1998-லே கோமாளிகள் ஆட்சி என கலைஞர் சொன்னாரென்றால் ….
கையில் சில புத்தகங்கள் கிடைத்துவிட்டால் அதனை தவிர சந்தோஷமான விஷயம் இருக்க முடியாது
அப்படி கலைஞர் பேட்டிகள் அடங்கிய புத்தகம் ஒன்று கிடைத்திருக்கின்றது, படிக்க படிக்க புத்துணர்ச்சி. சுகமான சிந்தனைகள்
அதில் 1998ல் கேட்கின்றார்கள். நேரு முதல் இக்காலம் வரை நீண்ட பயணம் செய்திருக்கின்றீர்கள்? எப்படி உணர்கின்றீர்கள்
கலைஞர் சொல்கின்றார்
“என் நீண்ட ஆயுள் என்பது எப்படி வரமோ அப்படி சாபமும் மிக்கது, இந்த நீண்ட ஆயுள் இருப்பதால்தானே நேரு, சாஸ்திரி, காமராஜர், ஜெயபிரகாஷ் நாராயண் , இந்திரா போன்ற பெரும் ஜாம்பவான்களோடு அரசியல் செய்த நான் சில கோமாளிகளோடும் அரசியல் செய்ய வேண்டி இருக்கின்றது”
ஆக 1998லே கோமாளிகள் ஆட்சி என சொன்னாரென்றால் இன்றைய நிலமையில் என்ன ஆகியிருக்கும்?
கோமாளித்தனத்தில் சிறந்தது மத்திய அரசா? மாநில அரசா என பட்டிமன்றம் நடத்தவேண்டிய சூழலில், இந்த படுகோமாளிகளின் அழிச்சாட்டிய காலத்தில் அவர் அமைதியாக இருப்பது அவருக்கு நல்லதே.