை நான் செய்ய முடியாது, இந்திய மக்களுக்கு என்னால் பாகுபாடு காட்ட முடியாது என் இறுதிவரை நின்றார்
அந்த ரிப்பன் சென்றபின் லிட்டன் என்பவர் வந்தார், அவர் இந்தியாவினை வளப்படுத்துவது வீண் செலவு என்றும், பிரிட்டிஷ் அரசின் வருமானமே முக்கியம் என்று பொறுப்பாக இருந்தவர், ஹியூமுக்கும் அவருக்கும் ஒத்துவரவில்லை
இந்நிலையில் பெரும் பஞ்சம் தாக்கிற்று அன்றைய இந்திய மக்கள் தொகையே சில கோடிதான், அதில் 1 கோடிபேர் மாண்டனர், ஆனால் லிட்டன் அதுபற்றி கவலையே இன்றி ஆங்கில அரசின் வருமானம் பற்றியே கவலைபட்டார்
ஆனால் ஹியூம் வேறுமாதிரி சொன்னார், வற்றா ஆறுகள் ஓடும் தேசமிது, என்னிடம் திட்டமிருக்கின்றது அதை செயல்படுத்தினால் இந்நாடு செழிக்கும் மக்கள் வளமாவார்கள், வளமானால் நமக்குத்தான் லாபம் என்று சொல்லிபார்த்தார், லிட்டனின் பிடிவாதமே வென்றது
(இந்த சாயலில் லிங்கா படத்தில் ஒரு காட்சி வரும், தமிழக இயக்குநர்கள் சாதாரணம் அல்ல, வரலாற்று உண்மைகளை சில காட்சிகளில் சொல்லத்தான் செய்வார்கள், நாம் தான் உணர மாட்டோம்)
விளைவு ஹியூம் சாதாரண கிளர்க் போன்ற உதவாக்கரை பணிக்கு தூக்கி எறியபட்டார், மக்கள் அழுதனர். கதறினர்
அப்பொழுது ஒரு விஷயத்தை உணர்ந்தார் ஹுயூம், இம்மக்களுக்கு உரிமை கேட்கும் உணர்வு இருக்கின்றது ஆனால் மொத்தமாக இயக்கம் இல்லை, இவர்கள் பெரும் எண்ணிக்கை மக்கள், பிரிட்டிசாரோ கொஞ்சம்தான். இவர்களை இணைத்தால் , இவர்கள் ஒரே சக்தியாக எழுந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் என எண்ணினார்
அப்படி அவர் தொடங்கியதுதான் காங்கிரஸ் இயக்கம், 1885ல் இதே நாளில் தொடங்கியது
அதன் நோக்கம் அன்று விடுதலை அல்ல, மாறாக இந்தியருக்கு அதிக உரிமை வாங்கி தருவது
இதில் பலர் இணைந்தார்கள், அதில் சென்னை கணபதி அய்யரும் ஒருவர். அவர்தான் இயக்கத்திற்கு செய்தி தாள் வேண்டுமென்று பின்னர் சில ஆண்டுகளில் தொடங்கியதுதான் இந்து பத்திரிகை, சுதேச மித்திரன் போன்ற பாரதியார் எழுதிய வாரபத்த்ரிகை
இப்படியாக ஹியூம் தொடங்கிய காங்கிரஸ் பெரும் இயக்கமானது , அது பிரிட்டிசாரோடு பேச்சு நடத்தி உரிமைகளை பெற தொடங்கியது, பிரிட்டிஷ் ஆட்சிக்கு தலைவலியினை தொடங்கி வைத்தது
அன்னிபெசன்ட் போன்றோர் எல்லாம் ஆதரவு அளித்தனர்
பின் அதில் மிதவாதிகள், கடும்போக்குடையோர் இடையேயானோரிடைய கருத்துவேறுபாடுகளும் தோன்றி விடுதலையினை குறி வைத்தது, ஆனால் பிரிட்டன் அரசு மிக கடுமையாக நடந்து வஉசி போன்றோரை எல்லாம் அடக்கி வைத்து விடுதலை சாத்தியமில்லை என சொன்னது
காந்தியின் வருகை பின் பெரும் உற்சாகமாக காங்கிரஸ் இயங்கியது, அவரின் தலமையில் 30 கோடி இந்தியரும் திரண்டனர், பின்னர் விடுதலையும் கிட்டிற்று
காந்தி என்ன சொன்னார் என்றால், அன்று சேவாதல் போன்ற தொண்டர்கள் காங்கிரஸ் இருந்தது, அதில் சிலர் வேறு கொள்கைகளை கொண்டிருந்தனர், இதனால்தான் காந்தி சொன்னார், சுதந்திரத்திற்கு பின் காங்கிரசில் பல மாற்றங்கள் செய்யபட வேண்டி இருக்கின்றது
மற்றபடி காங்கிரஸ் கட்சி கலைக்கபட்டு எல்லோரும் ஆளாளுக்கு ஒரு மூலையில் அமருங்கள் என சொல்லவில்லை
இந்தியரின் உரிமைக்காக அந்த ஹியூம் தொடங்கியதுதான் காங்கிரஸ், இந்தியரின் உணர்ச்சியினை தெரிந்து நமக்காக ஒரு ஆங்கில கலெக்டர் தொடங்கி வைத்ததுதான் இவ்வியக்கம்
ஆனால் இந்தியர் அதனை சிக்கென பிடித்தனர், எத்தனையோ தியாக தலைவர்களை கொடுத்தது, அவர்களின் தியாகம் மிக பெரிது
சுதந்திரத்திற்கு பின் இந்நாட்டில் பெரும் சக்தியாக அது ஆண்டது நேரு, சாஸ்திரி, காமராஜர், கக்கன் என பெரும் தியாக சுடர்களை காங்கிரசினை தவிர வேறு எந்த கட்சியிலும் காட்ட முடியாது
காந்தி, இந்திரா, ராஜிவ் போன்று நாட்டுக்காக உயிர்கொடுத்த தலைவர்களையும் வேறு கட்சியில் நினைத்தும் பார்க்க முடியாது
காங்கிரசின் பாரம்பரியமும், அதன் தியாகமும் காலம் கடந்து நிற்பவை, அவை எல்லாம் பெரும் கால கல்வெட்டுகள்
இன்றும் பாருங்கள் காங்கிரஸின் எதிர்கட்சி என தன்னை சொல்லிகொள்ளும் பாஜக ஆள்கின்றது, அது மதவாத கட்சி என்றால் அவர்களே சிரிப்பார்கள், மதவாதம் அவர்களின் வோட்டே தவிர வேறு ஒன்றும் அல்ல, ஆனால் ஆட்சிக்கு வந்தாயிற்று, எப்படி ஆள்கின்றார்கள் என்றால் உங்களுக்கே தெரியும்
ஆக இத்தேசத்தை வழிநடத்தவும், காக்கவும், வளம்பெற செய்யவும் ஒரே தேர்வு காங்கிரஸ் கட்சி என்பதே. ஒருங்கிணைந்த இந்தியாவாக இதனை வழிநடத்தி, இந்தியாவினை முன்னேற்றம் செய்யும் கடப்பாட்டினை அது கொண்டிருக்கின்றது
ஹியூம் காலத்தில் தொடங்கபட்ட காங்கிரஸ் 132 ஆண்டுகளாக எத்தனையோ தலைவர்களால் வழிநடத்தபட்டு இன்று ராகுல் தலமையின் கீழ் வந்திருக்கின்றது
நேரு காலத்தில் இருந்த அதன் பொற்காலத்தை ராகுல்காலத்தில் அக்கட்சி மீட்டெடுக்க அதன் நிறுவண நாளில் வாழ்த்துக்கள்