ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 110 – நினைப்புறுதல் / குறள் : 02″குண்டலியி னுள்ளே குறித்தரனைச் சிந்தித்துமண்டலங்கள் மேலாகப் பார்”இக்குறள் “குண்டலினி உள்ளே குறித்து அரணை சிந்தித்து மண்டலங்கள் மேலாக பார்” என பிரிந்து பொருள் தரும்தியானத்தில் அமர்ந்து ஆறு சக்கரங்களின் முதல் சக்கரமான மூலாதாரத்தில் இருந்து எழும் குண்டலினி சக்தியினை மேல் வரை அதாவது துரிய சக்கரம் வரை எழுப்பி அந்த சக்தியின் மூலம் சிவனை உணரவேண்டும், உணர்வில் சிவனை காணவேண்டும் என்பது குறளின் பொருள்யோகநிலையில் 6 சக்கரங்களையும் குண்டலினி சக்தியால் துலங்க செய்து, உச்சந்தலையின் துரிய சக்கரம் துலங்க செய்து அந்த ஞான வெளிச்சத்தில் சிவனை தன் புருவ நெற்றியிலே (மண்டலம்) காணலாம் என்பது பொருள்