அடுத்த இந்திய குடியரசு தலைவராக யாரை நியமிக்கலாம் என்பதில் பெரும் குழப்பம் நிலவுகின்றது, இது பாஜக தாண்டி எல்லா கட்சியும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு என்பதால் பாஜவுக்கு எதிர் தலமை யார் என்பதை காட்டும் வாய்ப்பாக எதிர்கட்சி கோஷ்டிகளில் பல தலைவர்கள் கருதுகின்றார்கள்

இந்த திருநாட்டுக்கு உயிரை பணயம் வைத்த ராணுவ அதிகாரிகளும் வீரர்களும் உண்டு, வாழ்வையே அர்பணித்த விஞ்ஞானிகள் உண்டு இன்னும் பெரும் தியாக வாழ்வு வாழ்ந்துவிட்டு அமைதியாக இருப்பவர்கள் உண்டுஅவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து குடியரசு தலைவராக்கலாம்,

இந்நாடு தனக்காக உழைத்த யாரையும் கைவிடாது எனும் நம்பிக்கையினை ஊட்டலாம், அரசியலை தாண்டி அதனை செய்யலாம்அப்துல்கலாம் போல , மறைந்த பிபின் ரவாத் போல அப்பழுக்கற்ற தேசபக்தர்கள் அப்பதவியினை அலங்கரிக்க வேண்டும் என தேசம் எதிர்பார்க்கின்றது