குஷ்பு வந்தாச்சு

Image may contain: 1 person, smiling 

முன்பெல்லாம் இந்த புராணங்களை படிக்கும்பொழுது உண்ணாமல் தியானம், உறங்காமல் தியானம், தன்னை சுற்றி எறும்பு புற்றுவளர்க்க்கும் வரை தவம் என்றேல்லாம் படிக்கும் பொழுது பகுத்தறிவு உதித்து இதெல்லாம் கட்டுகதை என சொல்ல தோன்றிற்று

ஆனால் விடுமுறையில் குஷ்பு படம் பார்த்தால் அதெல்லாம் சாத்தியம் என்றே தோன்றுகின்றது

தலைவி படம் தொடங்கிவிட்டால் உணவு வேண்டாம், நீர் வேண்டாம், சுவாசம் வேண்டாம் என ஆழ்நிலை தியானத்தில் இறங்க முடிகின்றது

வாட் எ கேர்ள்..ன்ன நடந்தாலும் கண்டுகொள்ளாமல் தலைவி படத்தில் லயிக்க முடிகின்றது

விடுமுறையில் தொடர்ந்து 500 மணி நேரம் குஷ்பு படம் பார்தது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் பெரும் காரியத்தில் சங்கம் இறங்கியாயிற்று

குருசிஷ்யனில் தொடங்கி இப்பொழுது நடிகன் வரை வந்திருக்கின்றது, விட கூடாது 500 மணிநேரம் பார்த்துவிட வேண்டும்

வாவ் ….வாட் எ கேர்ள்…


Image may contain: 2 people, people smiling, text

இந்த ஜெயா டிவி சனியன் எதற்கு இருக்கின்றது என அடிக்கடி கோபம் வந்தாலும், அந்த டிவி குஷ்பு படம் போட்டு இதற்குத்தான் இருக்கின்றோம் என நிரூபித்துகொள்ளும்

அப்படி இப்பொழுது அம்மா வந்தாச்சி என்றொரு படம் ஒடவிட்டாயிற்று

வாழ்க ஜெயா டிவி, பீனிக்ஸ் பறவையாக அது குஷ்பு படம் போடுவதற்காக வாழ்த்துக்கள்

குஷ்பு ஒரு குழந்தைக்காக வாழ்வினை அர்பணிக்கும் இளம்பெண் வேடத்தில் அசத்தியிருக்கின்றார், தேசிய விருது பெறும் நடிப்பு

இந்த பாக்யராஜ் என்பவர் சைடு ஆர்டிஸ்ட்டாக நடித்திருகின்றார்

படத்தில் தலைவியினை கண்ணாடியோடு அலையவிட்டிருக்கின்றார்கள், அதுவும் தலைவிக்கு அழகு

படத்தின் பெயரை “குஷ்பு வந்தாச்சி” என மாற்றி இருந்தால் நல்லது , எனினும் நாம் தலைவி வந்தாச்சி என சொல்லி டிவி முன் அமர்ந்தாயிற்று

ஜெயா டிவி வாழ்க, அவர்கள் சிஇஓ விவேக் வாழ்க‌