ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 110 – நினைப்புறுதல் / குறள் : 03

“ஓர்மின்கள் சிந்தையி லொன்றச் சிவன்றன்னைப்
பார்மின் பழம்பொரு ளேயாம்”

இக்குறள் “ஓர்மின்கள் (ஒருமித்த) சிந்தையில் ஒன்ற சிவன் தன்னை பார்மின் (பார்க்க கூடிய) பழம்பொருளே யாம்” என பிரிந்து பொருள் தரும்

உள்ளத்தை ஒருமைபடுத்தி , அந்த ஒருமைபட்ட சிந்தனையில் ஒடுங்க செய்து அந்த ஏக தவத்தில் சிவனை காண வேண்டும் என்பது குறளின் பொருளாகும்

உள்ளம் ஒருமுகபட்ட ஒரே சிந்தனையில் வரவேண்டும், மொத்த மனமும் ஒரே சிந்தனையில் வந்து அந்த சிந்தனை சிவனில் ஒடுங்கி அந்த உச்ச யோகநிலையில் சிவனை கண்டு முக்தி நிலை எய்த வேண்டும் என்கின்றார் ஒளவையார்