வீரசிவாஜிக்காக சில குறிப்புகளை எடுத்து கொண்டிருக்கின்றேன், 16ம் நூற்றாண்டின் சூரத் துறைமுகம் இன்றைய நியூயார்க் நகரத்துக்கு ஈடானதாய் இருந்திருக்கின்றது
ஐரோப்பிய கப்பல்களின் போக்குவரத்து மேற்கு கடல் பக்கம் அதிகம் நடப்பதால் அந்நகரம் மிகபெரும் வளர்ச்சியில் இருந்திருக்கின்றது, உலகின் மிகபெரிய வணிகர்களெல்லாம் அங்குதான் இருந்திருக்கின்றார்கள்
அன்று மும்பை தீவு அனாதையாக கிடந்திருக்கின்றது, பின் போர்ச்சுகீசியர் வழக்கம் போல் கைபற்றி வழக்கம் போல் உருப்படாத குடி கும்மாளம் மற்றும் இயேசுஸ் கிறிஸ்துஸ் போதையில் வைத்திருக்கின்றார்கள், பின் போர்ச்சுகீசிய அரசர் வரதட்சனையாக பிரிட்டிஷ் அரசுக்கு அந்த தீவை கொடுக்க அதன் பின்புதான் மும்பை எனும் பம்பாய் எழும்பியிருக்கின்றது அதுவும் 17ம் நூற்றாண்டுக்கு பின்
ஆக சூரத் அன்றே வளமான இடமாக இருந்திருக்கின்றது, அந்த வளத்தில்தான் பிரசித்தியான சோமநாதபுரி ஆலயம் பொன்னும் மணியுமாக குவிக்கபட்டு கொண்டாடபட்டிருக்கின்றது, கஜினியின் கண்களை அது உறுத்தியிருக்கின்றது
குஜராத் கடலோடிகளின் வியாபாரமும் அந்த துறைமுக தேவையும் அப்படி இருந்திருக்கின்றன, யூதர்கள் வைரம் மற்றும் ஜவுளி தொழிலில் அன்றே குஜராத்தை வளர்த்திருக்கின்றார்கள்
பின்னாளைய பெட்ரோல் தொழில் அவர்களை இன்னும் வளர்த்திருக்கின்றது
ஆக அம்பானி அதானி என இன்று கூவிகொண்டிருப்பதில் நியாயமில்லை, தமிழகத்து செட்டியார்களை போல் குஜராத்தியரும் காலம் காலமாக கொடிகட்டி பறந்திருகின்றார்கள், அம்பானி அதானி எல்லாம் அந்த வாரிசுகள் அன்றி வேறல்ல
தமிழகத்தில் அண்ணாமலை செட்டியார் போன்றோர்கள் இருந்தார்கள், அவர்களுக்கு பின்னரான பெருந்தொழிலை யாரும் முன்னெடுக்கவில்லை, இன்று தமிழக தொழில்துறை என்னாயிற்று என்பது தெரியாதது அல்ல
இங்கு சினிமா, டிவி தவிர ஏதும் வளரவில்லை, துறைமுகமோ பெரும் ஆலைகளோ எழவில்லை அல்லது யாரும் செய்யவிரும்பவில்லை அல்லது வசனம், டிவி, ஆட்டம்பாட்டம் குத்தாட்டம் தவிர எதுவும் தெரியாத ஒரு சமூகம் உருவாகிவிட்டது என்பதுதான் நிஜம், டாஸ்மாக் எக்ஸ்ட்ரா
சூரத் பன்னெடுங்காலமாக மிகபெரும் தொழில் வளர்ச்சியினை தொடரும் பகுதி, கஜினி காலம் மட்டுமல்ல சிவாஜிகாலத்திலும் அது அப்படித்தான் மின்னியிருக்கின்றது
இப்பொழுதும் அந்த பெரும் வியாபாரிகள் அதை தக்கவைத்து கொள்கின்றார்கள்
ஸ்டேன்லிராஜன் சார் உங்கள் பதிவு எந்த தளத்தில் வந்தாலும் பின் தொடர தயாராயிருக்கிறோம். தொடர்ந்து பதிவிடுங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். எனது அலைபேசி எண் – 9865033574. Arulmozhliraju
அருமை… சிவாஜி பற்றி தெரிய aval
இது போன்ற தொடர்கள் மூலம் இந்திய கலாச்சாரம் பண்பாடு ஆன்மீகம் வரலாறு போன்ற அனைத்து அம்சங்களும் உலகறிய செய்திடல் வேண்டும்.
Nice
வாழ்த்துக்கள் 🙏🏼
ஜெய் ஹிந்த்🌷🇮🇳
வந்தேமாதரம் 🙏🌷🇮🇳
It is great pleasure that governor will acchieve all his enemy in tamilnadu.jaihind.
அருமை ஜி