இந்திய ராணுவத்தின் அக்னிபாத் திட்டம் உலகளவில் பெரும் ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது, மோடி அரசின் மாபெரும் வெற்றியாகவும் தேசத்தை அவர் வலுபடுத்தியிருக்கும் விதமாகவும் பார்க்கபடுகின்றது

உலகெல்லாம் கொரொனா காலத்தின் விளைவுகள் மோசமாக தெரிய தொடங்கியிருக்கும் காலமிது, ஒவ்வொரு நாடும் பெரும் சவால்களை சந்தித்து கொண்டிருக்கின்றது, பெரும் வேலை இழப்புக்களும் பொருளாதார சவால்களும் ஒவ்வொரு நாட்டையும் சூழ அடிக்கின்றது

இந்நிலையில் உக்ரைன் யுத்தம் உணவுபொருள் விலையேற்றத்தை கொடுத்து நிலமையினை இன்னும் சிக்கலாக்குகின்றது

ஒவ்வொரு நாடும் பொருளாதாரத்தில் தடுமாறுகின்றது, மாபெரும் வல்லரசுகள் கூட புதிய திட்டங்களையும் இதர விஷயங்களையும் பொருளாதாரத்தை காரணம் காட்டி ஒத்திவைக்கின்றன‌

இந்நிலையில்தான் அக்னிபாத் என உலகை அலற வைக்கின்றது இந்தியா, மாதம் 30 ஆயிரம் சம்பளத்தில் பல சலுகைகளோடு இந்திய இளைஞர்களை சேர்ப்போம் என அது அறிவித்திருப்பது சாதாரண விஷயம் அல்ல‌

பல பில்லியன் டாலர்களை கோரும் விஷயம் இது, பல்லாயிரகணக்கான கோடிகளை பாதுகாப்புக்காக வாரி இறைக்கும் தருணமிது

இந்தியா இந்த காலகட்டத்திலும் அதை செய்கின்றதென்றால் அதன் பொருளாதார பலம் உலகை யோசிக்க வைக்கின்றது, எட்டு ஆண்டுகளில் மோடி செய்திருக்கும் மாபெரும் சாதனை இது

மோடி இந்தியாவின் பிரதமராகும் பொழுது ஹிட்லர் என்றார்கள்,ஹிட்லர் ஆட்சிபொறுப்புக்கு வரும்பொழுது ஜெர்மனி சின்னாபின்னமாகி இருந்தது வெகுசில ஆண்டுகளில் அதை பலமாக்கி காட்டினான் ஹிட்லர்

மோடி அந்த அதிசயத்தை செய்திருக்கின்றார், தேசம் உலகளவில் பலமான பொருளாதார கேந்திரமாக உருவெடுத்திருக்கின்றது

இன்று உலகம் தடுமாறுகின்றது, காணும் இடமெல்லாம் உணவுபொருள் ஏற்றம் இதர விலையேற்றம் என மூச்சுமுட்டும் நிலையில் இந்தியா அதன் இயல்பில் இயங்குகின்றது கூடுதலாக ராணுவ வலிமைக்கு அள்ளி கொடுக்கும் அளவு பொருளாதார ஸ்தரதன்மையில் உயர்ந்து நிற்கின்றது

நாட்டுக்கு ராணுவம் அவசியம், ராணுவத்துக்கு பொருளாதாரம் அவசியம் அது இன்றி ராணுவம் வலிமையாகாது

இப்பொழுது இந்தியாவின் புதியபொருளாதார பலத்தில் தேசம் சிலிர்த்து எழுகின்றது, இந்திய அரசின் பொருளாதார திட்டம் அந்த அளவு நாட்டை முன்னேற்றியிருக்கின்றது

அக்னிபாத் என மாபெரும் திட்டத்தை ராணுவம் முன்னெடுத்தாலும் அதன் அடிப்படை இந்தியாவின் வலுவான பொருளாதாரம், அதனை மோடியும் நிர்மலா சீத்தாராமனும் தேசத்துக்கு கொடுத்திருக்கின்றார்கள்

நேற்று இந்திய முப்படைகளின் தளபதிகள் அக்னிபாத் திட்டம் எக்காரணம் கொண்டும் கைவிடபடாது என சொல்லியிருப்பது தேசவிரோத சக்திகளுக்கான கடும் எச்சரிக்கை, இனி இவ்விவகாரத்தை ராணுவம் கையில் எடுத்து செய்ய வேண்டியதை செய்து தேசத்தை காக்கும்

ராணுவ அதிகாரிகளின் கடும் சீற்றத்துக்கு பின் ஒரு சில தலைவர்களுக்கு காய்ச்சல் வந்திருப்பதாக தெரிகின்றது, அந்த காய்ச்சல் சீக்கிரம் குணமாக வாழ்த்துக்கள்