சிறுமிகளை பாலியல் கொடுமை செய்தால் தூக்கு தண்டனை

Image may contain: 1 person, smiling

சர்ச்சைகள் பெருகியவுடன் மோடி அவசர கூட்டம் போட்டு புது சட்டம் இயற்றியிருக்கின்றார்

இனி 12 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் கொடுமை செய்தால் தூக்கு தண்டனை என அறிவிக்கபடுகின்றது, இது இனி சட்டமாக்கபடும்

நிச்சயம் இது 12 வயது என்றிருக்க கூடாது பெண்ணின் திருமண வயதான 21 வயது வரை என்றாவது உயர்த்தபட்டிருக்க வேண்டும்

சட்டங்கள் மோடி சொன்னவுடன் உருவாக்கபடுவது அல்ல, அதிலுள்ள சாதக பாதங்கள் எல்லாம் நிபுணர்களால் அலசபட்டே முடிவு எடுக்கபடும் என்பதால் சட்டமேதைகளின் முடிவிற்கு கட்டுபட்டே ஆகவேண்டும்

மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து அவசர சட்டமியற்றிய மோடிக்கு வாழ்த்துக்கள். நிச்சயம் செய்யவேண்டிய அவசர விஷயம் இது.

இந்திய நீதி அமைப்பில் ஒரு குறை உண்டு, இம்மாதிரி விஷயங்களுக்கு சாட்சி விசாரணை என அலைக்கழிப்பார்கள், தண்டனை நிறைவேற பல வருடம் ஆகலாம், அல்லது தண்டனை குறைக்கவும் படலாம்

குற்றவாளி என ஒருவன் இம்மாதிரி விஷயங்களில் நிரூபிக்கபட்டவுடன் தண்டனை விரைவில் நிறைவேற்றபடுமாறு செய்தல் வேண்டும்

இல்லாவிட்டால் இந்த சட்டத்தால் பயனில்லை. கும்பகோணம் குழந்தைகளை கொன்றவர்கள் கெத்தாக திரிவது போல் குற்றவாளிகள் திரிவார்கள்

இன்னொன்று இந்த மேஜர் குற்றவாளி மைனர் குற்றவாளி எல்லாம் இதில் பார்த்தல் கூடாது, கற்பழிக்க துணிந்தவன் நிச்சயம் மைனர் பட்டியலில் வரமாட்டான். வயது காட்டி தப்பித்தலும் கூடாது

இச்சட்டம் அந்த சிறுமி ஆசிபா பெயரில் அமைக்கபட்டால் கண்ணீரோடு மனம் உருக நன்றி சொல்லலாம், ஆனால் செய்வார்களா என தெரியாது

மக்களின் நாடிதுடிப்பறிந்து இந்த அவசர சட்டத்தை இயற்றிய மோடிக்கும் அவரின் அமைச்சரவைக்கும் கோடான கோடி நன்றிகள், வாழ்த்துக்கள்

மோடி மீது ஆயிரம் சர்ச்சை இருந்தாலும் இம்மாதிரி விஷயங்களை அவர் செய்யும்பொழுது பாராட்டியே தீரவேண்டும், பிரதமராக அவரின் கடமையினை செய்திருக்கின்றார்.

இப்படிபட்ட மோடியினை யார் குறை சொல்ல முடியும்?

இப்படி ஒரு சட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்குமானால், கயல்விழி என்ற சிறுமியின் வாழ்க்கை பாதிக்கபட்டிருக்காது. சைமன் என்பவனும் இப்பொழுது போராளி என சுற்றிகொண்டிருக்க மாட்டான்.