ஒரு காலத்தில் வெள்ளையருக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக சொல்லும் காங்கிரசார் இப்பொழுது ஊழல் வழக்கில் சிக்கியிருக்கும் ராகுலுக்கு ஆதரவாக பெரும் போராட்டம் நடத்திகொண்டிருப்பது தேசத்தின் அவமானங்களில் ஒன்று
ராகுல் மிகபெரிய ஊழல் குற்றசாட்டில் சிக்கியிருக்கின்றார், அவர்மேல் முறையான விசாரணை நடக்கின்றது, அந்த விசாரணை கூடவே கூடாது என காங்கிரசார் போராடுவதெல்லாம் எந்த அளவு அந்த இயக்கம் சீர்கெட்டு நாசமாயிற்று என்பதற்கான சாட்சிகள்
ராகுல் மேலான குற்றசாட்டை மறைக்க அக்னிபாத் விஷயத்தையும் கையில் எடுக்கின்றார்கள்
அடுத்த ஜனாதிபதி தேர்தல், முப்படை தளபதிகள் அக்னிபாத் அவசியம் குறித்து விளக்கிய பின்பும் காங்கிரஸார் காட்டும் அலட்சியம் போன்றவை எல்லாம் அக்கட்சி மிகபெரிய தேசவிரோத கட்சியாக மாறிவிட்டதை காட்டுகின்றது
காங்கிரஸ் கட்சியினர் ஒரு காலத்தில் நாட்டுக்காய் சிறை சென்றதை பெருமையாய் சொல்வார்கள், அப்படிபட்டவர்கள் ஊழல் தலமைக்கு ஆதரவாக நிற்பதெல்லாம் அக்கட்சியின் நம்பகதன்மையினை தகர்க்கின்றது
காங்கிரசார் திருந்தவேண்டும் அல்லது மத்திய அரசு குழப்பம் கூடாத வகையில் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்
காங்கிரசாருக்கு தேவை கொஞ்சம் சுய அறிவும் தன்மானமும், அதை கொண்டு அடுத்த தலைவரை தேர்ந்தெடுத்து கட்சியினை காப்பாற்றுவது நல்லது. சோனியாவிடம் இருந்து கட்சியினை மீட்க அவர்கள் போராட வேண்டுமே தவிர பெரும் ஊழல்வாதிகளுக்காக போராடுவது சரியானது அல்ல , அறிவானதுமல்ல
காங்கிரஸ் குடும்ப ஆட்சியில் இருந்து காப்பாற்ற பட வேண்டும்…. ஓரு பலமான எதிர் கட்சி இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும். அதை விட்டு ஊழல் செய்தவேற்கு போராடுவது மீண்டும் தவறு செய்ய தூண்டும்.