30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான்….
30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் இந்திய அமைதிபடையுடன் புலிகள் மோத தொடங்கினர்.
முதல் நாளே புலிகளின் அனுதாபிகள் தமிழகத்தில் கத்த தொடங்கினர், அந்நாளைய முதல்வர் ராமசந்திரனிடமிருந்து பதிலே இல்லை
ராஜினாமா செய் என யாரும் ராமசந்திரனை கேட்கவுமில்லை, அவர் செய்யவுமில்லை, ராஜிவிற்கும் அவருக்கும் கூட்டணி எல்லாம் இருந்த நேரமது
இதற்கு இருமாதங்களுக்கு முன்புதான் டெல்லி அசோகா ஹோட்டலில் பிரபாகரன் முரண்டுபிடிக்க அவரை வழிக்கு கொண்டுவர ராமசந்திரனும் சென்றிருந்தார்
பின் “என்னை விட்டால் போதும் சாமி” என சொல்லிவிட்டு தமிழகத்திற்கு வந்துவிட்டார்.
அமைதிபடையினை எதிர்த்து ராமசந்திரன் ஒருவார்த்தையும் பேசவில்லை, பேசியிருந்தால் அது அன்று அமைதிபடையினை எதிர்த்த கலைஞரை ஆதரித்ததாகிவிடும் என்ற அரசியல் அதில் இருந்தது.
தமிழகமே பொங்கி நின்றபொழுதும் ராஜிவ்காந்தியுடன் தான் வலம் வந்தார் ராமசந்திரன்
அப்பொழுதெல்லாம் “ஏய் இனதுரோகி ராமசந்திரா..” என்றெல்லாம் யாரும் கேட்கவில்லை
ஈழதமிழருக்கு எதிராக ராமசந்திரன் செய்த இக்காரியங்களை எல்லாம் யாரும் பேசமாட்டார்கள், தமிழக நிலவரம் அப்படி.
ராமசந்திரனின் நூற்றாண்டு விழாவில் இந்த அவரின் பல்டிகளையும் சேர்த்துகொள்ளவேண்டும்.