இந்தியாவின் பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் எப்பொழுதும் ரஷ்ய அனுதாபத்தை காணமுடியும், ஏன் அப்படி ஒரு பிம்பம் உருவாக்கபட்டதென்றால் வரலாற்றில் நிழந்துவிட்ட பெரும் தவறு அப்படி, காங்கிரஸும் கம்யூனிஸ்டுகளும் செய்த அழிச்சாட்டியம் அப்படியானது

இந்தியா 1947ல் சுதந்திரம் வாங்கும் முன்பே சோவியத் யூனியன் ஆப்கன் எல்லையினை ஒட்டி காரகோரம் மலைதொடரை ஒட்டி கால் வைத்து அரக்கனாய் நின்றது, அப்பக்கம் சீனா இன்னொரு கம்யூனிச தேசமாக உருவாகி நின்றது ஆனால் அது ஏழை சீனா

இந்த இரு கம்யூனிஸ்டு நாடுகளும் இந்தியா அதுவும் தொழிலாளர் நிரம்பிய இந்தியா கம்யூனிச தேசமாய் மலரும் என நம்பிகொண்டிருந்தார்கள், அவர்கள் கனவு அப்படி இருந்தது

இந்தியாவினை இப்படியே விட்டு சென்றால் இந்தியாவுக்கும் சோவியத்துக்கும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கால்வைக்க ஒரு இடமில்லாமல் போகும் என அஞ்சிய வெள்ளையன் சோவியத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒரு நாடு தனக்காக அமைய வேண்டும் என விரும்பினான்

அன்று சீனா திபெத்தை விழுங்கவில்லை என்றாலும் சீனாவின் கட்டுபாட்டு நாடாகவே இருந்தது

இப்படி இரு முனையிலும் சரியாக இரு பாகிஸ்தானை உருவாக்கி தான் கால்வைக்க ஒரு இடமுமாயிற்று இந்தியா உருப்படாமல் போக வழியுமாயிற்று என கிளம்பினான்

1950களில் கம்யூனிசம் இங்கு வளரும் என கனவுகண்ட சோவியத்தின் ஆசை வீணாயிற்று, இவ்வளவுக்கும் இஸ்லாமியர் தனிநாடாக பிரிந்தபின்னும் இந்துநாடு எனும் கோஷம் பெரும் அளவில் இல்லை அதெல்லாம் கம்யூனிசமாக மாறும் என நம்பிய கணக்கு பொய்யாயிற்று

ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் ஒரு ஆன்மீகவாதி ஏதோ ஒருமதவடிவில் இருக்கின்றான், அவன் மனம் தெய்வம் இல்லை என வாக்குக்கு சொல்லுமே தவிர மனதறிந்து சொல்லாது. அப்படிபட்ட இந்தியா சோவியத் போல நாத்திக நாடாக திரும்பவே இல்லை

எவ்வளவோ தொழிற்சங்கம், தினகூலி, அன்றாட காய்ச்சிகள் என மிகுந்திருந்தும் கம்யூனிச புரட்சி வரவில்லை, வங்கமும் கேரளமும் கம்யூனிஸ்ட் தாக்கம் இருந்தாலும் அவன் காளிபக்தனாகவும் குருபாயூரப்பன் பக்தனாகவுமே இருந்தான்

இந்த ஏமாற்றத்தை சோவியத் குறித்துகொண்டது, சீனாவும் குறித்து கொண்டது

அன்று சுமார் 50 கோடி மக்களுடன் ஜனநாயக நாடாக இருந்த இந்தியாமேல் அமெரிக்காவுக்கு ஒரு அபிமானம் இருந்தது

ஆனால் நாங்கள் அணிசேரமாட்டோம் என அறிவித்த நேரு சீனாவுக்கு மட்டும் ஐநாவில் நிரந்தர உறுப்பு அந்தஸ்து வாங்கிகொடுத்தார், ரஷ்ய கருவிகள் வேண்டுமென்றார் இன்னும் என்னவெல்லாமோ செய்து குழப்பினார்

அதாவது அமெரிக்க அணி ரஷ்ய அணியில் இந்தியா இல்லை ஆனால் எல்லா அணியிலும் உண்டு என குழப்பி அடித்தார்

அரபு கூட்டணி, ஆப்ரிக்க கூட்டணி, நேட்டோ அணி, ஆசியான், சீன ரஷ்ய கூட்டணி என ஒவ்வொரு நாடும் கூட்டணி தேடியபொழுது நேரு எல்லா கூட்டணியிலும் இருந்தார் அல்லது இல்லை

இதனால் வெறுப்புற்ற அமெரிக்கா பாகிஸ்தானை தன் நட்புநாடாக அறிவித்து சோவியத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் கால் வைத்தது, உடனே ஆப்கனில் தன் இடதுகாலை வைக்க விரும்பியது ரஷ்யா

இதனால் காஷ்மீர் பெரும் சர்ச்சையானது, நேரு முதலில் ஐ.நா சபையில் வாக்கெடுப்பு ஒருங்கிணைந்த காஷ்மீர் என்றெல்லாம் பிதற்றிய நேரு பின் சத்தமில்லாமல் மவுனித்தார், காஷ்மீர் மன்னரே முழு காஷ்மீரை ஒப்ப்டைத்தபின் ஏன் வாக்கெடுப்பு என்ற கேள்விக்கு நேருவின் குழப்பமே பதிலாயிற்று

1959ல் திபெத்தை சீனா முழுக்கபிடித்ததும் இந்தியசீன முறுகல் தொடங்கியது, அக்சாய் சின் பகுதியினை சீனா பிடித்தது, சீனாவின் கூட்டணிபடி அவர்களை தொட்டால் வடகொரியா, கியூபா, ரஷ்யா என பல நாடுகள் வரும்

ஆனால் இந்தியாவினை தொட்டால் சோமாலியா கூட வராது ஏனென்றால் இந்தியா “அணிசேரா” நாடு, சரி அணிசேரா நாடுகள் என சொல்லபட்ட நேருவின் கூட்டணியின் யுகோஸ்லேவியா, இந்தோனேஷுயா போன்றவையாவது இந்தியாவுக்கு ஆதரவுக்கு தெரிவிக்க வேண்டும் அல்லவா?

அவைகளும் வரவில்லை, காரணம் அதுதான் அணிசேரா கொள்கை, அணிசேரா இந்தியா அடிபட்டாலும் அந்த அணிசேரா நாடுகள் அணிசேராது

அப்படிபட்ட கணக்கில்தான் இந்தியாவினை போட்டு அடித்தது சீனா, இந்தியா கதறி அழும்பொழுது சோவியத்தின் உண்மை முகம் தெரிந்தது

சோவியத் நினைத்தால் நொடியில் யுத்தம் நிறுத்தியிருக்கலாம் அல்லது இந்தியாவுக்கு ஆயுதம் அள்ளி கொடுத்திருக்கலாம் இரண்டும் செய்யாமல் மவுனம் காத்து சீனாவினைத்தான் ஆதரித்தது அந்த நாடு

அந்நேரம் நேரு அமெரிக்க கென்னடியிடமே சரணடைந்தார், அமெரிக்கா பல ஆயுதமும் உதவியும் செய்தது அமெரிக்கா உதவி கிடைத்த பின்பே இருமணி நேரத்தில் டெல்லியினை பிடிப்போம் என்ற சீனாவின் முழக்கம் அடங்கி அந்த போரை சீனா நிறுத்தியது

ஆம், 1962ல் இந்தியாவினை காத்தது அமெரிக்காதான்

அந்த நேரம் அமெரிக்க ஆயுதமும் கருவியும் இந்தியாவுக்கு நிரம்ப கிடைத்தன, அதை கொண்டுதான் 1965ல் அடுத்த மூன்றாண்டுகளில் நடந்த இந்தியா பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானை பந்தாடினார் சாஸ்திரி, பாகிஸ்தானை முழங்காலில் நிறுத்தி காஷ்மீர் முழுக்க மீட்க முயன்றபொழுது ரஷ்யா நுழைந்தது

கவனியுங்கள், இந்தியா சீனா மோதியபொழுது மவுனம் காத்த ரஷ்யா காஷ்மீர் இந்தியாவுக்கு சென்றுவிடும் என தெரிந்ததும் களமிறங்கி தாஷ்கண்டுக்கு சாஸ்திரியினை அழைத்தது, சாஸ்திரி பிணமாக திரும்பினார் காஷ்மீர் சிக்கல் நீடித்தது

சாஸ்திரிக்கு அடுத்துவந்த இந்திரா இரும்புபெண் என்றாலும் சசிகலாவுக்கு அஞ்சிய ஜெயாபோல் ரஷ்யாவுக்கு மிக அஞ்சினார், அதனால் ரஷ்யா தன் கழிவு ஆயுதெமெலாம் விற்றது தன் அணுவுலைகளை விற்றது இந்தியாவை தன் ஆயுத அடிமையாக்கியது அந்நாடு

இந்நிலையில்தான் பாகிஸ்தானை பிளக்க முடிவெடுத்தார் இந்திரா, அதற்கு பல காரணம் இருந்தது சந்தடி சாக்கில் பெரும் தொகைக்கு ஆயுதம் விற்றது ரஷ்யா

அந்த போரில் இந்தியா வெற்றிமுகம் காட்டியது ஆனால் டாக்காவினை முற்றுகையிட முடியவில்லை, அந்நேரம் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கொடுத்த ஹாஜி நீர்மூழ்கி கப்பல் இந்தியாவினை மிரட்டியது, அதை தேடி தேடி பின் வலைவிரித்து வரவைத்து விசாகபட்டினம் பக்கம் போட்டு தள்ளியபின் அமெரிக்கா களமிறங்கியது

வழக்கம் போல கிழக்கு பாகிஸ்தானில் மனுகுல நெருக்கடி, ஐநா படை களமிறங்கவேண்டும் என வாசிக்க தொடங்கியது, இந்தியா இனி அவகாசமில்லை என அந்த சாகசத்தை செய்தது

இந்திய யூத தளபதி ஜேக்கப் அமெரிக்கா என்ன யாருமே எதிர்பாரா விதமாக வங்கதேச ஆறுகளில் படகில் டாங்கிகளை ஏற்றிசென்று இரவோடு இரவாக 1 லட்சம் பாகிஸ்தானியரை முற்றுகையிட்டார்

அதன்பின் அமெரிக்கா தாங்கள் வருவதாக சொன்னது, இங்குதான் சீனாவுக்கு நெஞ்சடைத்தது

ஆம் இன்றைய பங்க்ளாதேசில் அன்று அமெரிக்கா கால்வைத்திருந்தால் வைத்ததுதான் கால் வைத்தபின் திரும்பும் வழக்கமெல்லாம் அவர்களுக்கு ஒரு காலமும் இல்லை

அப்படி அமெரிக்க முகாம் வந்தால் சீனாவுக்கு ஆபத்து தனக்கும் ஆபத்து என கருதிய ரஷ்யா தானும் களத்தில் குதிப்பதாக அறிவித்தது அமெரிக்கா திரும்பிற்று

கவனியுங்கள், இப்பொழுதும் சீனாவை காக்கத்தான் அந்நாடு வந்தது

இப்படி திரும்பும் பக்கமெல்லாம் சீனாவினை காத்து காஷ்மீரில் சீனாவுக்கும் உரிமை உண்டு என சொல்லி இந்தியாவை தன் அடிமையாக ரஷ்யா வைத்திருந்தது

ஆனால் தன் அடிமை கம்யூனிஸ்டுகள், தொழிற்சங்கம், பொதுவுடமை எழுத்தாளர், முற்போக்கு சங்கம், மத நல்லிணக்கம், மனித்நேயம் என பல முகமூடிகளை போட்டு இந்தியாவுக்கு ரஷ்யா நட்பு நாடு என பிம்பத்தை வளர்த்தது

அது இன்றுவரை நீடிக்கின்றது

1974ல் இந்திரா வெடித்த அணுகுண்டு இந்தியாவின் தயாரிப்பு என்றாலும் ரஷ்ய உதவி உண்டு, 1972ல் ரஷ்யாவுக்கு அஞ்சி காஷ்மீரை கைவிட்டு முழுக்க ரஷ்ய அடிமையான இந்திராவுக்கு செய்த நன்றி அது

பின் ரஷ்யா உடைந்து அமெரிக்கா ஏகபோக வல்லரசானாலும் இந்திய ஆயுத சந்தையினை ரஷ்யா வைத்திருந்தது, காரணம் புதிதாக ஆயுதம் வாங்குவதை விர இருப்பதை பராமரிப்பது நல்லது என்பது காங்கிரஸ் கருத்து அதற்கு ரஷ்ய ஆயுதங்களை மேம்படுத்துவது என அங்கே விழுந்தார்கள், கூடங்குளம் அணுவுலை போல பல ரஷ்யாவில் இருந்து வந்தன‌

முதன் முதலில் ரஷ்ய பிடியினை உடைக்க விரும்பியவர் வாஜ்பாய், அவர் ஆட்சியில் இந்தியா தன் சொந்த அணுகுண்டை வெடித்தது, மேற்கொண்டு பிரான்ஸின் விமானங்களும் இன்னும் பலவும் வாங்கபட்டன, வாஜ்பாய் புதிய வாசலை திறந்தார்

அந்நேரம் ஒரிசா பாதிரி முதல் பாராளுமன்ற தாக்குதல்வரை அவர் சந்தித்த சிக்கல் கொஞ்சமல்ல, இன்னும் விமானகடத்தலெல்லாம் நடந்தது

இப்படி வாஜ்பாய் பல சவால்களை கடந்துதான் ரஷ்ய பிடியில் இருந்து இந்தியா வெளியேற பிள்ளையார் சுழிபோட்டார்

இன்று மோடி அதில் துணிந்து அடிக்கின்றார், அணிசேரா கொள்கையினை உடைத்து எந்த அணிக்கும் இந்தியா சேரும் என குவாட் அமைப்பில் இருக்கின்றார்

ரஷ்யாவின் ஆயுத இறக்குமதியினை பன்மடங்கு குறைத்து, ரஷ்ய தயாரிப்பும் இந்தியாவில் நடக்க வழிசெய்தார், இதுபோக இன்று மேலைநாட்டு உறவில் பல உதவிகள் கிடைக்கின்றன‌

இப்பொழுது உக்ரைன் ரஷ்ய மோதலில் சீனா ரஷ்யாவின் 70 ஆண்டு உறவு பகிரங்கமாக தெரிகின்றது இருவரும் கூட்டாளியாகி நிற்கின்றார்கள்

இந்த உருப்படாத கூட்டணியில் இந்தியா இருந்திருந்தால் சீனா மிரட்டும் அதைகாட்டி ரஷ்யா ஆயுதம் தரும், சீனா மிரட்டி கொண்டே இருக்கும் ரஷ்யா பணம் பெற்று ஆயுதம் தந்துகொண்டே இருக்கும்

ஆனால் சீனாவும் ரஷ்யாவும் பெரும் கூட்டாளிகள்

எப்படி இந்தியாவினை முழு பைத்தியமாக அடிமையாக மாற்றி வைத்திருந்தார்கள் என்றால் இப்படித்தான்

மோடி இதை உடைத்தார், அதற்காக முழு அமெரிக்க அடிமையாகவும் அவர் மாறவில்லை நாட்டுக்கு அவசியமாக அமெரிக்க உதவி அப்படியே ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் எண்ணெய் என எது வேண்டுமோ அதை வாங்குகின்றார்

உங்களில் எத்தனைபேர் நம்புவீர்களோ தெரியாது, இந்திரா காலத்தில் சாலைகளில் பணி அகற்றும் வாகனம் இந்திய தமிழகம் காஞ்சிபுரம் பக்கம் நின்றது ரஷ்ய தயாரிப்பு

அந்த அளவு காயலான் கடை சரக்குகளையெல்லாம் நம் தலையில் கட்டி சம்பாதித்த நாடு அது, அந்நட்டிடம் பாதிவிலையில் அல்ல அதற்கு கீழ் விலையில் எண்ணெய் வாங்கினாலும் தகும் அவ்வளவு சுரண்டியிருக்கின்றார்கள்

ஒரு காலமும் ரஷ்யா இந்தியாவின் ஆத்மார்த்தமான நண்பனாக இருந்ததே இல்லை, சீனா எனும் அவர்கள் மூலம் நம்மை அச்சுறுத்தி சீனாவுக்கும் அவர்களுக்கும் எது லாபமோ அதை செய்தார்கள்

இப்பொழுது இந்தியா அந்த அணியில் இல்லை என்பதால் பாகிஸ்தானை தன் தோளில் இருந்து எறிந்துவிட்டது அமெரிக்கா, அதுவரை அவர்களை தாங்கிபிடித்த அமெரிக்கா இப்பொழுது கைவிட்டுவிட்டது

வழக்கம் போல் இந்தியாவினை மிரட்ட பாகிஸ்தானுக்கு கைநீட்டியது ரஷ்யா, அமெரிக்காவிடம் மூட்டை மூட்டையாக வாங்கி பழக்கபட்ட பாகிஸ்தான் ரஷ்யாவின் வெற்றுகரங்களை பார்த்து முகத்தை திருப்பிகொண்டது வெறுவிஷயம்

ஆக ரஷ்யா இந்தியாவின் நட்புநாடு, ஆபத்பாந்தவன் என்ற கருத்தெல்லாம் ரஷ்ய சீன கைகூலிகள் உருவாக்கியவை, அதை இன்னும் பேசிகொண்டிருப்பவன் ஒன்று அப்பாவியாக இருக்கவேண்டும் அல்லது அப்பட்டமான தேசவிரோதியாக இருத்தல் வேண்டும்

மோடி ஒருவகையில் இப்பொழுது ஈரோட்டு ராம்சாமியின் வழியினைத்தான் பின் தொடர்கின்றார், ஈரோட்டு ராம்சாமி முன்பு ரஷ்யாவின் அனுதாபியாக இருந்தார், பொதுவுடமை அது இது என மிரட்டிகொண்டிருந்தார்

வெள்ளையன் அவரை நோக்கி கொஞ்சம் முறைத்ததும் ராம்சாமி விவரமனார், சோவியத் ரஷ்யாவிடம் இருந்து எதை பெற வேண்டுமோ அதை மட்டும் பெற்றது எதை பெற கூடாதோ அதை கவனமாக விட்டுவிட்டார்

அதாவது சோவியத்திடம் இருந்து நாத்திகத்தை கற்ற ராம்சாமி கவனமாக சிகப்பு சட்டை போடாமல் கருப்பு சட்டைக்கு வந்தார், சோவியத் போப்பாண்டவரை வைத்த இடத்தில் பிராமணனை வைத்தார்

ரஷ்ய கம்யூனிஸ்டுகள் போப்பை வறுத்தெடுத்த கேள்விகளை எல்லாம் இந்துமதகேள்விகளாக்கி தன் அபார பகுத்தறிவை ஊருக்கு சொல்லிகொண்டார்

அதே நேரம் பொதுவுடமை பற்றி ராம்சாமி பேசவே இல்லை, காரணம் அப்படி பேசினால் தன் கோடான கோடி சொத்துக்களை தோழர் அண்ணாதுரை, நிலமில்லா ஏழை கருணாநிதி போன்றோருக்கு பகிர்ந்து கொடுத்து சமத்துவ சமதரம் காக்க வேண்டி இருக்கும், இதனால் அவர்களை விரட்டி அடித்து தன் சொத்தெல்லாம் தன் வாரிசுக்கே என மணியம்மையினை கட்டி வாரிசு வளர்க்க முயற்சித்தார்

இப்படி ரஷ்ய‌ பொதுவுடமையினை வசமாக மறந்துவிட்டு, அதாவது சோவியத் கொள்கையில் எது தனக்கு தேவையோ அதைமட்டும் எடுத்துகொண்டு புரட்சி செய்ததார் ராம்சாமி

அவரால் விளைந்த ஒரே நன்மை கேரளம் போல கம்யூனிசம் இங்கு வளரவில்லை, அதை திராவிடம் என திசைமாற்றிவிட்டார்

ரஷ்யாவிடம் இருந்து எது தேவையோ அதைமட்டும் எடுத்தால் போதும் இல்லாவிட்டால் உருப்படமுடியாது என முதலில் செய்துகாட்டியவர் அய்யா ஈரோட்டு ராம்சாமி, அதைத்தான் மோடியும் செய்கின்றார்