தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிக திறமையானவர், கட்சிக்கு மகா பொருத்தமானவர், இளம் தலைமுறைக்கு மிக சரியான வழியில் தேசியத்தை போதித்து திராவிட மோசடிகளை கிழித்துகொண்டிருப்பவர் என்பது மிகுந்த மகிழ்ச்சியான விஷயம்
பசும்பொன் தேவரின் சாயலில் நாம் அவரை காண்கின்றோம், அவர் ஒரு வரம் என்பதில் சந்தேகமில்லைஆனால் ஒருவகையான வலையில் தன்னை அறியாமல் அவர் சிக்குகின்றார் அல்லது திமுக அதிமுகவின் புரிந்து கொள்ளமுடியா சூழ்ச்சி வலையில் அவர் தடுமாறுகின்றார் என்றே தோன்றுகின்றது
அவர் கொடுக்கும் பேட்டிகள் வலுவானவை ஆனால் அடிக்கடி அவர் பேட்டி கொடுப்பதும் அதை சன்டிவி போன்றவை துரத்தி துரத்தி படமாக்குவதும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகின்றன
அண்ணாமலை எனும் சிங்கத்தை வெறும் காட்சிபொருளாக பாவித்து டிவி மீடியாக்கள் தங்கள் வருமானத்தை வளர்க்கின்றார்களோ எனும் மெல்லிய சந்தேகம் எழுகின்றது
இங்கு பத்திரிகையாளர் சந்திப்பு அவசியம் அதை மகா முக்கிய பிரச்சினைகளில் ஒரு முறை பத்திரிகையினை கூட்டி தெரிவித்தால் போதும்பத்திரிகைகளுக்கும் டிவிக்களுக்கும் செய்தி முழுநேர தொழில், யார் வாயினையாவது கிளறி செய்திகளை வாங்கிகொண்டே இருந்தால் அன்றி அவர்கள் வாழமுடியாது, இதனால் மைக்கை எங்கும் நீட்டியபடிதான் அலைவார்கள்
ஆனால் அரசியல்வாதி அப்படி அல்ல, அவனுக்கு கட்சி முக்கியம் தேர்தல் முக்கியம் ஒவ்வொரு தொகுதியிலும் கட்சி வளர்வது அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவது அதைவிட முக்கியம்
பொதுவாக பாஜக பெரிதாக பேசும் கட்சி அல்ல, தேவையானதை பேசிவிட்டு உழைப்பை மவுனமாக களத்தில்தான் காட்டுவார்கள்மோடியோ, அமித்ஷாவோ, நட்டாவோ அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்திப்பதை காணமுடியாது, அது அவசியமில்லை பத்திரிகையின் செய்தி பசிக்கு நாம் தீனியாக கூடாது என்பது அவர்கள் கொள்கை அது முழுக்க சரி
அண்ணாமலை இதில் சறுக்குகின்றார்தமிழகத்தில் திமுக ஆட்சிமேல் ஒரு வெறுப்பு நிலவுகின்றது, அதனை ஓசைபடாமல் தொகுதிதோறும் தங்களுக்கு சாதகமாக மாற்றும் செயலில் பழனிச்சாமியின் அதிமுக வேலையினை தொடங்கிவிட்டது
அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அது பெரும் அறுவடைக்கு தயாராகின்றது, திமுக அரசின் சொதப்பல்களை மிக சரியாக தங்களுக்கு சாதகமாக்குகின்றது திமுக”ஸ்டாலினுக்கு எடப்பாடி பரவாயில்லை” எனும் பேச்சு வருவது தவிர்க்கமுடியாதது,
இங்கு திமுகவுக்கு மாற்று அதிமுக என பதிந்துவிட்டதுஅங்கு திமுகவுக்கு மாற்று பாஜக என்ற பிம்பம் உருவாக வேண்டும்அண்ணாமலை அதனில் கவனம் செலுத்தி தொகுதி தோறும் வாக்கு மையங்கள் அடிப்படை கட்டமைப்புக்களை உருவாக்க பாடுபடுவதில் கடுமையாக உழைக்க வேண்டும்
அதற்குரிய செயல்களில் கவனம் செலுத்த வேண்டும், இப்போதைய அணுகுமுறை போதாது
பேட்டிகளும் விளக்கங்களும் தகுந்த ஆதாரங்களுடன் மறுப்பும் முக்கிய சிக்கல்களில் தலையீடும் அவ்வப்போது செய்தால் போதும் அதனை அடிக்கடி செய்தால் அண்ணாமலை மீதான பிம்பம் மாறும்
பேட்டிகள் எனும் பெயரில் திமுகவினை சாடுவதாக பத்திரிகை வருமானங்களை பெருக்காமல் கட்சியின் அடிமட்டத்தை வலுபடுத்தும் முயற்சியில் அண்ணாமலை கவனம் செலுத்தவேண்டும் அதுதான் அவரின் கனவுக்கும் உழைப்புக்கும் பலனளிக்கும் என்பதே தமிழக தேசாபிமானிகளின் எதிர்பார்ப்பு
மோடி அமித்ஷா வழியில் அவர் கட்சியினை வலுபடுத்தட்டும், களத்தின் கட்டுமானத்தை வலுபடுத்தி தேர்தலுக்காக தயாராகட்டும் என்பதே தேசாபிமானிகளின் வேண்டுகோள்,
அந்த சிங்கம் வெறும் வேடிக்கை பொருளாகிவிட கூடாது மீடியாக்களின் சதியில் விழுந்துவிட கூடாது என்பதுதான் தேசாபிமானிகளின் கோரிக்கை
உண்மை. நல்ல அறிவுரை…. அவர் காட்சி பொருளாகவும், கேலி பொருளாகவும் மாற கூடாது. திறமையானவர்கள் பத்திரிகைகளை தவிர்த்து வருகின்றனர். ஜெயலலிதா இதே பாணியை தான் கடை பிடித்தார். இதை அண்ணாமலைக்கு எடுத்து சொல்ல வேண்டும். மௌனமாக மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதுவே சிறந்த வழி.
மிக சரியான ஆலோசனை
அது மாதிரி நானும் திராவிடன் தான், நானும் பெரியாரிஸ்ட் தான், ஹிந்தியை நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை என்று அண்ணாமலை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.
கிட்டத்தட்ட அதே எண்ணங்களைத்தான் மதுரை மரியதாஸ் என்று சொல்லி இருக்கிறார்