மானிட உடல் இயக்கத்தையும் அது பெற வேண்டிய பயிற்சிகளையும் இந்துஞானியர் சொன்னது போல் இன்னொருவர் சொன்னதில்லை

உடலின் அமைப்பினையும் இயங்குமுறையினையும் மிக சூட்சுமமாக சொன்னவர்கள் இந்து சித்தர்கள், அவர்களில் ஒளவையாரும் திருமூலரும் தனித்து நின்றார்கள்

இந்த உடல் நலமாக இருக்கவும் அதற்கான சக்திகளை முறையே பெறவும் யோக கலைகளை போதித்தது இந்துமதம், யோகத்தால் உடலை பேணி அந்த நலத்தால் தியானம் செய்து இறைவனை அடைதல் என்பது அதன் அடிப்படை

ஒரு காலத்தில் இந்துக்களின் வாழ்வியல் யோகாவின் அடிப்படையாகவே இருந்தது, இன்றும் கிராமங்களில் “கூன் போடாதே , நிமிந்திரு” என்பதும் “இடுப்பில் கை வைக்காதே , கால் ஆட்டாதே” என்பதும் அந்த யோகாவின் தொடர்ச்சியே

யோக கலையினை மிக நுணுக்கமாக சொன்னமதம் இந்துமதம், அது அக்கலையின் ஆசனங்களை ஆலயம் முழுக்க ஆலய கோபுரம் முழுக்க செதுக்கி வைத்தது, காலை தூக்கி நிற்கும் முனிவர் முதல் சிவன் அமர்ந்திருக்கும் கோலம் வரை எல்லாம் யோகாசனமே

தேவியின்சிலை கூட இடுப்பு வளைந்து நிற்கும் கோலத்தில் காணலாம், அதுவும் பெண்களுக்கான யோகத்தின் ஒரு நிலையே

அக்கால வாழ்வு அப்படித்தான் இருந்தது, இன்றும் நிலைத்து நிற்கும் ஆலய சிற்பங்களை காணுங்கள், தொப்பையும் தொந்தியுமாக ஒரு சிலையினை கூட காணமுடியாது, அப்படி யோக கலை இந்துக்களின் உடலை பெணியிருக்கின்றது

இந்துக்களின் வழிபாடும் ஆலயத்தில் காட்டும் சம்பிரதாயம் எல்லாம் யோகத்தின் ஒரு நிலையே

அக்காலத்தில் ஆசியா முழுக்க பரவி இருந்த இந்துமதம், தன் இயல்புபடி இயற்கையோடு இணைந்த வழியில் மனித உடல் ஆரோக்கியமாக இருக்க பல வழிகளை போதித்தது.

அதை வெறும் உடலுக்கான பயிற்சி என சொன்னால் மானிடன் செய்யமாட்டான் என்பதை உணர்ந்து அதை தெய்வத்தோடு சம்பந்தபடுத்தியது, ஆம் கடவுளை இப்படி எல்லாம் வணங்கு என சில வடிவங்களை சொன்னது. சூரியனை இப்படி வணங்கு என அது சூரிய நமஸ்காரம் என போதித்தது, இன்னும் ஏராளமான வழிமுறைகள்.

சூரியனை இப்படி நமஸ்காரம் செய்து வணங்கு என்பதில் காலை மாலை உடல்பயிற்சி தானாக வரும், மானிட உடல் தானாக நலம் பெறும், இயற்கையோடு இணைந்து மனிதனை நலமாக வாழ வழிசெய்தது இந்துமதம்

பின்னாளில் இந்துமதம் சுருங்கி மற்ற மதங்கள் எழும்பினாலும் மேற்காசிய மதங்களில் அந்த சாயலை காணமுடியும், யூத மத தொழுகையோ அதன் சாயல் உள்ள தொழுகைகளோ எல்லாம் அந்த பயிற்சிகளே

அந்த உடலுக்கான பயிற்சி உடலுக்கானது மட்டுமல்ல, உடலுக்கான பயிற்சி என்றால் விளையாட்டு மாறாக உடல், புத்தி, மூச்சு, மனம், பிரபஞ்சம் சக்தி என எல்லாவற்றையும் ஒரு புள்ளியில் இணைக்கும் வழியினை இந்து மதம் சொன்னது, ஆம் “யோகா” எனும் சொல்லுக்கு ஒருங்கிணைதல் என்று பொருள், ஆசனம் என்றால் அமரும் வடிவம்

இதுதான் யோகாசனம் ஆயிற்று

நிச்சயம் அதன் பூர்வீகமும் தொடக்கமும் இந்தியா, இந்து மதத்தில் அது ஒரு இயல்பான விஷயமாய் இருந்தது, மானிட உடல் எவ்வாறான பயிற்சிகளை பெற்றால் அதில் பலம் வரும், உடலின் எல்லா உறுப்புகளும் உள்ளுறுப்புகள் வரை பலம் பெறும் என உணர்ந்து ரிஷிகளால் செய்யபட்ட ஏற்பாடு அது

ஆம் உடலின் இயக்கமும் சக்தியும் மூச்சில்தான் அடங்கியிருக்கின்றது, மூச்சினை கட்டுபடுத்தி அங்க அவயங்களின் இயக்கத்தை சீர்படுத்தும் முறையே யோகா, அதை முறையாக செய்யும் பட்சத்தில் பிரபஞ்சத்தின் பெரும் சக்தி உடலில் பாயும், அந்த சக்தி பெரும் பலன்களை கொடுக்கும்

யோகாவினை கவனியுங்கள், இந்துக்களின் சூரிய நமஸ்காரம் முதல் பிள்ளையாருக்கு தோப்புகரணம் அங்க பிரதட்சணம் , தலைவிரித்து சாமியாடுதல் என எல்லாமே யோகா.

(சில ஆலயங்களில் பேயாட்டம் என ஒன்றை பார்த்திருக்கலாம், பேய் பிடித்தல் என்பது ஒரு வகையில் மனநிலை பாதிப்பும் கொண்டது. சில யோக முறைகளை செய்யும் பொழுது அது தானாக சரியாகின்றது.

ஆச்சரியமாக அதை எந்த சக்தி அப்படி செய்யவைக்கின்றது என்பதுதான் வியக்க வைக்கின்றது, பெரும் தவம் செய்த மகான்கள் முன்னும், பெரும் சக்தி நிலைபெற்றிருக்கும் இடங்களில் அந்த கோளாறு உள்ளவர்கள் தானாகவே ஆடி நலம் பெறுகின்றனர்.

ஆம் தலையினை சுழற்றி ஆடும் அந்த ஆட்டமும் ஒரு யோக கலையே, மன இறுக்கம் போக்கி தெளிவு கொடுக்கும் ஒரு வழியே.)

ஆம், உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் சக்தி கொடுப்பது யோகா, சுக்லாம் பிரதனம் என தலையில் லேசாக கொட்டபடும் பொழுது தலையின் நரம்புகள் தூண்டபடுகின்றன, காதை இழுத்து தோப்புகரணம் எனும் பொழுது காது நரம்புகள் தூண்டபடும், நீறை பூசுகின்றேன் என அடிக்கடி நெற்றியினை தொட்டு தடவுதல் ஒரு யோகா, நரம்புகள் தூண்டபடும், நெற்றியில் பொட்டு வைப்பதும் அப்ப‌டியே.

அக்காலத்தில் பாட்டிகள் முதல் அரசர்கள் வரை நீண்ட காதுகளுடன் அலைந்தது இதனாலே, காது நீள நீள ஆயுள் கூடும். அக்கால பாம்பட கிழவிகள் அசால்ட்டாக 100 வருடம் இருந்தார்கள் என்றால் அதுதான் காரணம்?

காதை இழுத்துவிடுதல் ஒரு யோகா

மூச்சு பயிற்சி என்பதை கவனியுங்கள், நாசியின் இயல்பினை உணர்ந்து மூச்சு மூலம் உடல் அவயங்களை கட்டுபடுத்தும் பலபடுத்தும் பயிற்சி அது. அதை முறையாக செய்வோருக்கு நுரையீரல் முதல் வயிற்று சிக்கல் வரை வராது

சூரிய நமஸ்காரம் என்பது என்ன? முதுகெலும்பு முதல் பக்கவாட்டு எலும்புகள் வரை பலபடுத்தும் பயிற்சி, அதை சரியாக செய்தால் எலும்பு, நரம்பு, ரத்த நாளம் எல்லாமே சீராகும், உடல் பலமாகும்

ஜிம் எனும் உடல் பயிற்சி இது போலத்தானே, பிரமாண்ட கருவிகளை இயக்கினால் உடல் அழகும் பொலிவும பெறத்தானே செய்கின்றது என கேட்கலாம், ஆனால் விஷயம் ஆழமாக கவனிக்கதக்கது

ஜிம் எனும் மேற்கத்திய பாணி உடல் தசைகளை வலுவாக்குமே தவிர உள்ளூர உறுப்புகளுக்கு அதனால் பலனில்லை, மிக இறுக்கமாக கொடுக்கபடும் அந்த பயிற்சி வயது ஏற ஏற ஒருவனை பலவீனமாக்கும். எந்த உடற்கட்டு வீரனும் 70 வயதுக்கு மேல் உடல் நலத்தோடு இருந்ததாக சொல்லமுடியாது

ஆம் ஜிம் விளையாட்டு மூச்சியினை இறுக்கி செய்யபடுவது, அந்த மூச்சில் உள் அவயங்கள் இறுக்கம் பெறுகின்றன, நாளாக நாளாக அவை தளர்கின்றன, ஒரு கட்டத்தில் கைவிடுகின்றன‌

ஜிம் விளையாட்டில் இருக்கும் ஒருவனின் உடல் சூடாகிகொண்டே செல்லும், ஆம் அது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் வகை , நாடிகளை வேகமாக துடிக்க வைக்கும் வகை, வேகமாக துடிக்கும் நாடியும் இதயமும் மெல்ல பலமிழக்கும்

இதனால் கவனியுங்கள் ஜிம் விளையாட்டு ஆடும் உடல் ஒருவித சூடாக இருக்கும், அது இயல்பு. அந்த சூடு பல விளைவுகளை ஏற்படுத்தும்

ஆனால் யோகா செய்யும் உடல் சூடேறாது மாறாக குளிரும், அந்த குளிர்ச்சி உடல் மூளை வரும் பரவும், இதனாலே யோகாவினை முறைபடி செய்வோர் எப்பொழுதும் பதற்றம் இல்லாமலும், தெளிவாகவும் எச்சூழலிலும் செயல்பட முடியும்

யோகா இதில்தான் தனித்து நிற்கின்றது. புத்த மதம் இதை இந்து பாரம்பரியத்தில் இருந்து பெற்றது

யுவான் சுவாங்கும் இன்னும் பலரும் இதை தேடித்தான் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வந்தனர், தென் சீன சமூகம் நோயாளிகளாய் இருத்தல் கண்டு போதிதர்மன் இதை கற்பிக்கத்தான் சீனா சென்றான்

ஐரோப்பா மெல்ல இதன் அருமையினை உணர்ந்து தங்கள் நாடுகளில் அதை போதித்தன, இன்று இந்திய யோகா நிலையங்களுக்கு இருக்கும் வரவேற்பே தனி.

மனித உடல் என்பது ஒரு கொடை, இயற்கையாய் கிடைக்கும் வரம். அவன் வீரனோ, ஞானியோ, படைப்பாளியோ, சிற்பியோ, அரசனோ, சித்தனோ யாராக இருந்தாலும் உடலின்றி அமையாது வாழ்வு

அந்த இயற்கையான உடலை பராமரிக்க இயற்கையோடு இணைந்த சில வழிமுறைகள் அவசியம். செடி வளர மண்ணும் நீரும் வானமும் தேவை. மீன் வாழ நீர் தேவை

அப்படி மானிட உடல் ஆரோக்கியம் பெற யோகா எனும் அந்த அற்புத முறை நிச்சயம் அவசியம்

காலையும் மாலையும் அதை செய்ய செய்ய (பண்டைய முறையில் 1 மணி நேரத்துக்கு ஒருமுறை குனிந்து நிமிர்ந்து சூரியனை பார்க்கும் வழக்கம் இருந்ததாம், 7 முறை அதை செய்வார்களாம், மேற்காசியாவில் அதுதான் யூத தொழுகையாக இருந்தது

யூத இனம் அதை அரேபிய இனத்திடம் இருந்து எகிப்திடம் இருந்தும் பெற்றதாம், இன்று மறைந்துவிட்ட எகிப்திய வழிபாட்டில் அதை பார்க்க முடியாது, ஆனால் யூத மதத்திலும் அதனின்று உருவாகிய மதங்களிலும் காணலாம்

விஷயம் இதுதான்

செடிக்கு நீர் போல மானிட உடலுக்கு சில பயிற்சிகள் அவசியம், அதை மதத்தின் வழிபாட்டு பெயரிலாவது மானிடன் செய்யமாட்டானா என சிந்தித்த அந்த அறிவார்ந்த சமூகம் யோகாவினை உருவாக்கியது, அது இந்தியாவில் செழித்து வளர்ந்து உலகெல்லாம் பரவிற்று, அவரவர் மதத்துக்கு தக்கவாறு வளைத்து கொண்டார்கள்

இந்துமதம் இந்தியாவில் கட்டுகோப்பாய் இருக்கும் வரை யோகா அன்றாடம் வாழ்வாய் இருந்தது, ஆலயங்களில் இருந்தது, வழிபாட்டில் இருந்தது, குருகுலத்தில் இருந்தது

ஒவ்வொரு வீட்டிலும் சூரியவழிபாடு எனும் அளவில் சரியாக இருந்தது

அன்றெல்லாம் உடல் ஆரோக்கியமாக இருந்தது, கருத்தரிப்பு மையம் இல்லை, சுகர் பிரசர் மாத்திரையில்லை, கிட்னி பெயிலியர், இதய நோய், மூட்டுவலி, நுரையீரல் கோளாறு, கல்லீரல் மாற்று, குடலில் சிக்கல் என எதுவுமில்லை

பெண்கள் அதை பின்பற்றியதில் சிசேரியன் என்பதே இல்லை, குழந்தைகள் இயல்பாய் பிறந்தன‌

இந்துமதம் சரிய சரிய எல்லாம் சரிந்தது, ஒரு கட்டத்தில் காதை பிடித்து தோப்புகரணம் போடுதல் கூட அவமானகரமாய் உணரபட்டது, கோவிலில் விழுந்து வணங்குதலும் அங்க பிரதட்சணமும் கூட அறிவுகெட்ட தனமாய் ஆயிற்று

கோவிலுக்கு எதிரே குளம் கட்டி, அதில் நீந்தி விளையாடி உடலை புத்துணர்வு செய்ய சொல்லி, சூரிய நமஸ்காரம் எனும் அற்புத யோகத்தை வழிபாடாய் செய்து, பின் கோவிலுக்குள் நுழைந்து அந்த புதுமலரின் மணத்தில் உடலும் நாசியும் நலம்பெற்று, நாசிக்கும் மூச்சுக்கும் சில பயிற்சிகளை கொடுத்து. நெற்றி தரையில் விழ வணங்கி நின்றதெல்லாம் தொலைந்தது

நெற்றி காது மூக்கு எல்லா உறுப்புகளுக்கும் பயிற்சி கொடுக்கும் பழக்கம் மறைந்தது, இளம் வெயில் கண்ணில் விழுந்து நுண்ணிய கிருமிகளை அழிக்க சூரியனை காலை மாலை பார்க்கும் வழக்கம் ஒழிந்தது

நாகரீகம் மூட நம்பிக்கை என எல்லாமும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தன‌

கோவிலுக்கு ஆண்கள் மேல் சட்டை இல்லாமலும், பெண்கள் சராசரி மஞ்சள் சேலையிலும் சென்ற காலத்தில் உருண்டு வணங்கினார்கள், நலம் பெற்றார்கள். பின் கோவிலுக்கு செல்லுதல் என்பது நகை பட்டை அலங்கார உடைகளை காட்டுவதற்கு எனறான பின் எல்லாமும் மாறிற்று

ஆம் நாகரீகவும், இயற்கையோடு இணைந்த வாழ்வும், உடலை பேணும் அறிவுமிக்க இந்த இனத்தின் எல்லா நல்ல பழக்கமும் நாகரீகத்தின் பெயரில் காட்டுமிராண்டிதனமாக்கபட்டது.

காலையில் எழுது வேலை வேலை என ஓட வைக்கும் ஒரு பழக்கம் வந்தது, அது வழிவழியாய் வந்த காலை யோகாவினை மறக்க வைத்தது, கோவிலை மறக்க சொன்னது, இன்னும் என்னவெல்லாமோ இழக்க வைத்தது , அதில் உடல் ஆரோக்கியம் மறைந்து கொண்டிருந்தது

பின் என்னாயிற்று?

ஓடி ஓடி சேர்த்தபணம் மாத்திரைக்கும், மருந்துக்கும், சிசேரியனுக்கும், பிள்ளை இல்லா கொள்ளைக்கும் இன்னும் எவனோ தயாரிக்கும் மருந்துக்கும், எந்த மருத்துவமனைக்கோ சென்று செர்ந்தது.

எல்லாம் உடலை காக்க, அந்த அவசியத்துக்காக. ஆக மனிதனின் மிகபெரிய சொத்து ஆரோக்கியம் என்பது கடைசியில்தான் விளங்கிற்று, ஆனால் காலம் கடந்துவிட்டது

இதற்கு ஏன் இவ்வளவு கஷ்டபட்டு சம்பாதிக்க வேண்டும்? உடல் நலத்தை காத்துவிட்டு கொஞ்சம் குறைவாக சம்பாதித்தால்தான் என்ன என்ற அறிவும் இல்லை

ஓடி ஓடி உழைத்து கடைசியில் மொத்தமும் மருத்துவமனைக்கு தானும் கொடுத்து அடுத்தவன் கொடுப்பதை கண்டபின்பும் ஞானமில்லை.

சரி தன் வாழ்வுதான் உடல் நலமின்றி அழிந்தது, பிள்ளைகள் வாழ்வுக்காவது பண்டைய நலன்களை மீட்க வேண்டாமா என்ற அறிவு இச்சமூகத்திடம் இல்லை, அந்த யோசனை இல்லை, காரணம் நாகரீகம் எல்லாவற்றையும் அழித்து ஒழித்திருந்தது, தேடினாலும் கிடைக்கவில்லை

காலை எழுந்து முன் தயாரிப்பு எனும் முறையில் நதியிலும் குளத்திலும் நீந்தி விளையாடி, பின் சூரிய நமஸ்காரம் என யோகாவினை செய்து, பின் மூச்சு பயிற்சி என உள் உறுப்புகளுக்கும் உடலுக்கும் வலுகொடுத்து, கண்ணுக்கு சூரிய ஓளியே மருந்தாக இட்டு கண்ணாடி அணியாமலும், காதை நீட்டி விட்டு நோய் அண்டாமலும், நீறு தேய்க்கின்றேன் என நெற்றியினை அடிக்கடி தொட்டும், முதுகெலும்பை வலுவாக வைத்து வலுவாகவும், அடிக்கடி சவரம் செய்யாவிட்டாலும் ஆரோக்கியமாகவும் இருந்த அந்த முன்னோர் வாழ்வு என்னாயிற்று என தேட தெரியவில்லை

அக்கால பெண்கள் நெல்லை உரலில் இடித்து அரிசியாக்கி, கினற்றில் நீர் இறைத்து, வீடெல்லாம் பெருக்கி, இன்னும் காடெல்லாம் உழைத்தும் 10 குழந்தை பெற்றார்களே, நாம் ஒரு குழந்தையினை சிசேரியனில் பெற்று அதற்கும் கண்ணாடிபுட்டி அணிந்தும், ஆட்டிசம் முதல் பல சிக்கலில் சிக்கும்படி பிறக்க வைத்துவிட்டோமே என எண்ணவில்லை

காட்டில் பன்றி பலகுட்டி போடும்பொழுது , அட சுவற்று பல்லி ஏக குட்டிகளோடு வரும் பொழுது மானிடரான நாம் ஒரு குழந்தைக்கு கருத்தரிப்பு மையத்துக்கு ஏன் அலைகின்றோம் என சிந்திக்க தெரியவில்லை.

இங்கே கல்வி, அறிவு, நாகரீகம், பரபரப்பான வாழ்க்கை என பலவற்றை தொலைத்துவிட்டோம், அதில் ஆரோக்கியமற்ற சூழலுக்கு ஒவ்வாத உணவுகள் 30% என்றால் மீதி 70% உடலுக்கு தேவையான பயிற்சிகள் இல்லாததே

உடல் பருமனும், குட்டியானை தோற்றத்திலும், வயிற்றில் நெல்பானையினை சுமந்து வரும் சதை பிண்டமாக ஒரு கூட்டம் அலைவது இப்படித்தான்

இன்னொரு கூட்டம் ஜிம் என ஓடி ஓடி அலைந்து தொப்பை இல்லை, ஆர்ம்ஸை பார் என திரிந்தாலும் பின்னாளில் மிகபெரிய ஆபத்து அவர்களுக்கு உண்டு

பெண்களில் டயட் ,ஸ்லிம் என சொல்லிகொள்வது நாகரீகமாகின்றது, உணவினை அறவே குறைத்து பெறுவது அழகல்ல அது தன்னை தானே கொல்வதற்கு சமம், குழந்தையின்றி அலையும் பொழுதோ பிர்சவ கால சிக்கலின் பொழுதோ அதை உணரமுடியும், ஆனால் காலம் கடந்திருக்கும்

உணவு அவசியம், அப்படியே நாடி நரம்பும் எலும்பும் வலுபெறுவது அவசியம், கால் கைகளில் இயல்பான இயக்கம் அவசியம், உள் உறுப்பின் பலம் அவசியம்

இதற்கெலாம் ஒரே வழி பண்டைய யோகாவினை மீட்டெடுப்பது. முன்னோர் வாழ்ந்த அந்தவாழ்க்கைக்கு திரும்பினால் சுகர் , பிரசர், மூட்டுவலி, அறுவை சிகிச்சை என ஒரு சிக்கலும் வராது, எங்கு சென்றாலும் மாத்திரை பெட்டியினை தூக்கி செல்லும் அவசியம் வராது

இன்சூலின் ஊசி என்பது இறைவனாக தோன்றாது, மருத்துவமனை என்பது ஆலயமாக தோன்றாது

ஒரு மனிதன் யோகாவில் பழகும் பொழுது அவனுள் பலமாற்றம் நிகழும், இயற்கை அவனுள் இறங்கும், பல மாறுதல்களை அது செய்யும், பிரபஞ்சம் அவனுக்கு உடல் நலம் முதல் பல அறிவினை செலுத்தும்

யோகம் என்பது அப்படி நுட்பமானது, சரியான பொழுதில் சரியான திசையில் மிக நுட்பமான வகையில் மூச்சு, மனம், புத்தி என எல்லாமும் கலந்து இறைவனில் ஒன்றும் அளவு செய்யபட்ட மிக மிக திறமையான ஏற்பாடு

அதை ஒழுங்காக செய்ய செய்ய மனிதன் மனிதனாவான், . யோகா செய்ய செய்ய ஒழுங்கு வரும், சுய கட்டுப்பாடு வரும், மனம் அடங்கும், உடல் பொலிவுறும், சிந்தனையில் தெளிவு வரும். இதனால் நல்ல பலமான சமூகம் உருவாகும்

இந்தியாவின் மிகபெரும் பொக்கிஷமான அந்த யோகா உலகெங்கும் கொண்டாடபட்டபொழுது இத்தேசம் அதை மறந்துவிட்டு , மூட நம்பிக்கை, காட்டுமிராண்டிதனம் என சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு கப்பம் கட்ட ஆரம்பித்தது

அது மறைந்து கொண்டிருந்தது, மீட்டெடுக்க யாருமில்லாமல் ஆழ புதைந்து கொண்டிருந்தது. ஆம் அரசு சிந்திக்கா எதுவும் சரிவராது, தலைமகன் ஒருவன் ஒன்றை செய்தால் ஒரு இனமே அதை பின்பற்றும்

மொகலாயர், பிரிட்டிசார் என யாரும் அதை மீட்டெடுக்க தயாராக இல்லை. அவர்கள் அந்நியர்கள் இங்கு ஆள வந்தவர்க்ள், இங்கிருப்பதை ஆப்கனுக்கும் பிரிட்டனுக்கும் கடத்துவது என்பது என்பதே அவர்கள் சித்தாந்தம்

பிரிட்டன் தங்கம் கோஹினூர் வைரம் முதல் திருகுறள் முதல் யோகாசனம் வரை கொண்டு சென்று தங்கள் நாட்டிற்கு பயன்படுத்தினார்கள், கொள்ளை அடிக்க வந்தவர்கள் அப்படித்தான் செய்வார்கள், அதிசயமில்லை.

இந்திய மக்கள் பலவீனமாகவும் தெளிவற்றும் குழப்பவாதிகளாகவும் இருப்பதுதான் அவர்களுக்கு பாதுகாப்பானது, பின் எப்படி இந்தியர் பலமாக விடுவார்கள்

பின்பு வந்த காங்கிரஸ் தலைவர்களும் இந்தியாவில் இருந்து ஐரோப்பா சென்றது திரும்ப கூடாது என்பதிலும் இந்தியர் சுயமாக சிந்திக்க கூடாது என்பதிலும் கவனமாயிருந்தனர், ஆம் இந்துமதத்தை தொட்டால் அதன் பழக்க வழக்கத்தை தொட்டால் இந்தியருக்கு உண்மை விளங்கும், தேசம் பலமாகும் எனும் பயம் அவர்களுக்கு இருந்தது

சொல்ல தயக்கமில்லை. நேரு முதல் ராகுல்வரை இந்து என பகிரங்கமாக தங்களை சொல்ல விரும்பாத ரகசியம் இதுதான், இந்நாட்டின் பாரம்பரியத்தை மீட்டெடுக்க அவர்கள் தயாரில்லை. அந்நிய மருந்துகளும் மருத்துவ மனைகளும் பெருக வேண்டும், இந்திய பண்டைய முறைகள் மீண்டு அவை அழிய கூடாது எனும் எண்ணம் இருந்தது, மறுக்க முடியாது

இந்தியர் பலவீனமாகவும் கண்ணாடியோடும், கையில் புகை மதுவோடும், கருத்தரிப்பு மையத்திலும், சிசேரியன் சென்டர்களிலும் தவமிருக்க வேண்டும் என்ற நிலை நீடித்தது. அது அப்படியே நீடிக்கும் பட்சத்தில் இந்தியா உலகின் நோயாளிகள் தேசமாகும்

அங்கு மக்கள் சம்பாதிக்கும் பணமெல்லாம் மருத்துவமனைக்கே செல்லும், பின் எங்கிருந்து தேசம் உருப்படுவது? இக்கவலையெல்லாம் அவர்களுக்கு இல்லை

இந்துமதத்தை மீட்டெடுத்து அதன் பழக்க வழக்கங்களை மீட்டெடுத்தாலே பாதி நோய் குறையும் எனும் வாய்ப்பு இருந்தும் அதை செய்யவில்லை, செய்யமாட்டார்கள்

கூடுதலாக இந்து வழக்கம் என்றால் பிராமண வழக்கம் எனும் சதியும் ஏற்படுத்தபட்டது, இந்துக்களின் வழக்கத்தை பிராமணர் ஏற்று காத்துவருகின்றார்களே தவிர, பிராமணர் வாழ்வை இந்துமதம் ஏற்றது என்பது அபத்தம்.

காலத்தால் தடுமாறி தன் அடையாளத்தை தொலைத்த நாட்டிற்கு ஒரு தலைவன் வந்தான், அவன் இந்நாட்டின் மரபுகளை மீட்டெடுத்தான்

கோவிலுக்கு சென்று தான் ஒரு இந்து என உரக்க சொன்னான், அதை இலங்கையில் சொன்னான், நேபாளத்தில் சொன்னான் இன்னும் செல்லும் இடங்களிலெலாம் சொன்னான்

ராமனின் ஆலயத்திலும் காசியிலும் கம்பீரமாக சொன்னான்

திறுநீறு அணியவும் தியானம் செய்வதும் அவனுக்கு தயக்கமில்லாமல் பெருமையாய் வந்தது. இந்நாட்டின் பாரம்பரியபடி வந்த முதல் பிரதமர் அப்பெருமகனே

அவனே இத்தேசத்து குடிமக்கள் நலம்பெற யோகாவினை கட்டாய பாடமாக்கினான். இப்பொழுது மெல்ல யோகா இந்தியாவெங்கும் பரவுகின்றது, இளம் தலைமுறை அதை கற்கின்றது

அது ஒன்றும் இந்த மண்ணுக்கு புதிதல்ல பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்த அந்த அற்புத வழிபாடு, 600 ஆண்டுக்கு முன் மறைய தொடங்கி இப்போது மறுபடியும் வந்துவிட்டது

அந்த தலைவன் அதோடு விட்டானா? உத்தரவு போட்டுவிட்டு உறங்கினானா?

இல்லை தானே செய்தான், முன்மாதிரியாக செய்தான். தலைவன் களமிறங்கினால் மாபெரும் இடத்தில் வீற்றிருக்கும் அவன் செய்தால் தேசம் செய்யாதா? அது அவன் பின்னால் அணிதிரள்கின்றது

யோகா அனைத்துலகில் அங்கீகாரமானது, ஒரு நாள் யோகாவுக்கான நாளாகவும் மாறிற்று

ஆம் மோடி எனும் வரம் அந்த அற்புதத்தை செய்தது, மாபெரும் பண்டைய நன்முறையினை மீட்டு கொடுத்தவர் மோடி. இளைய சமூகம் ஆரோக்கியமாக இருக்க பெரும் வழிகாட்டியவர் மோடி

ஆம் அவர் வரலாற்று நாயகன், தேசத்தில் நிலைத்துவிட்ட பெருமகன்

இன்று யோக நாள் என ஒரு நாளில் கடந்து செல்ல கூடாது, ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் அதை பயிற்றுவித்தல் வேண்டும். சாமி கும்பிடும் முன் குளித்தல் போல 15 நிமிட யோகா ஒரு வழக்கமாக வேண்டும்

ஒவ்வொரு வீட்டிலும் இதை குழந்தைகளுக்கு பயிற்றுவித்தல் வேண்டும், பள்ளிகளும் இதை காலையும் மாலையும் 20 நிமிடமாவது செய்ய வைக்க வேண்டும்

பள்ளி என்றால் அது கல்வி மட்டும் பயிலுமிடம் என சொல்வது மடத்தனம். அங்கு உடல்நலம் காக்கும் விஷயங்களும் இல்லாவிட்டால் அது கல்வி கூடம் ஆகாது

ஆசிரியர்கள் இரண்டாம் தாய் எனும் வகையில் மதங்களை கடந்து இது கட்டாயமாக்கபட வேண்டும்

இந்து குடும்பங்கள் தங்கள் வீட்டில் விளக்கேற்றுதல் , பூஜை அறையில் வணங்குதல் போன்றவற்றுக்கு கொடுக்கபடும் முக்கியத்துவத்தினை யோகாவுக்கும் கொடுக்கட்டும்

அப்படி கொடுத்து வருகையில் ஆரோக்கியமான சமூகம் உருவாகும், கட்டுப்பாடும் நலமும் மேலோங்கும், சமூகம் மிக நல்ல அமைதியான பலமான சமூகமாக அமையும்

அப்படி ஒரு நற்சமூகத்தை உருவாக்க யோகா நாளில் உறுதியேற்போம், பெரும் தலைவன் மோடி ஏற்றிவைத்த அந்த ஜோதியினை அணையாமல் காப்போம், ஆரோக்கியம் பெறுவோம்

யோகாவினை எல்லா இடங்களிலும் கொண்டுவருவோம் , வீடு பள்ளி ஆலயம் என கொண்டுவருவோம், இந்து ஆலய வழிபாடுகளிலும் இருப்பதை ஊக்குவிப்போம், தொலைந்து போனதை மீட்டெடுத்து சிறுக சிறுக கொண்டுவருவோம்.

யோகா என்றால் ஒன்றிணைதல், எல்லா நல்ல சக்திகளையும் ஒன்றிணைத்தல்

அப்படி தேசம் யோகாவால் இணையட்டும், எங்கும் ஆரோக்கியமும் தெளிவும் பிறக்கட்டும். இந்தியன் என்பதிலும் யோககலையினை உருவாகி அதனால்ஆரோக்கியம் பெற்று, அதை உலகுக்கு போதித்த சமூகம் எனும் வகையில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொண்டு அதை வழி வழி காத்தும் வரவேண்டும்

ஆரோக்கியமான சமூகமே நாட்டின் முதல் பலம், அந்த பலத்தை இந்துக்களின் அடையாளமும் இந்து பாரம்பரியமும் இந்துஞானியரின் பெரும் கொடையான யோககலை கொடுக்கும்

அந்த யோகாவால் உய்யட்டும் உலகு, அந்த உலகில் மின்னட்டும் நம் பாரதம்.