ஆண்டாள் பாடல் சர்ச்சை வந்தால், “ஐயகோ இந்து மதம் ஆபாசம், இந்து கதைகள் ஆபாசம், ச்சீ எல்லாம் சைத்தானியம்..” என சொல்பவர்களில் பாதிபேர் அழிச்சாட்டிய கிறிஸ்தவர்களாக இருக்கின்றார்கள்
ஆனால் பழைய ஏற்பாட்டில் இருக்கும் ஆபாசங்களை மறைக்கின்றார்கள்
இவர்களால் அசிங்கம் என சொல்லபடும் ஏகபட்ட ஆபாசங்களும், அசிங்கங்களும் அங்குதான் இருக்கின்றன, அக்கால வாழ்வுமுறை அப்படி இருந்திருக்கின்றது
பைபிளில் இருந்தால் விட்டுவிடுவார்களாம், அடுத்த மதத்தில் இருந்தால் பொங்குவார்களாம்
அடுத்தவன் மனைவியோடு பெறும் வாரிசு நிலைக்காது, அது சாபக்கேடு என சொல்வது அதே பழைய ஏற்பாடு, ஆனால் தாவீதுக்கும் அடுத்தவன் மனைவிக்கும் பிறந்த சாலமோனே பெரும் ஆசீர்வாதம் மிக்கவனாக இருக்கின்றான்
இயேசு கூட அவன் வம்சா வழியில் வந்தவர், பெரும் அவதாரம்
ஆக அந்த கடவுளுக்கு தனக்கு பிடித்தவர்கள் தவறு செய்தால் அட்ஜெஸ்ட் செய்யும் மனம் இருந்திருக்கின்றது அது இருக்கட்டும்
இந்த உன்னத சங்கீதம் என்றொரு பழைய ஏற்பாட்டு ஆகமம் உண்டு, அதனை வாசித்தால் ஆண்டாள் பாடல் எல்லாம் சும்மா
அந்த பைபிளை பிடித்துகொண்டு ஆண்டாள் ஆபாசம், இந்து மதம் ஆபாசம் என சொல்பவர்களை பார்த்தால் பரிதாபமாகவே இருக்கின்றது
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று விஷேசமாம் , ஆண்டாள் தங்க வாகனத்தில் ஊர்வலம் போவாராம்
ஏன் சொல்கின்றோம் என்றால் , வைரமுத்துவிற்கு ஒரு தகவல் ,. அவ்வளவுதான்.