இலங்கையில் அண்ணாமலை மேற்கொள்ளும் பயணம் மிக பெரிய வகையில் எழுதவேண்டிய அளவு ஆழமானது என்றாலும் அதன் சுருக்கத்தை மட்டும் சொல்லிவிடலாம்

இலங்கை தீவு முதலில் இந்துக்களின் தாயகமாக இருந்தது, அசோகர் எனும் மிக வலுவான மன்னனின் மகள் சங்க மித்ரா அங்கு பவுத்தத்தை வளர்த்தாள், இந்திய இலங்கை தொடர்புகளில் அது இயல்பாக வந்தது

ராவணன் காலத்தில் இருந்தே இந்திய இலங்கை தொடர்பு இந்துமத அடிப்படையிலானதே, அதை பவுத்த தொடர்பாக அசோகன் மாற்றினான்

பின் இந்தியாவில் ஏற்பட்ட இந்து எழுச்சி இலங்கையிலும் நடந்தது, ராஜராஜசோழனின் இலங்கை படையெடுப்பின் பிரதான நோக்கமே இந்துமதத்தை காக்க நடந்தது, அவனின் தஞ்சை பெரிய கோவில் இலங்கை வெற்றியின் அடையாளமாக கட்டபட்டது

ராஜராஜசோழனின் எழுச்சி, ஜடாவர்ம சுந்தரபாண்டியன் போன்றோரின் ஆதிக்கம் இவற்றால் இலங்கையில் இந்து ஆலயங்கள் முழு பாதுகாப்பை அடைந்தன, நாயக்க சிங்கள தொடர்பில் சிங்களவரும் இந்து ஆலயம் வர ஆரம்பித்தனர் இன்றும் கதிர்காமமும் திருப்பதியும் சிங்கள பவுத்தர்களுக்கு விருப்பமானவை, வழிபடுவார்கள்

தேவார பாடல்களிலும் நாயன்மாரின் பாடல்களிலும் இலங்கையிலுள்ள சிவாலயங்களை பாடியதை காணலாம் , கண்ணகிக்கு பிரமாண்ட ஆலயங்கள் வட இலங்கையில் நிரம்ப உண்டு, முருகன் வழிபாடு தனி கொண்டாட்டம்

இன்றைய இலங்கையின் சிக்கலுக்கு வழிகோலியது போர்ச்சுகீசிய கோஷ்டி, இந்தியாவில் அவர்கள் காலூன்றிய 1500ம் வருடங்களிலே இலங்கையிலும் காலூன்றினார்கள் இந்தியாவில் செய்த அனைத்து மதமாற்றங்களையும் இலங்கையிலும் செய்தார்கள்

பின்னால் சென்ற பிரிட்டிஷார் வழக்கம் போல தங்கள் ஆட்சியினை நிறுவினார்கள் , இந்தியா போல பெரிய மக்கள் தொகையோ மராட்டிய மொகலாய அரசுகள் போல பெரும் அரசோ இல்லா இலங்கை அவர்களுக்கு எளிதாயிற்று மதமாற்றம் தீவிரமாக நடந்தது

அதையும் ஆறுமுக நாவலர் போல் பலர் எழுந்து தடுத்தாலும் வெள்ளையன் கல்வியில் தனக்கொரு யாழ்பாண மேட்டிமை அடிமை கூட்டத்தை உருவாக்கினான் அது மதம் மாறிய கூட்டமாகவும் இருந்தது

இந்த கூட்டம் வெள்ளையனின் அனைத்து குழப்பங்களுக்கும் பயன்பட்டது

1920களில் அனாரிக தர்மபால சிங்களரிடையே புத்த எழுச்சி ஏற்படுத்தினான், அது பெரிதாக பற்றி எரிந்தது, அதே போல் இந்து எழுச்சி இந்துக்களிடம் இலங்கையில் ஏற்பட்டிருந்தால் காட்சி மாறியிருக்கும் ஆனால் எழாதவாறு மிஷனரி சக்திகள் பார்த்து கொண்டன‌

1950களில் சிங்களும் தமிழரும் மகா ஒற்றுமையாகத்தான் இருந்தார்கள், அவர்கள் குறி இந்தியாவில் இருந்து சென்ற தோட்ட தொழிலாளர்கள் வம்சம் மேல் விழுந்தது

அந்த இனம் வாக்கு வங்கியில் ஆதிக்கம் செலுத்துவதை விரும்பாத ஈழதமிழரும் சிங்களவரும் ஒன்று சேர்ந்துதான் லட்சகணக்கான தமிழர்களை 1950களில் அகதிகளாக அனுப்பினார்கள்

இந்த அவலத்தை மனமார ஏற்றவர் நேரு , நிச்சயம் இது தவறு இலங்கையில் பிறந்த மக்கள் அந்நாட்டு குடிமக்கள் என வாதிட வேண்டிய காமராஜரும் நேருவும் மறுப்பே சொல்லாமல் அகதிகளை பெற்றார்கள்

ஆச்சரியமாக திமுக திக கோஷ்டியும் இந்த அநீதியினை கண்டிக்கவில்லை

இலங்கையின் தனிநாடு கோரிக்கைக்கு பின்பே நிலமைமகள் விபரீதமாயின, அதை கேட்டவர்கள் இந்து தமிழர்க்கள் அல்ல‌

முதன் முதலில் தனிநாடு கேட்டது சாமுவேல் செல்வநாயகம் எனும் செல்வா, அவர் மலேசியாவில் பிறந்த கிறிஸ்தவர் , இவர்தான் தனி ஈழம் கேட்டார்

அவர் தனி சைவநாடு கேட்டிருந்தால்,இந்துக்களுக்கு ஒரு நாடு கேட்டிருந்தால் குறைந்தபட்சம் இந்தியா நேபாளம் (அப்பொழுது இந்து அரசர் இருந்தார்) போன்றவையாவது ஆதரவு தெரிவித்திருக்கும்

ஏன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பாவது ஆதரித்திருக்கும்

ஆனால் வெறும் “தமிழர்” உணர்வில் இந்து எனும் வார்த்தையினை அவர் மறைத்தார் அல்லது மிஷனரி சதி மறைக்க வைத்தது

அடுத்து நடந்த தவறு இந்தியாவில் பிரிவினைவாதம் பேசிகொண்டிருந்த ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதியிடம் தனி தமிழீழம் என அவர்கள் ஆதரவு கோரியது

இதுதான் இந்தியாவுக்கு மிகபெரிய எச்சரிக்கை அல்லது கோபம்

தன் நாட்டில் பிரிவினை பேசும் திராவிட கோஷ்டியிடம் தமிழ் ஈழம் அமைய யாழ்பாண செல்வநாயகம் வந்ததை டெல்லி சுத்தமாக ரசிக்கவில்லை

இந்த தொடக்கம் அப்படியே முழு கோணலானது பின் அது ஆயுதபோராட்டமாக வந்தபொழுதும் “தமிழ்” “தமிழர்” “தமிழ்மொழி” என ஈழ தமிழர் தமிழக பிரிவினைவாதிகளிடமே சரணடைந்தனர், இது இன்னும் இந்திய அரசுக்கு கோபத்தை மூட்டியது

இந்து எனும் வார்த்தை அழிக்கபட்டு தமிழர் என்றானாலும் அதில் மலையக தமிழர் வரவில்லை, அது இன்னும் சிக்கலானது இந்தியா இதனை குறித்துகொண்டது

எனினும் 1984ல் கொழும்பு கலவரத்துக்கு பின் நேரடியாக களமிறங்கிய இந்திரா போராளி குழுக்களை வளர்த்தார்

அப்பொழுதும் இந்திய அரசை நெருங்காமல் தமிழக அரசியல்வாதிகளையே நம்பினார்கள் போராளிகள், பிரபாகரன் செய்த மிகபெரிய தவறு இது

அவன் மட்டும் செல்வநாயகம் எனும் மிஷனரி வழியில் “தமிழ்” என கிளம்பாமல் “இந்து ஈழம்” என கிளம்பியிருந்தால் காட்சிகள் மாறியிருக்கும்

அதன் பின் திராவிட கும்பலோடு சேர்ந்து புலிகள் செய்த அட்டகாசமும், புலிகளை 2009ல் திராவிட கும்பல் கைவிட்டு அந்த புலிகூட்டம் ஒழிந்ததும் எல்லோரும் அறிந்தது

பிரபாகரனின் போராட்டம் மிக சரியானது ஆனால் தமிழக திராவிட கும்பலை நம்பி இந்திய அரசை அவன் பகைத்தது முழு முட்டாள்தனம்

இந்த காட்சிக்கு பின்புதான் இந்தியாவில் இந்து அபிமான நரேந்திரமோடி அரசு வந்து இந்து எழுச்சி ஏற்பட்டது, அப்பொழுதே இலங்கையின் இந்து இயக்கங்கள் மெல்ல உணர ஆரம்பித்தன‌

தமிழக பிரிவினைவாத கும்பலால் தாங்கள் கண்டது அழிவு என்பதையும் மிஷனரிகளின் “தமிழ்” உணர்வால் தாங்கள் இழந்ததையும் உணர்ந்தார்கள்

ஆம், கவனியுங்கள்

இந்திய அரசை மீறி தமிழக திராவிட கும்பலால் இலங்கை தமிழருக்கு ஒன்றும் செய்யமுடியவில்லை குழப்பமும் சாவும் கொலையும் மட்டும் நடந்தன‌

1960களில் “4 கோடி தமிழரும் இறங்கி நடந்தால் கடலும் திடல்தானே” என்ற அண்ணா இலங்கைக்கு செல்லமுடியவில்லை

முரசொலியில் கவிதை வடித்தும் போராளி குழுக்களுடன் உறவும் கொண்டிருந்த கருணாநிதியால் முடியவில்லை

ஈழதமிழரின் தெய்வம் என கருதபட்ட எம்ஜி ராமசந்திரனாலும் இலங்கைக்கு செல்லமுடியவில்லை

வைகோ உள்ளிட்டவர்கள் திருட்டுதனமாக சென்றவர்கள், அவர்களால் ஒரு மாற்றமும் வராது

அகில இந்திய தலமை ஒரு இந்துவினை அனுப்பி அங்கு இந்துக்களாக இலங்கை தமிழரை ஒன்றிணைக்காதவரை எதுவும் மாறாது என்பது 1980களிலே சொல்லபட்ட விஷயம்

இந்திரா மிக திறமையானவர், ஆனால் இந்து வடிவில் இலங்கை தமிழரை ஒருங்கிணைக்க தயங்கினார் அது இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வலுபடுத்தும் என ஒரு அச்சம் கொண்டார்

ராஜிவும் அதையே செய்தார்

இப்பொழுது காட்சிகள் மாறுகின்றன, இந்திய மத்திய அரசும் இந்துக்கள் வலி அறிந்த தமிழரை அங்கு அனுப்ப முடிவு கொண்டது, தமிழகத்தின் தேசிய அடையாளம் ஒன்று அங்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்தது

இலங்கை மக்களும் திராவிட மோசடியால் அல்லது திராவிட மாடலால் நடுதெருவுக்கு வந்ததை உணர்ந்து வாய்ப்புக்கு காத்திருந்தார்கள்

அந்நிலையில்தான் இப்பொழுது அண்ணாமலை இலங்கை பயணம் மேற்கொண்டிருக்கின்றார்

சுமார் 70 வருடம் சிக்கல் கொண்ட இலங்கை தமிழர் விவகாரத்தில் முதன் முதலில் அதிகார பூர்வ இந்து தமிழனாக, இந்திய தமிழ் அடையாளமாக சென்றிருப்பவர் அண்ணாமலை

இது அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் என யாரும் செய்யாத அல்லது செய்யமுடியா சாதனை

அங்கு சென்று சீதை சிறைவைக்கபட்ட ஆலயம் முதல் இன்னும் பல ஆலயங்களுக்கு சென்ற முதல் இந்திய தலைவர் அண்ணாமலை

ஆம், இந்தியாவின் இளம் தலைவர் அதுவும் அமித்ஷாவின் நேரடி நியமணத்தில் இருக்கும் இளம் சிங்கம் ஒன்று இலங்கை தீவில் கால்வைத்து இந்து ஆலயங்களுக்கு செல்வது மிகபெரிய எச்சரிக்கை அல்லது ராஜதந்திர அரசியல்

இந்தியா இலங்கை இந்துக்களுக்காக கால் பதித்துவிட்டது என்பதை சொல்லும் மிகபெரிய மொழி

தமிழக ஈழ வியாபார கும்பலின் முகங்களெல்லாம் கிழிந்து, இதுகாலம் இலங்கையில் கால்வைக்க கூட வழியில்லா மோசடி கும்பல் இது என அவர்கள் அவமானபட்டு நிற்கும் நேரமிது

இந்தியாவுக்கு இலங்கைக்கு கடல்வழி பாலம் அமைப்பது ஒரு கனவு, தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரை ஒரு பாலம் சுமார், 38 மைலுக்கு ஒரு பாலம் அமைக்கவேண்டும் என்பது கனவு

அப்படி செய்தால் தனக்கு சரியல்ல என்பது சீனாவின் அச்சம் அது இலங்கையினை தூண்டிவிட்டது , இலங்கையிலும் சில எதிர்ப்புகள் வந்தன‌

இந்தியா இப்பொழுது ஒரு பாலம் அமைத்து இலங்கையின் சிவாலயங்களை இந்தியாவோடு தரை ரீதியாக சேர்க்கும் திட்டத்துக்கு வந்திருப்பதாக தெரிகின்றது, இதனை ஈழ இந்துக்கள் நிச்சயம் வரவேற்பார்கள்

இந்துக்களின் துணையோடு ஒரு திட்டத்தை இந்தியா முன்னெடுக்கின்றது என்பது தெரிகின்றது, “சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” எனும் பாரதியின் வரி நனவாகும் நேரம் இது

இந்த இடத்தில் நாம் அய்யா வைகுண்டரின் வரிகளை நினைத்து பார்க்கலாம்

17ம் நூற்றாண்டில் வாழ்ந்த அந்த மகான் காமராஜரை பற்றி சில வரிகளை தன் நூலில் பாடினார்

“விருதுபட்டி பெற்றபிள்ளை பிள்ளைகளில் நல்ல பிள்ளை”

அதே வைகுண்டர் இலங்கை பற்றியும் பாடினார்

“தென்னக தீவதிலே செந்தீ மூழுதய்யா, ஆனாலும் என் தம்பியே நீயே ஆள்வாய்”

அய்யா வைகுண்டர் காமராஜரை போல ஒருவரை அன்றே அடையாளம் காட்டினார், அந்த அதிசய பிறப்பு அண்ணாமலையாக இருக்கலாம் என்பது எம் போன்ற அய்யாமேல் நம்பிக்கை கொண்டோரின் கணிப்பு

அய்யா வைகுண்டரின் கணிப்புபடி அண்ணாமலை பெரும் விஷயங்களை செய்யட்டும், தமிழகம் திராவிட மாயைகள் மிஷனரி சதிவலைகளை கிழித்தெறிந்து தேசியத்தில் தன்னை நிறுத்தட்டும்

இலங்கை இந்து தமிழருக்கு உரிய உரிமை கிடைக்க இந்து இந்தியாவும் அதன் ஆளும் கட்சியும் துணை நிற்கட்டும்

வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்