தூத்துகுடியில் கல் எறிந்தது திமுகவினர், பக்தாஸ் சந்தேகம்
நக்சல்கள் பிடியில் தூத்துகுடி போராட்டம் சிக்கியது என்றால், நக்சல்களை கட்டுபடுத்த தவறிய அரசு என இந்த பழனிச்சாமி அரசை கலையுங்கள்
முன்பு புலிகளை கட்டுபடுத்த தெரியவில்லை என கலைஞர் அரசை அப்படித்தான் கலைத்தார்கள்
நக்சல்கள் தூத்துகுடியில் கலவரம் செய்கின்றார்கள் என்பது உண்மை என்றால், இந்த ஆட்சியினை டிஸ்மிஸ் செய்துவிட்டு பேசுங்கள்
நக்சல்களை சுடுகின்றோம் என பொதுமக்களை சுட்டுவிட்டு, பழனிச்சாமி அரசை நீட்டிக்க வைப்பது எவ்வகை நியாயம்?
இந்த ஆட்சி நீடித்தால் தமிழமெங்கும் நக்சல்கள் பரவி கலவரம் செய்யமாட்டார்களா?
தூத்துகுடியில் கல் எறிந்தது திமுகவினர், பக்தாஸ் சந்தேகம்
பக்தாஸுக்கு ஒரு மண்ணும் தெரியாது, இந்த தும்பிகளை விட மோசம் என்பது இதற்குத்தான்
திமுக என்பது என்ன?
ஆனானபட்ட இந்திராகாந்தியினையே மண்டையினை உடைத்து அனுப்பியவர்கள் அவர்கள், இதில் இதென்ன அதிசயம்?
அக்காலத்தில் பக்தவச்சலம் கேட்ட துணைராணுவபடையே திமுக முன் திரும்பித்தான் போனது
மிசாவினை மிக துணிவாக எதிர்கொண்டு இந்தியாவிற்கே வழிகாட்டியது திமுக
அது ஒருமாதிரியான கட்சி, எப்பொழுதெல்லாம் சவால் அதிகரிக்குமோ அப்பொழுதெல்லாம் அதற்கேற்ற வேகத்தோடு எழும்பும்.
இப்பொழுது அதற்கான நேரம் வந்தாயிற்று, இனி திமுக சுணங்காது.
ஏதோ கொஞ்சநாள் அமைதியாக இருந்தால் அது பூனை என்றே முடிவுகட்டுவார்கள் போல
திமுக ஒரு புலி, பாய வேண்டிய நேரத்தில் மிக சரியாக பாயும். அப்பொழுது காவியும் இருக்காது தாமரை செடியும் இருக்காது
எல்லையோர கிராமங்கள் மீது கொடும் தாக்குதலை தொடங்கிவிட்டது, கிட்டதட்ட 75 ஆயிரம் மக்கள் காலிசெய்ய பட்டிருக்கின்றார்கள்
அந்த பாகிஸ்தான் ராணுவத்தை சுடுங்கள் என்றால் தூத்துகுடியில் அப்பாவி மக்களை சுடுகின்றார்கள்
பஞ்சாப் எல்லையோரம் செல்லவேண்டிய துணை ராணுவம் தூத்துகுடிக்கு வருகின்றதாம்
இப்படி ஒரு வினோத அரசினை என்றாவது இந்தியா கண்டது உண்டா?