2016ல் எழுதபட்ட எமது பதிவும் நேற்று எழுதபட்ட எஸ்.வீ சேகர் பதிவும்

No automatic alt text available.
எஸ்வி சேகர் பதிவு 
Image may contain: text
நமது பதிவு

“ஒரு காலம் இருந்தது,

அன்று கன்னடத்தில் பெரும் அணைகள் இல்லை,

ஆடிமாத காவேரி அப்படியே பொங்கி தஞ்சைக்கு வரும், அது பயிர்களை அழித்துவிடும்

உடனே எப்படி எங்கள் பயிரை நீங்கள் நீர் அனுப்பி அழிக்கலாம் என கிளம்புவார்களாம் தமிழக காவிரி டெல்டா மக்கள்.

மைசூர் சமஸ்தானம் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டுமாம்,

மழை பெய்கிறது.. வெள்ளம் வருகிறது நாங்கள் என்ன செய்ய.. என கதறி நின்று, தண்ட காசு தஞ்சைக்கு வழங்கி இருக்கின்றது மைசூர் சமஸ்தானம்

பின்னாளில் மைசூர் திவானாக விஸ்வேஸ்வரைய்யா வருமளவும் அது தொடர்ந்திருக்கின்றது,

பெரும் கட்டட பொறியாளரான அய்யர்தான் அணைகட்டினால் இந்த நஷ்ட ஈட்டை தடுக்கலாம் என ஐடியா கொடுத்தவர்..

அதன் பின்னே கிருஷ்ணராஜ சாகர் கட்டபட்டது, மேட்டுரும் கட்டபட்டது.

அந்த விஸ்வெஸ்ரய்யா தான் கன்னடத்து லி குவான் யூ, அம்மாநிலத்தின் இன்றைய எழுச்சிக்கு அவர்தான் அடிக்கல், சிற்பி எல்லாம்.

அதன் பின் அவர்கள் விவசாய நிலங்களை பெருக்கிகொண்டார்கள், துணை ஆறுகளில் எல்லாம் அணைகட்டிகொன்டார்கள். விவசாயத்தை பெருக்கி கொண்டே வந்தார்கள்.

நாமோ சினிமா பின்னால் சென்று, மாநிலத்தை சீரழித்து விவசாயத்தை கைவிட்டு விட்டே வந்தோம்..

அது வறண்ட பகுதிகளில் கதறி கைவிடபட்டபோது தெரியவில்லை, 
அதாவது உடை களையும் வரை தெரியவில்லை,

உள்ளாடையுடன் நிற்கும்போது அது பட்டவர்த்தனமாக தெரிகின்றது,

அதுவும் களையபடும் நேரம் இது,

எந்த முப்பாட்டன் தஞ்சாவூரில் காவேரி வெள்ளத்தால் நஷ்டம் என கொடிபிடித்ததோ,

அதே வாரிசுகள் இன்று நீரை கொடு என கொடிபிடித்து போராடுகின்றன, கால விசித்திரம்.

ஒரு அறிவாளியினை கொண்ட சமூகம் எப்படி செழிக்கும் என்பதற்கு விஸ்வேஸ்ரய்யரின் கன்னடமும், சினிமா பின்னால் சென்ற சமூகம் எப்படி சீரழியும் என்பதற்கு தமிழகமும் சாட்சி.

கல்லணை கட்டி தமிழன் சாதிக்க ஒரு காலம் இருந்தது, பின் அய்யர் அணைகட்டி சாதிக்கவும் ஒரு காலம் வந்தது,

மறுபடியும் ஒரு தமிழன் அந்த வரலாற்றினை திருப்ப வராமலா போய்விடுவான்

நிச்சயம் வருவான்,

அதற்கு முன்பு இந்த தமிழக அரசியல் அழிச்சாட்டியங்களை விரட்டி தமிழகத்தை தயாராக வைத்திருப்பது நமது பொறுப்பு

திரும்பிகொண்டே இருப்பதுதான் வரலாறு, ஒருவன் நிச்சயம் வருவான்”

‍ — இது முன்னொரு காலத்தில் நாம் எழுதிய பதிவு, காவேரி சிக்கல் தொடர்பான ஒரு காலத்தில் எழுதினோம்

இப்பொழுது இது எஸ்.வீ சேகர் எழுதியது என சிலர் சொல்லி திரிகின்றார்கள். இதனை நாமே எழுதினோம் என்பதை சொல்லிகொள்கின்றோம்

காவேரி சர்ச்சை வெள்ளையன் காலத்தில் இப்படித்தான் தொடங்கியது. முன்பு தஞ்சையிலிருந்து அவனிடம் சென்று நஷ்ட ஈடு வாங்குவார்களாம், வெள்ளம் வந்தால் கன்னடன் பொறுப்பாம்

இக்கொடுமை பொறுக்கமுடியாமல் திப்பு சுல்தான் எல்லாம் பொங்கி இருக்கின்றான், காவேரி கரைகளை திப்பு சேதபடுத்தினான் என்பதெல்லாம் இது தொடர்பானது

இந்நிலை திப்பு ஓய்ந்து மறுபடியும் உடையார் மன்னர்கள் ஆட்சியில் இருந்தபொழுதும் தொடர்ந்தது, தஞ்சை வெள்ளத்திற்கு பெரும் நஷ்டஈடு கொடுப்பதை தடுக்கத்தான் விஸ்வேஸ்ரய்யர் காலத்தில் கன்னடம் அணை கட்ட தொடங்கியது

இதெல்லாம் என்றோ எழுதியது

இது ஒன்றும் பெரிய விஷயமல்ல, யார் யாரோ நம் பதிவுகளை எடுப்பார்கள். எடுக்கட்டும் இதனை எல்லாம் பெரிய விஷயமாக்குவது சுத்த மடத்தனம்

நல்ல கருத்துக்களை 4 பேர் பரப்புவதில் மிக்க மகிழ்ச்சி, தாராளமாய் செய்யட்டும்

ஆனால் இப்படியே சங்கம் பற்றியும், குஷ்புவிற்காக அது ஆற்றும் தீவிர தொண்டுகளை பற்றியும் உலகிற்கு இவர்கள் எடுத்து சொல்ல வேண்டாமா? நிச்சயம் சொல்ல வேண்டும்

இதுவரை யாரும் சொல்லவில்லை எஸ்.வீ சேகராவது அதனை செய்வார் என சங்கம் நம்புகின்றது.

ஆக எஸ்.வீ சேகர் அவர்களே, நீங்கள் நம் பதிவினை கண்டு பகிர்ந்ததில் மகிழ்ச்சி, இப்படியே சங்கத்தை பற்றியும் , தலைவிக்காக அது ஆற்றிவரும் மகத்தான தியாகங்களை, அர்பணிப்புகளை எல்லாம் உலகெல்லாம் நீங்கள் சொல்ல வேண்டும்

(2016ல் எழுதபட்ட எமது பதிவும் நேற்று எழுதபட்ட எஸ்.வீ சேகர் பதிவும் படத்தில் இருக்கின்றது)