1965களில் காமராஜர் சொன்ன வார்த்தைகள்

Image may contain: one or more people

விவசாயிகள் தற்கொலை தொடர்கின்றது, இன்றும் ஒருவர் பலி

“ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி கொடுண்ணு திமுக காரன் எல்லாம் சொன்றாண்ணேன்.. அப்படி குடுக்க முடியுமாண்ணேன்..”

அப்படி விலையில இலவசமா குடுத்தா விவசாயி ஈரமண்ணையா அள்ளி திம்பாம்ண்ணேன்…

விவசாயிக்கு நிறைய மானியம் குடுத்துட்டுத்தான் அரிசி விலையில கைவைக்கணும்ணேன், விவசாயி கஷ்டம் எனக்கும் தெரியும்ணேண்..

நாடு வளரணும், விவாயிக்கு நிறைய செஞ்சிட்டு, அவன வாழ வச்சா அவன் நாட்ட வாழ வைப்பாம்ண்ணேன், அதுக்கு இன்னும் நிறைய திட்டம் தீட்டணும்ணேன்..

அரைகுறையா அரசியலுக்காக அரிசி பத்தி பேசாதீங்கண்ணேண்.. அது விவசாயிய கொன்னுறும்ணேண்….”

அன்று 1965களில் காமராஜர் சொன்ன வார்த்தைகள் இன்று நிஜமாகி கொண்டிருக்கின்றன‌

எவ்வளவு தீர்க்க தரிசனமாக உரைத்திருக்கின்றான், விவசாயிக்கு ஒன்றும் கொடுக்காமல் டாஸ்மாக் பணத்தில் இலவச அரிசி கொடுத்தால் என்ன நடக்கும் என கண்ணார பார்த்துகொண்டிருக்கின்றோம்

அந்த மனிதனை நினைத்து கண்ணீர் சிந்த தோன்றுகின்றது, அப்படியும் ஒரு தலைவன் இம்மண்ணில் இருந்திருக்கின்றான்..

தமிழகம் அடையும் ஒவ்வொரு துன்பத்திலும் அம்மானிதனை புறக்கணித்த‌ அவலத்தை நினைத்து தமிழகம் வருத்துகின்றது

இதுதான் காமராஜரின் வெற்றி

இப்படி விவசாயினை நினைத்து அழுத தலைவனை விட்டுவிட்டு “விவசாயி” படம் நடித்த எம்ஜிஆரை கொண்டு அமர்த்தினால் என்னாகும்?

பார்த்துகொண்டே இருக்கின்றோம்..