காஷ்மீர் – துளிகள்

காஷ்மீர் தாக்குதலுக்கு அமெரிக்கா மென்னி முழுங்கிற்று , ரஷ்யா ஏனோ வாய்திறக்கவில்லை, அமெரிக்காவுடன் துப்பாக்கி வர்த்தகம் இன்னும் சில வர்த்தகங்களில் இந்தியா நெருங்குவது இன்னும் சில நாடுகளுடனான‌ விமான ஒப்பந்தங்களை ரஷ்யா ரசிக்கவில்லை

இதனால் புட்டீனும் கனத்த அமைதி, சிரியாவில் தன் பக்கம் இந்தியா நிற்கவில்லை எனும் ஒருவித வன்மமும் ரஷ்ய பக்கம் இருக்கலாம் என்கின்றார்கள்

சீனாவோ பாகிஸ்தான் பக்கமே சரிகின்றது

பிரான்ஸ் இந்தியா பக்கம் நிற்கின்றது ஆனால் நெருக்கமாக வரவில்லை

உலகில் ஒருநாடு தாக்குதலை கண்டித்ததோடு மட்டுமல்லாமல் எல்லா வித உதவிகளையும் இந்தியாவிற்கு செய்ய தயார் என சொல்கின்றது என்றால் இஸ்ரேல் மட்டுமே

சிறுபான்மை இன்னபிற வாக்குவங்கியினை கருத்தில் கொள்ளாமல் இஸ்ரேலிய உதவியினை ஏற்று உளவுமுதல் தொழில்நுட்பம் வரை பெற்று இந்திய பாதுகாப்பினை நிலைநிறுத்துவது மிக சரியானது

********

இந்தியா போர்தொடுத்தால் சும்மா விடமாட்டோம் என இம்ரான்கான் அலறுவதிலும்..

பாமகவினை மிக கடுமையாக திட்டி ஸ்டாலினும் திமுகவும் சாபமிட்டு ஒப்பாரி வைப்பதிலும் …

அப்பட்டமாக தெரிவதுதான் “தோல்வி பயம்” என்பது

*******

காஷ்மீர் தாக்குதலை கண்டித்து நியூசிலாந்து நாடு முதலாவதாக பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளது

இந்தியராக அவர்களுக்கு நன்றி சொல்வது நம் கடமை

நீதி நியாயத்தை உணர்ந்த தேசமாக நியூசிலாந்து இருப்பதால் அவர்களை மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் இத்தேசம் வணங்குகின்றது

இனி நம் சகோதர நாடு நியூசிலாந்து

அப்படியே மசூத் அசார் ஒரு சர்வதேச தீவிரவாதி என அறிவித்த ரஷ்யாவிற்கும் கோடி நன்றிகள்