1980களில் டி.ராஜேந்தர் அதிரடியாக பேசிகொண்டிருந்தார்
1980களில் டி.ராஜேந்தர் அதிரடியாக பேசிகொண்டிருந்தார். ராமசந்திரன் என்பவரின் மறுபக்கம் மிக இறுக்கமானது என்ற பேச்சுக்கள் வந்த நேரம் அது
கங்கை அமரனை மிரட்டியது , ரஜினியினை சீண்டியது என திரையுலகத்தை மிரட்டி ஒடுக்கி வைத்து தமிழகத்தை மகா இறுக்கமாக வைத்திருந்தார் ராமசந்திரன்
அப்பொழுது டி.ஆர் மிக துடிப்பாக பேசினார். உண்மையில் மகா தைரியமான பேச்சுகளாக அப்பொழுது கருதபட்டது. அதிரடி கேள்விகளை எழுப்பினார். திமுகவின் தொண்டராக குதித்துகொண்டிருந்தார் டி.ஆர்
அவரை பற்றி அதிமுகவின் முக்கிய கூட்டமுடிவில் அவர்களிடம் கேட்டார்கள், ராஜேந்திரன் இப்படி எல்லாம் கேட்கின்றாரே? உங்கள் பதில் என்ன?
காளிமுத்து சொன்னார், சீமானின் மாமனரான அதே காளிமுத்து ” கருணாநிதி இப்பொழுது ஆளில்லாமல் ஒரு கரடியினை கூட்டி திரிகின்றார் அதற்கெல்லாம் பதில்சொல்லமுடியாது”
அருகிருந்த ராமசந்திரனுக்கு சிரிப்பு தாளவில்லை
அந்த ராமசந்திரன் படத்தை வைத்து கட்சி வளர்க்க போகின்றாராம் டி.ஆர்
கட்சியின் பெயர் “அய்யம்” என இருந்தால் இன்னும் நல்லது