ஆச்சார கோவை : 06
“எச்சிலார் நோக்கார் புலை திங்கள் நாய் நாயிறு
அத்தக வீழ்மீனோடு, இவ் ஐந்தும் தெற்றென
நன்கு அறிவார் நாளும் விரைந்து’
எச்சில் என்பது உணவு உண்டு கழுவாத கை முதல், இயற்கை உபாதைகள் கழிந்து சுத்தபடுத்தாத உடல், இன்னும் பல வகை கழிவுகளால் அசுத்தமான நிலை என கருதபடும்
முக்கியமாக சிறுநீர், மலம். ஆண்-பெண் உடல் உறவின்போது வெளிப்படும் விந்து, நாதப் பசைகள், வாயில் வரும் கோழை என்பவை கருதபடும்
இந்த எச்சிலோடு எதையெல்லாம் பார்க்க கூடாது என்பதை இப்பாடல் சொல்கின்றது
எச்சிலோடு புலையர், சூரியன் , சந்திரன், நாய், வானில் வரும் எரிகல் ஆகியவற்றை கண்ணால் நோக்க கூடாது என்பது ஆச்சாரங்களில் ஒன்று
இங்கு புலையர் என்பது சாதியினை குறிப்பது அன்று, தீயநெறியில் இழிவான காரியங்களை செய்வாரை குறிப்பது, அவர்களை எச்சிலோடு உற்று நோக்கினால் சர்ச்சைகளோ தடுமாற்றமோ வரலாம் என்பதால் அவர்கள் தவிர்க்கபட வேண்டியவர்கள்
எச்சிலோடு சூரியன் முன் நிற்க கூடாது, எச்சிலில் கிருமிகள் உருவகலாம், சந்திரன் வெம்மை குறைந்ததாயினும் நாள் தோறும் அது தேய்ந்து வளர்வதால் விஷேஷித்த கதிர்கள் எச்சிலோடு பட்டு அவை விஷமாக மாறி பாதிக்கலாம் என்பதால் அது தவிர்க்கபட்டது
நாய்களும் அப்படியே, நாய்கள் மோப்பம் மிக்கவை எச்சிலோடு அவைகள் முன் நின்றால் ஆபத்து அதிகம்
எரியும் விண்கல்லையும் காணுதல் நல்லதல்ல எரிகல்லின் பொழுது கண்ணுக்கு தெரியா கிருமிகள் பூமிக்கு வரலாம், அவை எச்சிலோடு பட்டால் சில கிருமிகள் உருவாகலாம் என்பது அன்றே தெரிந்திருந்தது அதை சாஸ்திரம், ஆச்சாரம் என வைத்தார்கள்
எச்சிலோடு காணகூடாதவை இந்த ஐந்தும் என ஆரோக்கியத்தையும் காவலையும் காக்கும் விஷயங்களை சாஸ்த்திரம் ஆச்சாரம் என சொல்கின்றது இப்பாடல்