ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 110 – நினைப்புறுதல் / குறள் : 04″சிக்கெனத் தேர்ந்துகொள் சிந்தையி லீசனைமிக்க மலத்தை விடு”இவ்வரி “சிக்கென தேர்ந்து கொள் சிந்தையில் ஈசனை மிக்க மலத்தை விடு” என பொருள் தரும்இங்கு மலம் என்பது ஆணவம் , கண்மம் (ஆசை பாசம்), மாயை எனும் மூன்று அடிப்படை பாவங்களை குறிப்பது. உலகின் எல்லா பாவமும் கர்மாவும் இந்த மூன்று விஷயங்களின் அடிப்படையில்தான் அமைகின்றன‌இந்த மூன்று மலம் (குற்றம்) அடிப்படையில் செய்யபடும் பாவங்களே அடுத்தடுத்த பிறவிகளை நிர்ணயம் செய்கின்றன, இதனால் முக்தியின்றி ஆன்மா சுழற்சியில் சிக்கிகொள்கின்றதுஇதனால் இம்மூன்றையும் வெல்லவேண்டும், களையவேண்டும் என்பார்கள் ஞானியர்திருமூலர் தன் பாடலில் சொல்கின்றார்”திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந்திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.”திருவடி உணர்வு உயிர்களை மும்மலப் பிணிப்பினின்றும் முழுமையாய் விடுவிக்கும் என்கின்றார்ஒளவையும் தன் விநாயகர் அகவலில் “மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே” என மருவுகின்றார்இந்த குறளே ” சிவபெரு மானே எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்” என்ற மாணிக்கவாசகருக்கு மூல மொழியாயிற்றுசிவனை சிக்கென உறுதியாக பற்றிகொண்டால் மும்மலங்களையும் அறுத்து பிறவி பிணி தீர்க்கலாம் என்பது குறளின் பொருளாகும்..