இந்துக்களின் பாரம்பரியமான சக்தி வழிபாட்டின் ஒரு வடிவம் காளி. ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு பெயரில் அவள் அழைக்கபட்டாலும் அவளின் பொதுவான பெயர் காளி
அவள் உக்கிரவடிவானள், வீட்டுக்குள் வைத்து வணங்கதக்கவள் அல்ல, அவள் ரத்தம் குடிப்பவள், அவள் ஒரு ஆங்கார சக்தி என சொல்வோரும் அதை வைத்து கொண்டே அவள் ஒரு பிசாசு என சொல்லியும் அதை கொண்டே பயமுறுத்தி மதமாற்றும் கோஷ்டியும் உண்டு
இதனை கொண்டு பகுத்தறிவு பேசி இந்து துவேஷம் செய்யும் பதர்களும் எக்காலத்திலும் உண்டு, காளியின் தாத்பரியமும் அர்த்தமும் பொருளும் விளங்காமல் தங்கள் சிற்றறிவில் புற்றுகரையான் போல புலம்பும் கூட்டமும் உண்டு
காளி என்பது யார்? அவளின் தத்துவம் என்ன? உண்மையில் அஞ்சதக்கவளா காளி அல்லது ஒதுக்கதக்கவளா காளி?
ஒரு காலமும் இல்லை, எக்காலமுமில்லை அவளின் தத்துவமும் அது கொடுக்கும் பெருமையும் மகா உன்னதமானவை
உண்மையில் அஞ்சதக்க உருவமா காளி? இல்லை ஒரு காலமும் இல்லை
அவளுக்கு இந்துக்கள் கொடுத்த உருவத்தில் ஆயிரமாயிரம் தத்துவங்கள் உண்டு
அந்த பெரும் சக்தியினை பெண் என சொன்னார்களே ஏன்?
பெண்களே இவ்வுலகை தாங்கி இயக்குபவர்கள், அவர்களே இவ்வுலகின் ஆதார சக்தி. அவர்கள் இல்லையேல் புதியன தோன்றாது, உயிர்கள் உருவாகும் மூலம் அவர்களே
பெண்கள் இல்லா உலகம் தொடர்ந்து இயங்க முடியாது, பெண்கள் இல்லா இடத்தில் ஆண்களின் அனைத்து பலமும் செயலற்று அர்த்தமற்று போய்விடும், உலகை வழிநடத்தும் சக்தி பெண், உலகை இயங்க வைத்து கொண்டிருப்பவள் பெண்
அவள் பொறுமையின் சிகரம், ஆக்கும் வல்லமை அவர்களுக்குத்தான் உண்டு, அதே நேரம் அவர்களை போல் அழிக்கும் சக்தி யாருக்கும் இல்லை
இதனால்தான் காளி எனும் பெரும் சக்திக்கு பெண் வடிவம் கொடுத்தார்கள் இந்துக்கள்
சிவன் அவள் காலடியில் வீழ்ந்துகிடப்பதாக சித்தரித்தார்களே ஏன்?
சிவன் எனும் பெரும் சக்தியே அன்னை நீங்கினால் செயலற்று வீழும், அன்னை சிவனின் இயக்கு சக்தியாய் இருக்கின்றாள் என்பதை சொன்னார்கள்
காளிக்கு இந்துக்கள் கொடுத்த ஆங்கார உருவத்தின் தத்துவம் என்ன?
அவள் உருவம் நீல நிறம், இது பிரபஞ்சமெல்லாம் வியாபித்து நிற்கும் சக்தி அவள் என்பதால் வானம் போல் நீல வண்ணம் கொடுத்தார்கள், கண்ணனுக்கும் இதே நீல நிறம் உண்டு
அவள் கூந்தல் ஏன் விரிந்திருக்கின்றது?
கூந்தல் அசைவது போல் இந்த பிரபஞ்சம் அவளில் இயங்கி கொண்டிருக்கின்றது என்பதே அதன் பொருள். கூந்தல் ஆசையும் பொழுது ஓசை வருவதில்லை என்பது போல் பிரபஞ்சம் இயங்குவதிலும் ஓசை இல்லை, ஓசையின்றி பரந்த பிரபஞ்சத்தை இயக்குபள் அன்னை என்றார்கள்
அந்த கருங்கூந்தல் என்பது பெரும் அண்டம் கருப்பு நிறம் என்பதை சொல்கின்றது
இந்த பிரபஞ்சமும் பேரண்டமும் அவள் சிந்தையால் இயக்கபடுகின்றது, அவள் அண்டமும் பிரபஞ்சம சக்தியுமாய் இருக்கின்றாள் என்பதை சொன்னார்கள்
ஒரு மனிதனுக்கு நாவு முக்கியம், நல்லதும் கெட்டதும் புகழும் செல்வமும் மானமும் அவமானமும் யாவும் நாவால் வரும். நாவு என்பது அவ்வளவு முக்கியமானது
காளியினை வணங்கினால் நாவன்மை பெருகும், சொல்வாக்கும் செல்வாக்கும் ஏற்படும், காளியினை வணங்குவோரின் சொல் அரங்கேறும் என்பதால் நாவை நீட்டி விட்டார்கள்
கழுத்திலே மண்டை ஓடு என்ன சொல்கின்றது? சுடுகாட்டில் அவள் நிற்பதாக ஏன் சொல்கின்றார்கள்?
இறந்தபின் எல்லா ஆத்மாவும் அவளையே சரணடைகின்றன, சிறியவர் பெரியவர் வரை எல்லோரின் தலைவிதியும் வாழ்வும் அவளிடமே உண்டு என்பதை சொல்ல மண்டை ஓட்டு மாலையினை கொடுத்தார்கள்
அவளே கடைசி புகலிடம் என்பதை சொன்னார்கள்
16 கரங்களை கொடுத்தார்கள், அது காளியினை வணங்கினால் வரும் 16 வகை செல்வத்தையும் குறிப்பது, இதன் அடையாளமாக சங்கு முதல் ஆபத்தை தடுக்கும் காவல் ஆயுதம் வரை கொடுத்தார்கள்
காளிக்கு ஆடையில்லா உருவம் ஏன்?
முற்றும் துறந்த ஞானிகள் ஆடை அணிவதில்லை, ஆடையற்ற நிலை பரிபூரண ஞானத்தின் அடையாளம் என்பதால் காளியினை வணங்கினால் ஞான நிலை அடையலாம் என்றார்கள்
காளியின் கையில் அசுரனின் தலை கொடுத்தார்களே ஏன்?
எல்லா ஆபத்தையும் , தீமையினையும் அழிப்பவள் காளி. அழிப்பதோடு மட்டுமல்லாமல் அதற்கு காரணமான பிரதான ஸ்தானத்தையே அகற்றுபவள். தலை மானிடருக்கு பிரதானம் அல்லவா? அப்படி தீமைகளின் தலையினையே அகற்றுபவள் காளி என்றார்கள்
அவள் கையில் நெருப்பும் கொடுத்தார்கள், உலகுக்கே அவள் ஒளி என பொருள்
சிவனை அவள் காலடியில் வீழ்ந்து கிடக்குமாறு செய்தார்களே ஏன்? சக்தி இல்லையேல் சிவமில்லை சிவம் வீழும் என்பதை சொன்னார்கள்
இதை லவுகீக கண்ணில் மட்டும் பார்த்தாலே இவ்வளவு அருமையான விளக்கங்களை பெரும் பொழுது ஆன்மீகத்தால் சிந்தித்தால் இன்னும் பல விஷயங்கள் புரியும்.
காளி அகங்காரத்தை அகற்றுபவள், அவளை பணிய பணிய மெல்ல மெல்ல அகங்காரம் அகலும
அதைத்தான் மண்டையோட்டை அவள் கழுத்தில் அணிவதும், தலையினை கையில் ஏந்துவதும், இன்னும் சில தலைகளை மாலைகளாக அணிந்திருப்பதும்
ஆம் தலைகணம் எனும் அகங்காரத்தை நீக்குவாள் காளி அல்லது அகங்காரம் நீங்காமல் அவள் அருளை அடைய முடியாது
அவள் ஞானம் தருபவள், இறைவனை அடையும் வழியினை சொல்பவள், அனுக்கிரக தெய்வம்.
உலகை காக்க விஷம் குடித்த சிவனை போல் மானிடரின் ஆக்ரோஷ அகங்காரத்தையெல்லாம் தான் ஏற்று மானிடரை சாந்தபடுத்தி நிம்மதியும் ஞானமும் கொடுக்கின்றாள் அன்னை
அவள் ஆங்கார ரூபினியாய் நிற்கும் தத்துவம் இதுதான்
காளியை உபாசிக்க உபாசிக்க உபாசிக்க ஞானம் பிறக்கும் அவள் அம்பிகையின்தோற்றம்.. அறியக் கூடியவள் அவள் அதே நேரம் முழுக்க அறியமுடியாதவள் அவள்
ஞானமும், அஞ்ஞானமும் அவள், பிறப்பும் பிறப்பில்லாததும் அவள், சகலமும் அவள், முக்காலமும் அவள், முன்று உலகமும் அவள், மூன்று செல்வமும் அவள்,
மூவகை ஆசை நீக்கி, மூவகை மயக்கம் நீக்கி ஞானம் அருள்பவளும் அவளே, எல்லாம் அவளே
அவள் காலடியில் கிடக்கும் சிவனின் குறியீடு சொல்வதென்ன?
ஒவ்வொருவர் மனதிலும் சிவன் உறைகின்றார், ஆனால் சக்தியற்று செயலற்று கிடக்கின்றார். அந்த மனதில் அன்னை சக்தி வந்தால் மனதில் இருக்கும் சிவன் உயிர்பெறுவார் என்பதே
அண்டத்தில் இருப்பதெல்லாம் பிண்டத்திலும் உண்டு என்பது இதுதான்
வான்வெளியில் பிரமாண்ட கோள்முதல் சக்தி மிக்க கிரகங்களும் விண்மீன்களும் நிறைய உண்டு ஆனால் அவற்றை இயக்க ஒரு சக்தி வேண்டும் அன்னையின் சக்தி அதை இயக்குகின்றது
மானிட மனமும் பெரும் ஆற்றல் மிக்கது ஆனால் அதை இயக்க சக்தி வேண்டும், அந்த சக்தி இல்லையேல் மனமும் இயக்கம் பெறாது
இதனாலே சிவன் முதல் மனித மனம் வரை இயங்க சக்தி அவசியம், அதை அன்னை ஒருத்தியே தருவாள் என்பதை வலியுறுத்தி சக்தி இல்லையே சிவனே இல்லாத பொழுது மனிதன் எப்படி இயங்க முடியும் என உருவத்தில் சொல்லி அவளை வணங்க சொன்னார்கள்
தமிழகத்தில் கொற்றவை என பாலை நிலத்தின் தெய்வமாக காளியினை நிறுத்தினார்களே ஏன்? பாலை நிலத்தில் செல்வோருக்கு அச்சமும் ஆபத்தும் அதிகம்
அந்நிலையில் காளியினை நினைத்தால் அச்சம் தீரும், ஆபத்தை தவிர்ப்பாள் அன்னை என அவளை வழிதுணையாக வழிபட சொன்னார்கள்
மானிட பயணத்துக்கு மட்டுமல்ல, ஆன்ம பயணத்துக்கும் அவளே அடைக்கலம்
ஞான வாழ்வுக்கு அவளே வழிகாட்டி, கலைகள் கொடுப்பதும் அவளே, செல்வமும் புகழும் அவளால் மட்டும் வழங்கபடும்
வீரத்துக்கும் போருக்கும் அவளே நாயகி, தைரியமும் வீரமும் உத்வேகமும் தருபவள் அவளே, அதர்மத்தை வேரறுக்க வருபவளும் அவளே
அவள் முக்கால நாயகி, இதனாலேதான் அவளை வணங்கியோர் மூன்று காலங்களிலும் நிற்பார்கள்
அவள் மூன்று வடிவானவள், இதனாலேதான் அவளை வணங்கியோரெல்லாம் கல்வி, செல்வம், வீரம் என ஒவ்வொரு அடையாளம் பெற்று சிறந்தார்கள்
இந்திய அரசர்களுக்கெல்லாம் அவள் குல தெய்வமாக இருந்தாள், அவளை வணங்கிய காலத்தில் இந்திய அரசுகள் உலகின் சிறந்த அரசுகளாக இருந்தன
காளி வழிபாடு அதிகமுள்ள வங்கத்தில் இருந்துதான் விவேகானந்தர் முதல் எத்தனையோ அழியா அடையாளங்கள் கிடைத்தன
விவேகானந்தர் ஒரு தீவிர காளி உபாசகர் என்பதும் அவரின் குரு ராமகிருஷ்ண பரமஹம்சம்ரும் அப்படியே என்பதும் எல்லோரும் அறிந்தது
காளியினை வணங்கிய இடமெல்லாம் அறிவும் செல்வமும் வீரமும் பெருகும், நிச்சயம் பெருகும்
அன்னை வழிபாடு கொண்ட கேரளமும் ஆரியபட்டர் முதல் எத்தனையோ அடையாளங்களை கொடுத்தது
காளியின் நீண்ட நாவு அவளை வணங்கினால் கிடைக்கும் செல்வாக்கு கொடுக்கும் சொல்வாக்கினை குறிப்பது, அதனாலே காளிதாசன், கம்பன், அபிராமி பட்டர், குமரகுருபரர் என யார் யாரெல்லாமோ அழியா அடையாளமானார்கள்
உலகின் அதிசய கணிதமேதையான சீனிவாச ராமானுஜம் அன்னை காளி தன் கனவில் வந்து கணிதம் கற்பித்ததாக அடிக்கடி சொல்வான்
மகாகவி பாரதியார் ஒரு காளி பக்தர்
சனதான தர்மத்தை தொலைக்க வந்த பவுத்ததினை விரட்டிய ஆதிசங்கரர் முதல் சமணத்தை வேறறுத்த ஞானியர் வரை காளியின் அருள் உண்டு
இந்தியாவில் ஆப்கானியனுக்கு எதிரான சாம்ராஜ்யத்தை உருவாக்கிய வீரசிவாஜி முதல் மதுரை ஆலயத்தை டெல்லி சுல்தானிடம் இருந்து மீட்ட கம்பண்ணன் வரை காளியால் உருவானர்கள்
காளியினை வழிபடுபவர்கள் சிறப்பார்கள், எல்லா வகை ஆசீர்வாதமும் அவர்களுக்கு உண்டு, குறிப்பாக வரலாற்றில் எக்காலமும் நிலைத்திருப்பார்கள், அழிவே இல்லா பெரும் நிலை கொடுப்பது காளி வழிபாடு.
காளி வேதங்களின் தாய், அவளை அழைக்காமல் தொடங்கும் எந்த வேதகாரியமும் சிறக்காது. அவளை தொழுதுவிட்டே வேத வழிபாடு தொடங்குவார்கள், ஆனால் காலவோட்டத்தில் அது மறைந்து அதர்வண வேதத்தில் மட்டும் அவளை காளி என கொண்டாடும் மரபு வந்துவிட்டது
காளிவழிபாடு எனும் அன்னை சக்தியின் பெரும் வழிபாடு எல்லா காலத்திலும் இங்கு உண்டு, எல்லா நிலையிலும் உண்டு
அன்னை வழிபாட்டால் இத்தேசம் பெற்ற நன்மைகள் ஆயிரம், அழியா பெரும் கலைவடிவமும் காவியமும் அதிசமான சம்பவங்களும், பாரத பெரும் தாத்பரியமும் அவளாலே இங்கு கொடுக்கபட்டது
பண்டைய பெரும் நாகரீகமெல்லாம் ஆதிக்க சமயத்தால் தடம் தெரியாமல் அழிக்கபட்ட உலகில், பவுத்தம் முதல் கம்யூனிசம் வரை கண்டும் இந்திய தேசம் இந்து தேசமாக நீடிக்கின்றது என்றால் அதற்கு காரணம் காளி எனும் சக்தி வழிபாடே
இந்தியாவின் பெருந்தெய்வம் காளி, இந்தியாவின் ஆதார நம்பிக்கை காளி என்றுதான் அதை சீண்ட ஒரு கூட்டம் கிளம்பியிருக்கின்றது
காளி இந்திய ஞானத்தின் பெருவடிவம், ஆயிரமாயிரம் ஞானபோதனைகளை பிரபஞ்ச ரகசியங்களை வாழ்வியல் சூட்சுமங்களை தன்னில் கொண்டிருக்கும் அருந்தெய்வம், அந்த மாகா சக்தி காளி அன்னை அந்த கூட்டத்தை வதம் செய்யும் காலம் நெருங்கி கொண்டிருக்கின்றது