2016ம் ஆண்டு முடிந்து புத்தாண்டு பிறந்துவிட்டது

2016ம் ஆண்டு முடிந்து புத்தாண்டு பிறந்துவிட்டது

கோலகலமான கோலாலம்பூர் அதனை மிக உற்சாகத்துடன் கொண்டாடி கொண்டிருக்கின்றது, பல இடங்களில் கூடி நின்றுவரவேற்கின்றனர், சும்மாவே தூங்கா நகரம் இது. காரணாம் கிடைத்தால் விடுவார்களா?

மற்ற மதத்து மக்களுக்கு பிரச்சினை இல்லை, நள்ளிரவில் எப்படியும், எங்கும் கொண்டாடலாம், ஆனால் கிறிஸ்தவர்கள் கண்டிப்பாக ஆலயத்தில்தான் அதுவும் பிரார்த்தனையில்தான் வரவேற்க வேண்டும் என்பது விதி

என்ன இருந்தாலும் போப்பாண்டவர் கொடுத்த காலண்டர் அல்லவா, அவர் சொன்னபடி பிரார்த்திவிட்டுத்தான் முதல் தாளை தொடவேண்டும் என்பது அங்கு ஐதீகம்.

அதனால் ஆலயம் இழுத்துசென்றார்கள், சீன மொழியிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி திருப்பலிநிறைவேற்றினார்கள்

இங்கு திருப்பலி காண்பது வித்தியாசமானது,

நமது ஊராக இருந்தால் தளைய தளைய புடவை கட்டி, கழுத்து நிறைய தாங்கத்தை பூட்டி தலை நிறைய மல்லிகை சூட்டி வருவார்கள்

வந்து ஒருவர் புடவையினை ஒருவரும், ஒருவர் கழுத்தினை ஒருவரும் மாறி மாறி பார்த்துகொண்டிருப்பார்கள், அங்கே பாதிரியார் மாய்ந்து மாய்ந்து பேசிகொண்டிருப்பார்

அவரை எல்லாம் யார் கவனிப்பார்கள்? புடவையும் நகையும் போதாதா?

நம்மவர்கள் தங்கள் செல்வாக்கை உடையிலும், நகையிலும் எங்கு சென்றாலும் கூடவே எடுத்து செல்வார்கள், வெளிநாடுகளில் அப்படி அல்ல, மிக சிம்பிளாக வருவார்கள்

தலை கூட கண்ணகி கோலத்தில் அப்படியே இருக்கும், கணவன் அருகில்தான் சிரித்துகொண்டிருப்பார்.

ஆனால் ஆலயத்தில் கிறிஸ்தவர்களுக்கே உரிய புன்னகையும் அமைதியும் கொண்டு பங்கெடுப்பார்கள்.

இந்தியாவில் பாதிரியார்கள் சிலர் வித்தியாசமானவர்கள், திருப்பலியின் பொழுது சரியாக வணங்க கூட மாட்டார்கள், திராவிட இயக்க போராளிகள் போல சுயமரியாதை காப்பார்கள்

இங்கு அதிமுக அமைச்சர்கள், பொதுகுழு உறுப்பினர்கள் போல பாதிரியார்கள் முதுகு நன்றாக வளைகின்றது, பரவாயில்லை

திருப்பலி முடிந்ததும் எல்லோரும் எல்லோருக்கும் புதுவருட வாழ்த்து சொன்னார்கள், அறிமுகமே இல்லாவிட்டாலும் ஏதோ 10 வருடம் பழகியவர்கள் போல வந்து சொன்னார்கள்

சிலர் கட்டி தழுவி சொன்னார்கள், பல சீன நங்கையர்களும் உண்டு. பாகம் பிரியாள் அருகிலிருக்கும் பொழுது இதெல்லாம் சாத்தியமா?

இப்பக்கம் செல்லலாம் என்றாள், அங்கு முதியவர்கள் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள்

சீன மங்கையர் கண்ணதாசன் வார்த்தைகளில் சொல்வதென்றால் “மஞ்சள் மேனி பாவைகள், தங்கம் மின்னும் அங்கங்கள்” வகையறாதான்

ஆனால் ஒரு தீவிர குஷ்பூ ரசிகன், இப்படி 10 நாள் பட்டிணிகிடந்த பரிதாப கோலத்துடன் வரும் சீன பெண்களை ரசிக்க முடியுமா? நெவர்

ஒரு வழியாக புத்தாண்டினை வரவேற்றாகிவிட்டது

என்ன புத்தாண்டு? உண்மையில் அப்படி ஒன்று இல்லவே இல்லை எல்லாம் மனிதன் வகுத்த கால அளவு

சூரியனை சுற்றும் பூமி கடந்த ஆண்டு எந்த புள்ளியில் நின்றதோ அதே புள்ளிக்கு நம்மோடு வந்திருக்கும், அவ்வளவுதான்

இனி அதுவும் சுற்ற தொடங்கும், நாமும் பணிகளை தொடங்கவேண்டும்

கிட்டதட்ட 30 புத்தாண்டுகளை வரவேற்றாகிவிட்டது, அவை எல்லாம் கனவு போல ஆகிவிட்டன‌

வாழ்க்கை என்பது கனவு போன்றது, அதில் உண்பதும் கொண்டாடுவதும் மகிழ்வதுமன்றி ஓன்றும் அர்த்தமில்லை என்றான் ஒரு அறிஞன்

அதனால் என்ன செய்யலாம்?

கோழியினை வெட்டி அடுப்பில் போட்டு, சேர்க்க வேண்டிவைகளை சேர்க்கலாம்