2 லட்சம் காரட் வைரம்????
திமுக ஸ்பெக்டரமில் 2 லட்சம் கோடி ஊழல் என சொன்னது எவ்வளவு அபத்தமோ அப்படி 3 லட்சம் கோடி வைரம் என கிளம்பிவிட்டார்கள்.
அதுவும் 2 லட்சம் காரட் வைரமாம், இதுதான் காமெடியிலும் காமெடி
உதாரணமாக விஜயகாந்த் கட்சி சீனாவின் செஞ்சேனை போல உலகை வெல்லும் அளவு வலுவானது என்றால் சிரிக்கமாட்டோமா? அப்படித்தான் விஷயம்
விற்பனைக்கு வரும் பெரிய வைரங்களேஒரு பெரும் வைரத்தின் அளவே 20 காரட்டை தாண்டாது, இவர்களோ ஊட்டி காரட் மூட்டை அளவு பேசிகொண்டிருகின்றார்கள்
புகழ்பெற்ற வைரங்களே சில நூறு கேரட்டுகளை தாண்டாது
(படத்தை பாருங்கள் புரியும்..)
ஆனால் ஒருவிஷயம் உண்மை, பெருவாரியான மதிப்பு வாய்ந்த வைரங்கள் எங்கோ விலைபேசபட்டிருக்கின்றன, நெருப்பில்லாமல் புகையாது
நிச்சயம் ஒரு வைரமாக இருக்காது, ஒரு வைரம் என்றால் அதிகபட்சம் சில கோடிகள்தான் வரும் அது 20 ரூபாய் என டோக்கன் கொடுக்கவே பத்தாது
கருப்பு பண பதுக்கல், தங்கம் என்பதை விட வைரத்தை பதுக்குவது மிக நுட்பமான வழி, மிக மிக துணுக்கான வைரத்தில் முதலீடோ இல்லை பதுக்கியோ வைத்தால் பணமாக்க எளிய வழி
அதை சில கோஷ்டி செய்திருக்கலாம், தேர்தல் நேரம் என்பதால் அதை காசாக்க வழி செய்திருக்கலாம், விஷயம் கசிந்திருக்கலாம்
இது ஜெயலலிதா வீட்டு வைரம் என சிலர் சொல்கின்றார்கள், வாய்ப்பு இல்லாலும் இல்லை, 1996 அந்த போயஸ் கார்டன் வீட்டில் வைர அட்டிகை கைபற்றபட்டது குறிப்பிடதக்கது
அதன் பின்பும் அக்கட்சி வைரம் குவித்திருக்கலாம், அது ஜெயா நில்லா நிலையில் யாருக்கோ பயன்பட்டிருக்கலாம்
கொடநாடு கொள்ளைகள் இன்னும் பல விஷயங்கள் இப்பொழுது வேறு நினைவுக்கு வந்து தொலைக்கின்றது, அந்த பெரும் ரெய்டுக்கு பின் போயஸ் கார்டனிலே ரகசியம் காக்க ஜெயா ஒன்றும் முட்டாள் அல்ல
ஆக இஸ்ரேலுக்கு அடுத்து பெரும் வைரசந்தையான சூரத்தில் செய்தி கசிந்திருப்பதால் விஷயம் இருக்கலாம்
சரி வைரம் எப்படிபட்டது?
பொதுவாக வைரம் வாங்க ஏகபட்ட சாஸ்திரம் உண்டு, அது சிலப்பதிகார காலத்தில் இருந்தே உண்டு
சில ராசிக்கு, சில குடும்பங்களுக்கு பொருந்தா வைரம் பெரும் கெடுதலை கொண்டுவரும் என்பார்கள்
கண்ணகி கால் சிலம்பில் மாணிக்கமும் வைரமும் இருந்ததாம், அது முதலில் கண்ணகி குடும்பத்தை கெடுத்தது, பின் களவெடுத்த பொற்கொல்லனை அழித்தது அப்படியே பாண்டிய மன்னனையும் சாய்த்தது
அதை தொடாத மாதவி காவியமானாள்
வரலாற்றில் வைர சென்டிமென்டால் சிலர் அழிந்த முதல் காட்சி இதுதான், அது ஏகபட்ட சாட்சிகளுடன் சாலமோன் அரசர்,, அலெக்ஸ்டாண்டர், நெப்போலியன் வரை வருகின்றது
கண்முன் கண்ட காட்சி கோஹினூர் வைரம், கிட்டதட்ட 2000 ஆண்டு பழமையானது
ஆனால் புகுந்த இடத்தில் எல்லாம் அழிவினை கொண்டுவந்து கடைசியாக பிரிட்டனுக்கு சென்றது, அத்தோடு அரச குடும்பமும் ஆட்சி இழந்து அதிகாரத்தை இழந்தது
அதாவது வைரம் வாங்கும்பொழுது பல விஷயங்கள் பார்ப்பார்கள், ரேகை ஓட்டம் என்பார்கள், முகம் என்பார்கள் , முக்கியமாக கடல் கடந்து வரவேண்டும் என்பார்கள் , ராசிக்கு பொருந்த வேண்டும் என்பார்கள் இன்னும் ஏக விஷயங்கள்
அப்படி இல்லா வைரம் உரிமையாளரை அழித்துவிடும் அல்லது பெரும் துன்பம் கொடுக்கும் என்கின்றது சாஸ்திரம்
ஒருவேளை மிக மர்மமாக இறந்த ஜெயா அப்படி ஒரு சில வைத்திருந்திருப்பாரோ?
அந்த சென்டிமென்ட் தான் அவரை வீழ்த்தி, சின்னமாவினை சிறைக்கு அனுப்பியும் இருக்க்குமோ?
எல்லாவற்றிற்கும் வாய்பிருக்கின்றது
பொதுவாக வைரத்திற்கும் ஜெயாவிற்கும் அக்காலத்தில் இருந்தே பொருந்தாது
“வைரம்” என்றொரு படத்தில் ஜெய்சங்கரோடு நடித்து அதில் எழுந்த சர்ச்சை மிக பெரிது, ஆதாரம் வேண்டுமென்றால் திமுகவினரிடம் கேட்கலாம்
வைர அட்டிகை அணிந்து மிகபெரிய வழக்கில் சிக்கினார் ஜெயா
அப்படியான வைர சென்டிமென்ட் அவர் இறந்தபின்பும் துறத்துகின்றதுதான் ஆச்சரியம்
நிச்சயம் 2 லட்சம் காரட் 3 ஆயிரம் கோடி எல்லாம் இல்லை , ஆனால் பல நூறு கோடிகள் புழங்கும் அளவு பல வைர புதையல் விற்பனைக்கு வந்திருக்கலாம்
இனி பல பல விஷயங்கள் வரும்
நிச்சயம் ஜெயா வீட்டு வைரம் இல்லை என சொல்ல முடியாது, காரணம் பழைய காட்சிகளும் பெங்களூரில் இருக்கும் ஜெயாவிடமிருந்து மீட்கபட்ட தங்க, வைர நகைகளின் அணிவகுப்பும் சாட்சியாய் நின்ற்கின்றது
ஜெயா வீட்டை புரட்டினார்கள் தங்கமும் வைரமும் கொட்டியது
இதுவே கலைஞர் வீட்டை புரட்டினால் என்னாகும்? குறிப்பாக கலைஞர் அறையினை புரட்டினால் என்னாகும்?
ஏராளமான புத்தகங்கள், எழுத்து குறிப்புகள், பேனாக்கள், பெரியார் அண்ணா புகைபடங்கள், அண்ணாவின் கடிதங்கள் இது தவிர என்ன இருக்கும்?
ஒன்றே ஒன்று இருக்கும், அது அவரின் பாசமிகு உறவுகளான சகோதரிகள், முரசொலிமாறன் மற்றும் அன்னை அஞ்சுகத்தின் படம்
நிச்சயம் இதை மீறி ஒன்றும் இருக்காது
அண்ணா அணிவித்த மோதிரம் தவிர அவரிடம் நகை இருந்ததா? இல்லை தயாளு அம்மாவுடன் பெரும் நகை கூடமாக காட்சி அளித்தாரா?
இல்லவே இல்லை, அவருக்கு மிக பிடித்தமான ஏற்காட்டில் ஒரு குடிசை கூட அவர் கட்டியதில்லை
ஒரு எளிய தலைவன் எப்படி வாழவேண்டுமோ அப்படி வாழ்ந்தார் அவர்
இன்னும் ஏராள செய்திகள் வரும், அது ஒவ்வொன்றும் கலைஞர் நிச்சயம் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார், மிக வெளிப்படையான வாழ்வு வாழ்ந்தார் என சொல்லிகொண்டே இருக்கும்
அம்மனிதனை அன்று இந்த உலகம் புரிந்து கொள்ளும், எதையும் தாமதமாகவே புரியும் தமிழகம் இதையும் நிச்சயம் ஒருநாள் புரிந்து அம்மனிதனை கொண்டாடும்
