இந்து அறநிலையதுறைக்கு ஒரு அரசியல்வாதி எப்படி தலமையேற்க முடியும் என்பதுதான் தமிழக இந்து ஆலய நிர்வாகங்களில் எழும் மிகபெரிய குழப்பம்
இந்து அறநிலையதுறை ஆன்மீக ஆலயங்களை பரிபாலனம் செய்ய ஏற்படுத்தபட்டது என்றால் அதற்கு ஒரு மடாதிபதியோ அல்லது துறவிகளின் கூட்டமைப்போதான் அதற்கு தலமை ஏற்றிருக்க வேண்டும்
அது அல்லாது ஆன்மீகமோ மத சம்பிரதாயங்களோ வேதங்களோ அதன் பாரம்பரியமோ அறியாதவர்களை அமைச்சர்கள் என்பதும் அவர்கள் கீழ் ஆலயங்கள் இயங்க வேண்டும் என்பது சரியல்ல
இங்கு நடந்துவிட்ட குழப்பம் ஆலயத்தை புனிதமான ஆன்மீக இடமாக கருதாமல் வியாபார தலமாக கருதியதே
கிறிஸ்தவ ஆலயங்கள் கிறிஸ்தவ போதகர்கள் அவர்கள் மத அதிபர்களிடம் இருக்கின்றது, இஸ்லாமிய வழிபாட்டுதலங்கள் அவர்கள் மத விற்பனர்களால் வழிநடத்தபடுகின்றது
ஆனால் இந்து அறநிலையதுறை மட்டும் அரச நிர்வாகம் என யார் யாராலோ வழிநடத்தபடும் என்பது எப்படி சரியானதாக இருக்கமுடியும்?
இந்து ஆலயங்கள் அரசிடம் இருந்து விடுபட வேண்டும் என்பது இறுதி இலக்காக இருந்தாலும் இப்போதைய அவசரதேவை அறநிலையதுறையின் அதிகாரம் இந்து துறவிகள் கூட்டமைப்பு கைக்கு செல்லவேண்டும், அதுதான் சரியானதாக இருக்கமுடியும் தேவையற்ற சர்ச்சைகளை களைவதாகவும் இந்துமதம் வாழ வழி செய்வதாகவும் இருக்கமுடியும்
இறை, தொண்டு இவைகளை கொஞ்சமும் நம்பிக்கையில்லாதோர், மாற்று நம்பிக்கை உள்ளோர் பதவிகள் வகிப்பதால் வரும் தீமைகள்
முப்போதும் திருமேனி தீண்டுவோருக்குக் (குருக்கள், பூசாரிகள், பட்டர்கள்) கனிசமான, நியாயமான, இன்றைய காலத்திற்குத் தக்க ஊதியம் இல்லாமை
கோவிலுக்கு வரும் கணக்கில்லாத அளவு வருமானத்தை கோவில், பக்தர்களுக்குத் தேவையான வசதிகளுக்கு முறையாக செலவிட நினைக்காமை. (ஆங்காங்கு இலவச பாத்ரூம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், உணவு, பூஜைக்குத் தேவையான நந்தவனங்கள், தோட்டங்கள், லாக்ரூம், பாதுகாப்பான தங்குமிடங்கள், கல்வி, மருத்துவ வசதிகள், இலவச தொழிற்பயிற்சிகள், சாலை, தர்ம தரிசனம் செய்வோரும் ஒரே தொலைவிலிருந்து இறை தரிசனம் போன்றவைகளைக் கொண்டே திருப்பதி-திருமலை பாலாஜி நம்மை மீண்டும் வரவழைக்கிறார்)
கோவில் சொத்துக்களை, நிலங்களை, இடங்களை அபகரிப்பது அல்லது துணை போவது, கடமை இருந்தும் காரணம் சொல்லி கண்டு கொள்ளாமலிருப்பது….. இத்தனை அட்டூழியங்கள் நடக்கின்றன….