ஆச்சாரகோவை : 27

“இழியாமை நன்கு உமிழ்ந்து எச்சில் அற வாய்
அடியோடு நன்கு துடைத்து, வடிவு உடைத்தா
முக் கால் குடித்துத் துடைத்து முகத்து உறுப்பு
ஒத்த வகையால் விரல் உறுத்தி வாய்பூசல் –
மிக்கவர் கண்ட நெறி”

இப்பாடல் உண்டு முடித்தபின் செய்யவேண்டிய காரியங்களை சொல்கின்றது

உண்டு முடித்தபின் வாயில் நீரை எடுத்து அதை தொண்டைக்கு முன் நிறுத்தி வாயினை அலம்பி கொப்பளிக்க வேண்டும், பின் வாயினை துடைக்க வேண்டும்

மும்முறை உள்ளங்கையினால் நீரை மும்முறை பருக வேண்டும்

விரல்களில் கண், காது மூக்கு ஆகியவற்றை விரல்களால் சுத்தம் செய்து கொள்ள வேண்டும் (ஒருவேளை உண்பவன் அறியாமல் அங்கு உணவு துகள் ஒட்டியிருக்கலாம்) என்பது பாடலின் பொருளாகும்

உண்டபின் வாயினை சுத்தம் செய்து மும்முறை நீர் குடிக்க வேண்டும், முகத்து உறுப்புக்களையும் சுத்தம் செய்யவேண்டும் என்பது பாடலின் பொருள்