கருணாநிதிக்கு முழு திருவுருவ வெண்கல சிலை நிறுவப்படும் : திருநாவுக்கரசர்
“உழைப்பு என்ற கருணாநிதியின் மந்திர சொல்லின் மூலம், அவரின் கனவுகளை , கட்சி தொண்டர்களின் துணையுடன் சாதித்துக்காட்டுவேன” : முக ஸ்டாலின்
மெரினாவில் கலைஞருக்கான இடத்தை மீட்க அழகிரியுடன் சேர்ந்து காட்டிய ஒற்றுமையினை தமிழகத்தினை எடப்பாடி கும்பலிடம் இருந்து மீட்பதிலும் இவர் காட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
விரைவில் கருணாநிதிக்கு முழு திருவுருவ வெண்கல சிலை நிறுவப்படும் -திருநாவுக்கரசர் அறிவிப்பு
தமிழகம் முழுக்க திறக்கபடாத ராஜிவ், இந்திரா, காமராஜர் சிலைகல் ஏராளம் உண்டு
தவம் செய்யும் முனிவர்களை சுற்றி வளர்ந்திருக்கும் புற்று போல ஆகிவிட்டது சில சிலைகள்
அதை எல்லாம் கண்டு கொள்ளா திருநாவுக்கரசர் கலைஞருக்க்கு சிலை வைக்க போகின்றாராம்
தமிழக காங்கிரஸ்தலைவரின் செயல் திமுக தலைவருக்கு சிலை வைப்பதா? எப்படி ஒரு கட்சி பார்த்தீர்களா?
இன்னும் வெறிபிடித்த திமுககாரனுக்கே வராத சிந்தனை, தமிழக காங்கிரஸ் தலைவருக்கு வந்திருக்கின்றதென்றால் அவரின் மனநிலை பற்றி சந்தேகம் வருகின்றது
இப்படி ஒரு தலைவனை வைத்துகொண்டு அக்கட்சி எப்படி வளரும்? உருப்படும்?
கலைஞர் தனிபெரும் தலைவர் சந்தேகமில்லை, ஆனால் காங்கிரசுக்கோ அதன் வளர்ச்சிக்கோ அவர் செய்தது என்ன மிஸ்டர் திருநாவு?
இனி தி.அரசர் ஜெயா, வின்.ஜாணகி என பலருக்கு சிலைவடிக்கும் பெரும் காரியத்தில் இறங்குவார் என எதிர்பார்ப்போம்
வாழ்க தமிழக காங்கிரஸ், வளர்க அதன் எதிர்கட்சி தலைவர்களுக்கு சிலை வைக்கும் பணி
மானமுள்ள காங்கிரஸ்காரன் அதன் வரலாறு தெரிந்தவன் ஒருவன் இருந்தாலும் இந்நேரம் திருநாவுக்கரசை இழுத்து போட்டு சாத்தி வேட்டியினை கிழித்திருப்பான்
அப்படி யாரும் இல்லை என்பதால் திருநாவின் வேட்டிக்கும் முகத்திற்கும் இன்னும் ஆபத்தில்லை
மிஸ்டர் திருநாவு திறக்கபடா காங்கிரஸ் தலைவர்கள் சிலைகள், நெல்லை பணகுடியில் பர்தா போட்டு நிற்கும் காங்கிரஸ் தலைவர்கள் சிலையினை முதலில் திறங்கள்
கலைஞர் சிலையினை அப்புறம் பார்த்துகொள்ளலாம்