என்னதான் பேசுவது : கவலையில் சீமான்

Image may contain: 1 person, close-up

“நல்லா இருந்தார்கள் புலிகள், நாம் இலங்கையில் கால் வைத்ததும் முடிந்தார்கள்

ஐரோப்பாவில் புலிகளை பற்றி நாம் பேசிய உடனே தடை, கனடாவிலும் நாம் வாய் திறந்தவுடன் தடை, நுழையவே முடியவில்லை

நாம் இயற்கை விவசாயம் பேச தொடங்கினால் நம்மாழ்வாரும் போய்விட்டார்

கலைஞரை முன்னுறுத்தி அரசியல் பேசினால் அவரும் ஓய்வு

காங்கிரஸ் இன எதிரி என சொல்லி பிழைப்பு நடத்தினால். அவர்களும் மோடியிடம் கொடுத்துவிட்டார்கள்

ஈழத்தாயின் பார்வை கிடைக்குமென்றால் தாயே இல்லை

காவேரில நீர் இல்லைண்ணு ஒருத்தன கொளுத்தினா ஒன்னும் நடக்கல, காவேரி வேற வந்து தொலைச்சிட்டு

பேரரிவாளனும் வந்துட்டு போயிட்டான், இனி பரோல் கேட்டால் அடிப்பானுக‌

இப்படி கால் வைத்த இடமெல்லாம் சறுக்கினால் என்னதான் ஒரு மனிதன் செய்வது?

இப்படி நுட்பமா சிந்திச்சாதான் இனி நாம அரசியல் பண்ண முடியும்

ஆக நாம வாய் வச்ச இடமெல்லாம் சரியுது, அழியுது. நம்ம ராசி அப்படி போல‌

நம் ராசி நமக்கு தெரியும், பேசாமல் பன்னீர் வாழ்க, பழனிச்சாமி குலச்சாமி என இறங்க வேண்டியதுதான்

ஏதோ தமிழ்பிள்ளைகள் வாழும் எளிய தமிழகத்திற்கு நம்மால் ஆன உதவி

எளிய தமிழ்பிள்ளைகள் கிட்ட வாட்சப்ல சொல்லிரலாம்”


கொசுறு

கருஞ்சட்டை பெரியாரிஸ்டுகள் எந்த வரிசையில் இருக்கின்றார்கள், என் போன்ற நீலசட்டை அம்பேத்காரிஸ்ட்கள் எங்கு இருக்கின்றோம் : பா.ரஞ்சித் சீற்றம்

ஆக 1980களில் கத்திபாரா பக்கம் சட்டையினை கிழித்து ஓடியது போல, விரைவில் ரஜினி சட்டையினை கிழித்துகொண்டு ஓடும் காட்சியினை தமிழகம் பார்க்க போகின்றது.

ரஜினிகாந்த் அவர்களே, “காலா” படத்தை முடக்கிவிடுங்கள். அது வெளி வந்தால் உங்களுக்கு மேற்சொன்ன நிலைதான்