குமரகுருபரர் நீதிநெறிவிளக்கம் : 40″தம்முடை யாற்றலும் மானமுந் தோற்றுத்தம்இன்னுயிர் ஓம்பினும் ஓம்புக – பின்னர்ச்சிறுவரை யாயினும் மன்ற தமக்காங்கிறுவரை யில்லை யெனின்”அதாவது ஒருவன் தன்னுடைய ஆற்றமும் மானமும் இழந்து தன் உயிரை காக்கலாமா என்றால் காக்கலாம், ஆனால் அப்படி அந்த உயிரை எவ்வளவு காலம் காக்கமுடியும் என உறுதியாக தெரிந்தால் எதை இழந்தேனும் உயிரையும் உடலையும் காக்கலாம் என்பது பொருள்சாவு நிச்சயம் அதுவும் எப்பொழுது அந்த சாவு வரும் என தெரியாத நிலையில் மானம் கெட்டு வாழ்வதில் தன் ஆற்றலை பரிசீலிக்காமல் வாழ்வதில் அர்த்தமே இல்லை என்கின்றார் குமரகுருபரர்