நிச்சயம் அந்த பிரபாகரன் தனிபெரும் ஆளுமை

நிச்சயம் அந்த பிரபாகரன் தனிபெரும் ஆளுமை சந்தேகமில்லை, மாபெரும் அவுரங்கசீப்பை எதிர்த்து இந்துராஜ்ஜியம் கண்ட சிவாஜிக்கும் பிரபாகரனுக்கும் தொடக்க கால ஒற்றுமை நிரம்ப உண்டு

ஆனால் சிவாஜி இந்துக்களுக்கு நாடு என்பதில் இந்துவாக வென்றார், பிரபாகரன் தொடக்கத்தில் முருக பக்தராக மிக சரியாகத்தான் இருந்தார் ஆனால் ஐரோப்பிய தொடர்பும் மிஷனரி அரசியலும் அவரை அழுத்தியதில் இந்து ஈழம் என்பது தமிழீழமாகி எல்லாம் திசைமாறிற்று

பிரபாகரனுக்கும் இந்துஈழம் எனும் அபிமானம் இருந்தது, ராஜராஜசோழனின் இந்துதமிழ் ராஜ்ஜியம் அவரின் கனவாக இருந்தது, ஆனால் தமிழக நாத்திககும்பல் இந்து எதிர்ப்பு கும்பலிடம் தமிழக அரசியல் சிக்கியிருந்த நேரம், இந்தியாவில் பாஜக போன்ற அமைப்பு வலுவாக இல்லா நேரம் அவரிடம் வேறு தெரிவு இல்லை

30 கிமீ தொலைவில் தமிழகம் ஒரே அடைக்கலம், அந்த தமிழகம் நாத்திக இந்து எதிர்ப்பு கோஷ்டிகளிடம் அடைக்கலம் என்றபின் தமிழ் எனும் குறுகிய வட்டத்தில் சிக்கினார் பிரபாகரன்

அகில இந்திய அளவில் தமிழீழத்துக்கு ஆதரவு கிடைக்காமல் போன காரணம் இதுதான், அது இந்து ராஜ்ஜியமாக கோரபட்டிருந்தால் அகில இந்திய ஆதரவு கிடைத்திருக்கலாம்

எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் , ஒரு இந்தியனாக அவர் இந்திய ராணுவத்துடனும் ராஜிவுடனும் மோதியவர் என்பதை தாண்டி பொதுவான சில நியாங்களை அலசலாம்

அந்த பிரபாகரனின் தொடக்கமே ஆயுதபலத்தால் நாடு அடைவது என சரியாக தொடங்கிற்று, மிக சிறிய வயதிலே களத்துக்கு வந்து செட்டி தனபால சிங்கம், குட்டிமணி என யார் யாரிடமோ சேர்ந்து போராடி பார்த்தவர், ஆனால் யாரும் சரியான வகையில் போராடியதாக அவருக்கு தெரியவில்லை

அன்று சுமார் 30 ஈழபோராட்ட குழுக்கள் இருந்தன, போராட்டம் எனும் பெயரில் கொள்ளை அடிப்பது கேட்டால் சுதந்திர இயக்கம் என சொல்லிகொள்வது என அவை குழப்பிகொண்டிருந்தன, உயிருக்கு அஞ்சிய கூட்டமும் இருந்தது

பிரபாகரனே முதன் முதலில் உயிரை துச்சமென மதித்த இயக்கத்தை உருவாக்கினார், அதன் கட்டுகோப்பும் அஞ்சாமையும் தீர்க்கமும் மக்களிடம் நம்பிக்கை பெற்றன‌

அந்த நம்பிக்கைதான் அவனை வளர்த்தது

காவல் துறையுடன் மோதி பஸ்தியம் பிள்ளை போன்ற பெரும் அதிகாரிகளை பிரபாகரன் போட்டு தள்ளியபொழுது மெல்ல மெல்ல மக்களுக்கு அவன் மேல் நம்பிக்கை வந்தது

ஒரு சிறிய குழு உயிருக்கு அஞ்சாத பெரும் தாக்குதலை செய்தபொழுது அவனை நம்பினார்கள், அவனும் அந்த நம்பிக்கையினை காப்பாற்றினான், அதுவரை பெயருக்கு நடந்த போராட்டத்தை வெகுதீவிரமாக முன்னெடுத்தது பிரபாரன் மட்டுமே அதை ஒப்புகொள்ள வேண்டும்

உண்மையில் சிங்களம் பிரபாகரனிடம் தோற்றிருந்தது, வடக்கே தனிபெரும் சக்தியாக மக்கள் அவனை உயர்த்தியிருந்தார்கள், அது அவர்கள்நாடு அவர்கள் சிக்கல், எளிதாக சிங்களனை வழிக்கு கொண்டுவரும் அளவு பிரபாகரன் உருவானார்

ஆனால் அதன்பின் நடந்ததுதான் இந்தியாவின் ஆட்டம்

இந்திராகாந்தி வலிய இலங்கை அரசியலில் நுழைந்தார், இலங்கையின் அமெரிக்க பாகிஸ்தான் சார்பும் திரிகோணமலை துறைமுக சிக்கலும் அவரை கொழும்பு கலவரத்தை முன்னிட்டு அங்கு இழுத்தன‌

பிரபாகரன் மிக நிதானமாக இருந்த இடம் அது, இந்திய தயவில் போராடினால் இந்தியாவின் கைபாவையாவோம் என அழகாக மறுத்தார் ஒதுங்கினார் அது மிக சரியானது

ஆனால் இந்திய உளவுதுறை இதர இயக்கங்களை வளர்க்க ஆரம்பித்தது, இது புலிகளுக்கு பெரிய பின்னடைவு

காரணம் அந்த ஈழம் சிறிய பகுதி அங்கு போராடவருபவர் குறைவு அவற்றை ஆளாளுக்கு ஒரு குழுவில் இணைத்து ஆளுக்கொரு அதிகாரம் போராட்டம் என்றால் நிச்சயம் இலக்கு மாறும்

அதில் பிரபாகரன் தயங்கினார் ஆனால் எம்ஜிஆர் எனும் முகமூடியுடன் அவரை வளைத்தது இந்தியா, தமிழகத்தில் கால் வைக்க வேண்டிய அவசியம் இருந்ததால் பிரபாகரனும் அதை ஏற்றார் வெறு தெரிவு இல்லை

எனினும் போராளிகுழுக்கள் ஒன்றுசேர கூடாது எனும் தந்திரமும் சில வல்லரசுகளிடம் இருந்தன, எனினும் இந்திராவும் எம்ஜிஆரும் இருந்தவரை பெரும் சிக்கல் இல்லை

இருவரும் இல்லா காலமே சிக்கல் உருவானது, கடைசிவரை எம்ஜிராம்சந்திரன் எனும் மன்னன் இருந்தவரை பிரபாகரனை கைவிடவில்லை, பிரபாகரனும் தன்னை ஆதரித்த எம்ஜிஆர்மேல் ஒரு பழிவருமாறும் செய்ததுமில்லை

ஈழத்தின் பெரும் குழப்பத்துக்கு காரணம் இருவர் முதலானவர் ராஜிவ்காந்தி இரண்டமாவர் அந்நாளைய இலங்கை இந்திய தூதர் தீட்சித்

இந்த இருவரும் குழப்பிய குழப்பமே ஜெயவர்த்தனேவுக்கு அதிர்ஷ்டம்

ஜெயவர்த்தனே மிஞ்சினால் கெஞ்சுவார் கெஞ்சினால் மிஞ்சுவார், அவரிடம் ராஜிவ் கெஞ்சியதுதான் சிக்கல்

ராஜிவின் ஆப்பரேஷன் பூமாலை தைரியமான நடவடிக்கை ஆனால் அதே தைரியத்தை தமிழருக்கான தீர்வில் அவர் காட்டவில்லை, எது செய்தாலும் போராளிகள் ஏற்றுகொள்ள வேண்டும் எனும் திட்டம் ஒன்றேதான் இருந்தது உபயம் மிஸ்டர் தீட்சித்

இதில்தான் பிரபாகரனின் விதி மாறிபோனது

அமைதிபடையுடன் அவன் மோதவேண்டிய சூழல் வந்தது, காரணம் தன் லட்சியமான தமிழீழத்தை அவன் கைவிட தயாராக இல்லை, ஆயுதங்களை கீழே வை என ராஜிவ் மிரட்டியபொழுது அது தமிழீழத்தின் தடை என அவன் போராடினான்

இன்று உக்ரைனியர் காட்டும் தீரத்தை அன்றே இந்தியபடையிடம் காட்டியவன் பிரபாகரன், அந்த வீரம் நிச்சயம் சிலாகிப்புகுரியது

இந்திய அமைதிபடையும் பிரபாகரனை உடனே பிடித்திருக்கமுடியும் அல்லது கொன்றிருக்கமுடியுமா என்றால் முடியும் ஆனால் இலங்கையில் நிலைக்க ஒரு காரணம் தேவைபட்ட காலம் அது

எல்லாம் அரசியல், சர்வதேச அரசியல்

இந்த அரசியல் குழப்பத்தில் தமிழக சுயநல அரசியல்வாதிகளான திராவிட கோஷ்டிகளிடம் பிரபாகரன் அடைக்கலமானார், அவர்கள் தமிழ் எனும் அடிப்படையில் பெரும் போராட்டத்துடன் தங்களை காப்பார்கள் என நம்பினான்

பிரபாகரனின் பரிதாப காலம் இங்குதான் தொடங்கிற்று

இந்தியா தன்னை அடியாளாக உருவாக்க விரும்பியதை சாக்சமாக தவித்த பிரபாகரன் தன்னை அறியாமல் திராவிட கும்பல் தன்னை ஒருஅடியாள் அரசியல் செய்வதை உணரவில்லை, டெல்லிக்கு எதிராக தமிழக அரசியல்வாதிகள் தன்னை பயன்படுத்துவதை அவர் முதலில் உணரவில்லை

கருணாநிதி டெல்லிக்கு எதிராகத்தான் தன்னை நிறுத்துகின்றார் என்பதை அறியாமல் பெரும் தவறினைசெய்தார் அதைவிட பெரும் தவறு ராஜிவ் கொலையில் தங்கள் நிலையினை முழுக்க விளக்காதது

அது ஏன் என்பதன் மர்மம் அவருக்கு மட்டும் தெரியும், அதே நேரம் பிரபாகரன் இல்லா புலிகூட்டம் தங்களுக்கு வேண்டும் என இந்தியதரப்பு விரும்பியதும் அவருக்கு தெரியும்

தன் ஆயுதவழி தவறு , இந்தியபடை வெளியேறியதுதவறு என எல்லோரும் சொன்னாலும் இல்லை அது மிக சரியானது என தன் யானையிறவு வெற்றியில் பறைசாற்றினார்

30 ஆண்டுகால போராட்டத்தின் வெற்றி அது, நிச்சயம் தமிழ் ஈழத்தை அறிவித்திருக்கலாம்

ஆமால் திமுக வாஜ்பாய் அரசில் அமைதிகாத்தது, வைகோ அமைதிகாத்தது என்பதால் மனம் உடைந்தார் பிரபாகரன்

உண்மையில் பிரபாகரனின் மனம் இந்தியாவினைத்தான் விரும்பிற்று , இந்தியாவோடு நிரந்தர பகையினை கொண்டிருக்க அவர் விரும்பவில்லை

நடந்ததை தாண்டி ஈழமக்களுக்கு ஒருதீர்வு வேண்டும் அது இந்தியா தலமையில் வேண்டும் என நம்பினார், வேண்டினார்

இந்த இடத்தில் அவரின் அணுகுமுறை சரியாக இருந்தது

1991க்கு பின் எந்த தாக்குதலையும் அவர் இந்தியாமேல்செய்யவில்லை இந்தியாவினை எதிர்க்கவுமிலை இந்தியா சிக்கலாகும்படி எந்த முடிவையும் எடுக்கவில்லை

பிரபாகரனின் மிகபெரிய தவறும் இங்குதான் தொடங்கிற்று, கடைசிவரை டெல்லியினை அவர் நெருங்கவில்லை மாறாக தமிழக மோசடி கும்பலை அவர் நம்பினார்

ஆளாளுக்கு தமிழகத்தில் பிரபாகரன் பிம்பம் காட்டி சம்பாதிக்க தொடங்கியபொழுது அவர் சுதாரிக்கவில்லை

தமிழக திராவிட மற்றும் பிரிவினைவாத கோஷ்டிகள் பிரபாகரனை கொண்டாடியபொழுது அவைகள் தன்னை காக்கும் என நம்பினார், ஆனால் அவர்களின் சுயநலம் அவர் அறிந்தாரில்லை

இங்குதான் பிரபாகரன் சரிந்த்தார்

தமிழக அரசியல் பிடியில் இருந்து போலிதமிழ் பிடியில் இருந்து தன்னைவிடுவித்து இந்திய அரசுடன் நேரடிதொடர்பு கொண்டிருந்தால் பல விஷயம் மாறியிருக்கும்

ஆனால் நடக்கவிடாதபடி தமிழ் மயக்கம் அவரை சூழ்ந்தது எல்லாம் மாறிற்று

2002ல் அவர் நினைத்திருந்தாலும் தமிழீழம் அமைத்து தாருங்கள் திரிகோணமலையினை அமெரிக்காவுக்கு தருகின்றேன் என அறிவித்திருந்தால் எல்லாம் நடந்திருக்கும்

ஆனால் அது இந்தியாவுக்கு எதிரானது என உணர்ந்தார், இந்திய ஆசியுடனே தமிழீழம் அமையவேண்டும் அதுதான் எல்லாவற்றுக்கும் எதிர்காலத்துக்கும் நல்லது என்பது அவர் நோக்கமாய் இருந்தது

அதே நேரம் திராவிட கும்பல் இதை அனுமதிக்காமல் குழப்பும் என்பதை அவர் கணிக்க தவறினார்

கருணாநிதி, வைகோ, கஸ்பர் என அவர் நம்பியதெல்லாம் பலனற்றது தமிழக அரசியல்வாதிகளால் ஒரு எல்லையினை தாண்டமுடியாது என அவர் உணர்ந்தபொழுது தலைக்கு கத்தி வந்திருந்தது

பின் எல்லாம் முடிந்தது

நிச்சயம் அவர் ஒரு இந்துவாக தன்னை அறிவித்து அது இந்துதேசம் என முழங்கியிருந்தால் காட்சி மாறியிருக்கும், அல்லது 2006ல் வலுவான மோடி அரசு இருந்திருந்தால் முள்ளிவாய்க்காலில் அவ்வளவு சனம் செத்திருக்காது

பிரபாகரனிடம் தனிநாடு அடைய என்ன செய்தாலும் தகும் எனும் அர்பணிப்பு இருந்தது

இப்படி நடந்தால் ஈழம் கிடைக்கும் என யார்சொன்னாலும் ஏற்றுகொண்டு கண்மூடிதனமாக பாயும் ஒரு குணம் அவருக்கு இருந்தது

அவரின் பலம் அது, பலவீனமும் அது

இந்தியா, அமெரிக்கா, இலங்கை, திராவிட கட்சிகள் , இலங்கை தமிழ்கட்சிகள் என நாடுகளும், இயக்கங்களும் உளவு நிறுவணங்களும் அவர்கள் விருப்பத்திற்கு வளைக்கபார்த்தன, வளைத்துவிட்டு அவரை முடக்கவும் பார்த்தன‌

யாழ்பாணத்தார், கிறிஸ்தவ மடாதிபதிகள், இந்திரா, பிரேமதாச, ராஜிவ்காந்தி கருணாநிதி, வைகோ கும்பல் என ஆளாளுக்கு அவரை பயன்படுத்தினார்கள்

ஈழம் என்ற ஒற்றை அங்குசத்தை காட்டி அந்த யானையினை இஷ்டத்திற்கு வித்தைகாட்ட வைத்தார்கள். அந்த அப்பாவி பிரபாகரனும் நம்பினார்

இக்கொலையினை செய் ஈழம் மலரும் என அவனை தூண்டிவிட்டனர், ஒவ்வொரு கொலைக்கு பின்னாலும் ஒவ்வொரு கும்பல் பலன் பெற்றது

எத்தனையோ பேர் ஈழம் பெயரை சொல்லி பிரபாகரனை ஏமாற்றி காரியம் சாதித்தனர், இது இலங்கை தமிழ்கட்சியிலிருந்து தொடங்கி அமெரிக்கா வரை நீண்டது

முடிந்தவரை யாரிடமும் சிக்காமல் அவர் ஓடுவதும் , வேறுவழியின்றி சிக்கிவிட்டால் அதிலிருந்து வெளிவர அவர் கோரமுகம் காட்டுவதும் அவர் வாழ்வெல்லாம் தொடர்ந்தது, தங்களை வெறும் கூலிபடையாக பாவித்த ஒவ்வொருவரையும் குறிவைத்து தூக்கினார்

இதில் அவர் செய்ய தவறியது தனக்கு தவறான வழிகாட்டிய திராவிட தலைவர்களை

காலம் கொஞ்சம் அவகாசம் கொடுத்திருந்தால் அவர்களையும் உண்மையில் சாத்தியிருப்பார் அதற்குள் காலம் முந்திகொண்டது தமிழக துரதிருஷ்டம் நீடிக்கின்றது

ஆயுதம் எவ்வளவு பெரும் அழிவில் முடிக்கும் என அவருக்கு தெரியவில்லை , எப்போது ஆயுதம் தூக்கவேண்டும் எனதெரிந்த அவருக்கு எப்போது கீழே வைக்க வேண்டும் என தெரியவில்லை

பிரபாகரன் இந்த விஷயத்தில் சிக்கினார், பெரும் அழிவினை கொடுத்தார்

1986க்கு முற்பட்ட பிரபாகரனை எல்லோருக்கும் பிடித்திருந்தது, வெறும் 28 வயது இளைஞனாக அவர் தலைவனாக நின்றது அந்நாளில் பெரும் ஆச்சரியம்

அந்த பிரபாகரன் மேல் எதிரியும் குற்றம் சொல்லமுடியாது

பெரும் எதிர்காலமும் வாய்ப்பும் அவருக்கு அன்று இருந்தது. ஆனால் எடுப்பார் கைபிள்ளையாக மாறி எல்லாம் நாசமாயிற்று

என்ன இருந்தாலும் பாரதத்து துரியோதனன் வீரசுவர்க்கம் அடைந்தது போல பிரபாகரனும் அடைந்தான் என்பதுதான் வரலாறு

பாரதபோரின் அழிவுக்கு துரியோதனன் முழு காரணம் எனினும் கடைசிவரை அவன் துணிவாக தனியாக போராடியதால் அவனும் வீரன் என பெயர்பெற்று நிற்கின்றான்

பிரபாகரனும் அப்படியே, சந்தேகமே இல்லை

துரியனை கெடுத்தது சகுனி என்றால் பிரபாகரனை கெடுத்த சகுனிகள் தமிழகம் முதல் அமெரிக்கா வரை உண்டு

துரியன் வில்லனாக காட்டபட்டாலும் அவனுக்குள் ஏகபட்ட வலி இருந்தது

கண்தெரியா தந்தை பிள்ளைகள் முகம் காணா தாய், தன்னை நம்பிய தம்பியர் 100 பேர் என அவனுக்கு பெரும் அழுத்தம் இருந்தது, தன் ராஜ்ஜியத்தை காக்கும் கடப்பாடும் அழுத்தியது

அதைத்தான் சகுனி பயன்படுத்தி அவனை வீழ்த்தினான்

பிரபாகரனுக்கும் அதுதான் நடந்தது, ஒருவகையில் அவன் கொடூர கொலையாளி, படுபயங்கர இயக்கத்தை நடத்தியவன். ஆனால் மறுபக்கம் அவன் பெரும் அப்பாவி, ஏமாளி

ஒரு பயலும் அந்த பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தமாட்டான், நாம் செலுத்துவோம்

துரியோதனன் வீரசுவர்க்கம் அடைந்ததுபோல் அவன் அடையட்டும்

நிச்சயம் காங்கிரஸால் இந்தியாவில் ஏற்பட்ட குழப்பங்களை விட இலங்கையில் ஏற்பட்ட குழப்பம் அதிகம், ஒன்று தலையிடாமல் இருந்திருக்க வேண்டும் தலையிட்டால் உரிய நீதி செய்திருக்க வேண்டும்

ஈழதமிழருக்கு உதவபோகின்றோம் என சென்று பிரபாகரனுடன் மோதிவிட்டு ஒதுங்கியதும் சரியல்ல, பிரபாகரன் தங்கள் எதிரி என கருதினால் அவர் இல்லாதபின் தலையிடாமல் இருந்ததும் முழுக்க சரியல்ல‌

ஈழபிரச்சினை என்பது அண்டை நாட்டு பிரச்சினை என ஒதுங்காமல் அதில் தலையிட்டு அந்த விவகாரம் பெரிதாக வெடிக்க காரணம் இந்தியா

இந்தியாதலையிடாவிட்டால் ஒன்று இலங்கை வென்றிருக்கும் அல்லது பிரபாகரன் வென்றிருப்பார் இல்லை சர்வதேச சிக்கலாகியிருகும்

உள்ளே புகுந்து இந்தியாவின் காங்கிரஸ் அரசு இதனை குழப்பி அடித்துவிட்டு தானும் குழம்பி எல்லோரையும் குழப்பிவிட்டு வந்தது இந்தியா

ராஜிவ் செய்த குழப்பத்தை ராஜிவின் கொலைக்கு பழிவாங்குதலாக முடித்த காங்கிரஸ் கடைசி நேரத்தில் அல்லது பின்னராவது களமிறங்கியிருக்க வேண்டும், அதன் வழக்கமான குழப்பம் தொடர்ந்ததுதான் சோகம்

இப்பொழுது மோடி தலமையில் புதுவீச்சில் இலங்கையில் கால்பதிக்கின்றது இந்தியா ,இனி ஒவ்வொரு உண்மையாக வெளிவரும் காங்கிரஸின் பெரும் தவறுகளும் வரும்

பிரபாகரன் இனி இல்லைதான் ஆனால் அவர் கொடுத்த எழுச்சி சாதாரணம் அல்ல, கடைசிவரை களத்தில் நின்று இந்தியாவினை ஒரு காலமும் எதிர்க்கமாட்டேன், இந்தியா நான் செய்தது தவறு என்றால் என்னை கொல்லட்டும் அதற்காக இன்னொரு வல்லரசிடம் ஈழத்தை ஒப்படைத்து பெரும் தவறு செய்யமாட்டேன்

எக்காலமாயினும் இந்தியா கொடுக்கும் தீர்வே ஈழமக்களுக்கு சரியானது அதற்காக நான் சாகவும்தயார் என செத்த அந்த மாவீரனை மறக்கமுடியாது

அவன் கொஞ்சம் விட்டுகொடுத்திருந்தால் இலங்கையின் துறைமுகங்கள் மேல் ஆசை கொண்ட நாட்டிற்கு ஈழத்தை விட்டுகொடுத்து தானும் சுகவாழ்வு வாழ்ந்திருக்கலாம், ஆனால் இந்திய உறவு ஒன்றுக்காக செத்தான் அதை மறுக்க முடியாது

அவ்வகையில் அந்த பிரபாகரனை ஒரு இந்தியனாக புரிந்துகொள்ள வேண்டும்

காங்கிரசும் திராவிடமும் இந்தியாவுக்கு எவ்வளவு சாபமோ அவ்வளவு இலங்கைக்கும் சாபம் என்பதன் சாட்சி அந்த பிரபாகரன்

இன்று அவனுக்கு நினைவுநாள், அவனால் காசும் பணமும் வாழ்வும் வாக்கும் பெற்ற யாரும் அவனை நினைவுகூறமாட்டார்கள்

ஆனால் இந்தியாவினை எதித்தது தவறு அந்த தவறுக்காய் இந்தியாவுக்கு எதிரான காரியங்களை செய்யமாட்டேன் என பெரும் வல்லரசுகளை எதிர்த்து இந்தியாவினை வட இலங்கையில் காத்து செத்தவன் அந்த மாவீரன்

தவறான காலத்தில் இந்தியா சிக்கியிருந்தபொழுது இலங்கையில் சரியாக எழுந்தவன் அவன், அவனை இந்தியா முழுக்க புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் நிஜம்

அவனும் தன்னை இந்துவாக உணராமல் திராவிட தமிழ் மிஷனரி மாயையில் விழுந்துசரிந்தான் என்பதும் வலிக்கும் நிஜம்

அவன் முகத்தையும் போராட்டத்தையும் நோக்கினால் அந்த பாடல் ஒன்றுதான் நினைவுக்கு வரும்

“தைர்யம் இருந்துச்சுன்னா சமுத்திரமும் கால் அளவு
துணிச்சல் வளர்ந்திருந்தா தூண்கள் எல்லாம் நூல் அளவு
எதிரி இல்லையின்னு எழுதி வைச்சான் ஏட்டுல
கீதைய படிக்கவில்லை அவனும் ஒரு கண்ணனே
அவன் கடலைப் போல காத்தப் போல காக்க வந்த சாமிங்க

தங்கம் போல மனசு இருக்கு தருமனாக மாறுவான்
சிங்கத்தை வேட்டையாடி சேரிக்கெல்லாம் போடுவான்
அவனும் சீறி வந்தா அலையும் கூட அடங்குமே
குத்தமுள்ள ஊருல அவன் சுத்தமுள்ள ஆளுங்க
அவன் முகத்த பார்த்து மனசு பூத்து கோடி சனம் வாழ்த்துங்க”