இந்திரா கட்சியினை உடைத்தால் அது நாட்டுநலம், சாகசம்

இந்திரா கட்சியினை உடைத்தால் அது நாட்டுநலம், சாகசம்

ராஜிவ் அதிமுகவினை உடைக்க நினைத்தால் அதுவும் அரசியல் நகர்வு

கருணாநிதி பல ஆட்டங்களை செய்தால் அது தந்திரம், எல்லா கட்சியிலும் ஸ்லீப்பர் செல் வைத்து ஆடினால் அது சாணக்கியதனம்

தாமாகாவினையும், விஜயகாந்தினையும் அதிமுகவும் திமுகவும் சேர்ந்து முடக்கினால் அது ராஜதந்திர நகர்வு

சசிகலா கட்சி நடத்தினால் அது தைரியம், திமுகவினை வைகோவால் பிளந்தால் அது அரசியல் தந்திரம்

அதே மதிமுகவினை கலைஞர் காலி செய்தால் அது ராஜதந்திரம்

அதிமுகவில் ஊழல் செய்த அரசியல்வாதிகளில் செல்வகணபதி போல ஏராளமானோர் இப்போது திமுகவில்தான் இருக்கின்றனர், அது பற்றி எல்லாம் எவனும் பேசமாட்டான்

இன்னும் பல கட்சிகளை அதிமுக உருட்டி மிரட்டி வைத்திருந்தால் அது நல்லாட்சி

ஆனால் பாஜக ஏதும் கட்சியினை உடைத்தாலோ இல்லை ஆட்சி அமைக்க முயற்சித்தாலோ அதன் பெயர் ஜனநாயகபடுகொலை, சட்டத்தை மீறிய செயல், மதவாதம், சர்வாதிகாரம்

இங்கு ஆண்ட கட்சி எது அடுத்த கட்சியினை உடைக்காமல் இருந்தது? அயோக்கிய அரசியல் செய்யாமல் இருந்தது?

இந்திரா, கருணாநிதி, ஜெயலலிதா வழிதான் அமித்ஷாவின் வழி, இது ஒன்றும் புதுவழி அல்ல.

வழிகாட்டியது எல்லாம் இவர்களே

இயேசு சொன்னதுதான்

“உங்கள்மேல் குற்றமில்லாதவன் முதல் கல்லை எறியட்டும்”


1989ல் கலைஞர் ஆட்சியினை ஆளுநர் ஒப்புதலின்றியே டிஸ்மிஸ் செய்தார்கள்.

இன்னும் என்னவெல்லாமோ கொடுமைகள் நடந்த தேசமிது

அப்பொழுதெல்லாம் சாகாத ஜனநாயகம், இப்பொழுது எடியூரப்பாவினை ஆட்சி அமைக்க அழைக்கும்பொழுது செத்துவிட்டதாம்

அரசியலில் இதெல்லாம் சாதாரணம்


தமிழ்நாட்டில் நல்ல அரசு இல்லை என்பதை மறந்த தமிழன், நல்ல ஆட்சியினை தேர்ந்தெடுக்காத தமிழன் கன்னடனை பார்த்து கலாய்த்து சிரித்துகொண்டிருக்கின்றான்.

தமிழகத்தை பார்த்தே உலகம் சிரிப்பாய் சிரிக்க, இவர்கள் கன்னடரை விமர்சிக்கின்றார்களாம்

சுவாரஸ்யமான மாநிலம் இது


எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக விலைபேசுகின்றது : குமாரசாமி குற்றசாட்டு

அதானே, ஓணர் இவர்தானே இவரிடம்தானே விலைபேச வேண்டும். ஆடுகளிடம் பேசினால் அவை ஏமாந்துவிடாதா?

நல்ல விலைகொடுத்தால் குமாரசாமியே ரெடி