15ம் போர்ச்சுகீசியர் நூற்றாண்டில் அந்த கோவா பக்கம் மெல்ல மெல்ல கிறிஸ்துவத்தை புகுத்தினார்கள்
ஆப்கானியரும் ஈரானியரும் வந்து பிடித்து தங்கள் மதத்தை பரப்பும் இந்தியாவில் தாங்களும் பரப்பினால் என்ன என அவர்களாக மதம் பரப்பினார்கள், அவர்கள் மதத்தின் பின்னால் காலணி ஆட்சி கணக்கு இருந்தது
அந்த இந்துமக்கள் அன்று அந்நிய ஆட்சியில் சிக்கியிருந்தனர், அந்நியரான ஆப்கானியரும் ஈரானியரும் வந்து இஷ்டத்துக்கு ஆண்டுகொண்டிருந்ததில் அந்த மண்ணின் சொந்தமக்கள் வெகு பாதிப்புக்குள்ளாயினர், அவர்களுக்கென ஆட்சி இல்லை அதிகாரம் இல்லை ராணுவமில்லை எதுவுமில்லை எதுவுமே இல்லை
அவர்கள் மதமும் ஆன்மீகமும் மட்டும் எஞ்சியிருந்தது அதற்கும் சுல்தான்களிடம் இருந்து பெரும் ஆபத்து வந்து கொண்டிருந்தது
இந்த அபலைகளைத்தான் “நீங்கள் சாத்தானை வழிபடுவதால் வந்த சோதனை இது, உங்கள் மதம் சாத்தான் மதம், உங்கள் துன்பத்துக்கு அதுதான் காரணம். கிறிஸ்துவத்துக்கு வந்தால் வளமாக வாழலாம்” என ஆசைகாட்டி இழுத்தது போர்ச்சுகீசியம்
அம்மக்களும் தங்களுக்கென தலைவனும் வழிகாட்டலும் இல்லா நிலையில் சிலர் மதம் மாறினார்கள், அதுவும் மிக சொற்பமே
அந்த சொற்பத்தை வைத்து மெல்ல இந்திய நாடியினை பிடித்து பார்த்தார்கள் போர்ச்சுகீசியர், காரணம் கேரளத்தின் கள்ளிகோட்டையில் நடந்தது போல் கொங்கன் பக்கமும் நடந்தால் தலை தப்பாது
ஆனால் கேரளத்தில் இருந்தது இந்து மன்னன் கொங்கனை ஆண்டது இஸ்லாமிய சுல்தான் அதுவும் அன்னிய சுல்தான் என்பதால் அவர்களுக்கு சில வாய்ப்புக்கள் வந்தன, இந்துக்களுக்கு எது நடந்தால் நமக்கென்ன? வரி வந்தால் போதாதா என அவர்கள் போக்கில் இருந்தார்கள் சுல்தான்கள்
அந்நியன் ஒரு நாட்டை ஆள்வதற்கும் சொந்த மண்ணின் தலைவன் ஆள்வதற்கும் உள்ள வித்தியாசம் அன்று அழகாய் தெரிந்தது
மெல்ல மெல்ல தங்கள் மிரட்டலை தொடங்கினார்கள்
15ம் நூற்றாண்டின் முதல் காலாண்டில் மெல்ல மெல்ல சட்டங்களை அறிவித்தார்கள், அவை கிட்டதட்ட 230 சட்டங்களை கொண்டிருந்தன
போர்ச்சுகீசியர் ஆளும் இடங்களில் இனி கிறிஸ்துவமே மதம் மற்ற மதங்கள் தடை செய்யபடுகின்றன ஆனால் அவர்கள் சில கட்டளைகளை கடைபிடித்தால் வாழலாம்
இந்துக்கள் ஆலயங்களில் மணியோசை எழகூடாது, திருவிழா நடக்க கூடாது, இந்துக்கள் சந்தணம், குங்குமம் , விபூதி பூச கூடாது, கோவில்களுக்குரிய இசைகருவிகளை பயன்படுத்த கூடாது
பிராமணர்கள் கிறிஸ்தவ விரோதிகள் அவர்களுடன் பழக்கம் வைத்திருப்போருக்கு அரசு சலுகை கிடையாது
இந்து ஆலயங்களை புதிதாக கட்ட கூடாது, பழைய ஆலயங்களை பழுது பார்க்க அரசிடம் அனுமதி கேட்க வேண்டும், அரசு அனுமதி தராவிட்டால் அவை அழியட்டும்
இந்துக்களின் சமூக குடும்ப வழக்கங்களும் தடை செய்யபடும், இறப்புக்கான சடங்குகள் ஏதுமில்லை இந்துக்களின் மரபான இறந்தவர் நினைவாக உணவிடுதல் போன்றவை தடை செய்யபடும், பிறந்த குழந்தைக்கான எல்லா சம்பிரதாயமும் நிறுத்தபடும்
இந்துக்களின் பூமி பூஜை முதல் எல்லா பூஜையும் நிறுத்தபடும்
மாட்டுகறி எங்கும் கிடைக்கும், யார் வீட்டு முன்னாலும் மாடு வெட்டபடும் அதை தடுப்பது சட்டவிரோதம்
துளசி வளர்க்க கூடாது, இந்துக்கள் விபூதி குங்குமம் அணிய கூடாது, வீடுகளின் முன் இந்து அடையாளமெ இருக்க கூடாது
எங்கள் ஆட்சியில் இந்து கிறிஸ்தவனை திருமணம் செய்தாலும் கிறிஸ்தவன் இந்துவினை திருமணம் செய்தாலும் அது கிறிஸ்தவ குடும்பம் அவர்கள் எல்லா வகை நிகழ்வும் கிறிஸ்தவ முறைபடி நடக்கும்
கிறிஸ்துவத்தை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு வைக்க வேண்டும், அதை விமர்சிப்பதோ கேள்வி கேட்பதோ கூடாது, கேட்டால் தலை சீவபடும்
இந்துக்கள் ஆயுதம் வைத்து கொள்ள அனுமதி இல்லை, குதிரை வைத்து கொள்ள அனுமதி இல்லை
இந்துக்கள் சொத்து வாங்க அனுமதியில்லை, வாங்கும் சொத்துக்கு ஈடான பணத்தின் இருமடங்கை வரியாக கட்டினால் அது பரிசீலிக்கபடும்
போப்பையும் போர்ச்சுக்கல் மன்னனையும் வணங்கித்தான் எல்லா வேலையும் நிகழ்ச்சியும் தொடங்கபட வேண்டும், எல்லா புகழும் அவர்களை சாரவேண்டும்
வேதசாலைகள் மூடபட வேண்டும் , மந்திரம் யாகம் என ஏதும் செய்தால் தொலைத்துவிடுவார்கள்
இனி சமஸ்கிருதம் கொங்கனி பார்சி அராபிய மொழி என எதுவுமில்லை, ஒரே மொழி லத்தீன் மட்டுமே போர்சுக்கல் படிக்கபவர்களுக்கு சன்மானம் அதிகம்”
இப்படி முதற்கட்ட அறிவிப்புக்களை செய்து பார்த்தனர், அது நாடிபிடித்து பார்க்கும் அறிவிப்பு, இந்திய தரப்பிடம் இருந்து எப்படி எதிர்ப்பு வருகின்றது என கணிக்கும் அறிவிப்பு
ஆனால் சுல்தான்களிடம் இருந்து எதிர்ப்பே இல்லை, இந்துக்களின் எதிர்ப்பை காதுகொடுக்க கேட்க யாருமில்லை இது போர்ச்சுகீசியர் தங்கள் மிருக குணத்தை காட்ட தோதாயிற்று
1530களில் கொடிய முகத்தை காட்ட தொடங்கினார்கள், இந்து ஆலயங்களெல்லாம் சாத்தான்கள் என சொல்லி இடிக்கபட்டன, இந்துக்களுக்கு காட்டுமிராண்டிகள் எனும் முத்திரை குத்தபட்டது
இந்துக்களின் புனித நூல்கள் எல்லா மொழியில் இருந்தாலும் எரிக்கபட்டன, இந்துக்களின் சிலைகள் புதைக்கபட்டு சர்ச் சுவர்கள் எழும்பின
15 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் கிறிஸ்தவ போதனைகளை கேட்க வலியுறுத்தபட்டனர், மீறினோருக்கு சவுக்கடி வழங்கபட்டது
பிராமண துவேஷம் உருவாக்கபட்டது, அவர்களை ஏளனபடுத்துவதும் முடிந்தால் அடித்து விரட்டுவதும் ஊக்குவிக்கபட்டது
பிராமணர்களே எல்லா இந்து சடங்குகளையும் செய்வதால் இந்துமதத்தில் அவர்களுக்கு தனி இடம் இருந்ததால் அவர்களை இந்துமதத்தில் இருந்து பிரித்தால் அம்மதம் சரியும் என திட்டமிட்டனர்
இந்துமத ஆணிவேராக அவர்கள் இருக்கும் நிலையில் எல்லா இணைப்பு சங்கிலியும் அவர்களிடம் இருக்கும் நிலையில் அவர்களை வெட்டிவிட்டால் இந்துமதம் குலையும் என கணக்கிட்டனர்
பிராமண வெறுப்பு அப்படி விதைக்கபட்டது, பிராமணர் சமூக விரோதிகளாயினர் , கொல்லபட்டனர் விரட்டபட்டனர், மந்திரம் சொல்ல கூடாது என வாயடைக்கபட்டனர்
ஆட்சி ஆப்கனியமிடம் இருக்க மக்கள் வரியெல்லாம் ஆப்கனுக்கும் போர்ச்சுகீசியருக்கும் செல்ல மக்களின் வறுமைக்கும் குழப்பத்துகும் பிராமணமே காரணம் என பொய் பரப்பபட்டது
பிராமணர்கள் எந்த சடங்கிலும் அழைக்கபட கூடாது, அவர்கள் வந்து மந்திரம் சொல்ல கூடாது என்றெல்லாம் கடும் தடை விதிக்கபட்டது
வாரிசு இல்லாதோர் சொத்துக்கள் தேவாலயங்களுக்கு வந்தன, பெற்றோர் இல்லா குழந்தைகளை சர்ச் எடுத்து கிறிஸ்தவராக்க்கியது, ஜனவரி 25 அப்போஸ்தலன் சின்னப்பனின் நினைவுநாளாக கருதபட்டு அனறு பல்லாயிரம் பேருக்கு கூட்டு ஞானஸ்நானம் ஒவ்வொரு வருடமும் வழங்கபட்டது
சுமார் 300 ஆலயங்கள் இடிபட்டு சர்ச்சுகளாக மாற்றபட்டன இன்னும் பெரும் மிரட்டல் எல்லாம் நடந்தது
இந்து ஆலயம் என்பதும் அதன் வழிபாடு என்பதும் மிகபெரிய பண சுழற்சி கொண்டவை, நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளாமான மக்கள் அதை நம்பி வாழும்படி ஏற்படுத்தபட்டவை
அந்த பண சுழற்சித்தான் இந்திய கண்டத்தின் பொருளாதாரத்தை உயர நிறுத்தியிருந்தது, கோவிலுக்கும் திருபணிக்கும் இன்னும் பலவற்றுக்கும் நடக்கும் அந்த சுழற்சியில் அரசுக்கு வரவேண்டிய வரியும் இன்னபிறவும் குவியும், பணமும் சுழன்று கொண்டே இருக்க்கும்
அந்த கோவில்களை மூடினால் பல்லாயிரம் பேர் வீதிக்கு வருவார்கள், அந்த அபலைகளை சர்ச் வேலைக்கு மதம் மாற்றுவதும் இன்னும் பல அடிமை வேலைக்கும் பயன்படுத்துதல் எளிதாகும் எனும் பெரும் சதியெல்லாம் அதனில் இருந்தது
இவ்வளவு நடந்தும் அன்றைய மக்கள் தொகையில் சுமார் 10% கூட அவர்களால் மதம் மாற்றமுடியவில்லை இந்துக்களின் வேர் அப்படி இருந்தது
அதிர்ந்த போர்ச்சுகீசியம் கடும் நெருக்கடிகளை கொடுத்தது, இந்து ஆண்கள் வேட்டி கட்ட தடை என்றும் பெண்கள் மார்பில் சோளி அணிய தடை எனவும் அறிவித்தது
முதன் முதலில் முலைவரி கொடுமை கோவாவில்தான் அரங்கேறிற்று
அரசு வழங்கும் மாட்டுகறி விருந்தில் எல்லோரும் பங்கு கொள்ள வேண்டும், மீறினால் சவுக்கால் விளாசபடுவார்கள், இந்துக்கள் வாயில் மாட்டுகறி வலிய திணிக்கபட்டது
இந்த மாட்டுகறி விவகாரம் சுல்தான்களுக்கு ஒரு சமரசத்தை கொடுத்தது என்பது வேறுவிஷயம்
இந்துக்கள் இனி குடும்ப பெயர்களை சொல்ல கூடாது, இந்து பெயர் சூட்ட கூடாது, ஜாதகம் பார்க்க கூடாது,கிராம வைத்தியம் பார்க்க கூடாது, குறி கேட்க கூடாது, குல தெய்வ வழிபாடு கூடாது அவை எல்லாம் சாத்தான் வழிபாடு என தடுக்கபட்டன
பூச்சுடுதல் , பொட்டுவைத்தல் என எல்லாம் தடை செய்யபட்டன. ஆண்கள் கொண்டை வளர்க்கவும் தடை விழுந்தது, வெற்றிலை தாம்பூலமெல்லாம் ஒடுக்கபட்டன
வரதட்சனை போன்ற குடும்ப நிகழ்வு கூட போர்ச்சுகீசிய அதிகாரியால் உறுதிசெய்யபட்டன அது வளமான குடும்பம் எனில் பெரும் தொகை போர்ச்சுகீசிய மாளிகைக்கு செல்ல வேண்டும்
இந்துக்களின் குடும்பங்களுக்கு வகை வகையாக வரிகள் விதிக்கபட்டன, எப்படியெல்லாம் ஒடுக்கி பலவீனமாக்க முடியுமோ அப்படியெல்லாம் ஒடுக்கினார்கள்
விழாக்கள், விரதங்கள் எல்லாம் தடைசெய்யபட்டன, தர்ப்ணங்கள் கூட செய்யகூடாது என்றானது
இந்துக்கள் சமூகத்தில் பிச்சைக்காரர்கள் இருக்கமாட்டார்கள் அந்த அளவு தானமும் தர்மமும் சமூகத்தை சரியாக வைத்திருந்தது, தர்பணங்கள் கால உணவுதானம் பிச்சைக்காரர் இல்லாமல் செய்திருந்தது
இப்படியெல்லாம் இந்து சம்பிரதாயம் நிறுத்தபட்டதால் வறுமையுற்றோர் பிச்சையெடுக்க தொடங்கினர்
அவர்கள் உடனே போர்ச்சுகீசிய கிறிஸ்தவ கும்பலால் அள்ளி கொண்டு செல்லபட்டு ஞானஸ்நானம் கொடுக்கபட்டனர்
கொடிய குற்றவாளிகளுக்கும் கிறிஸ்துவத்தை ஏற்றால் மன்னிப்பு என ஆசைகாட்டபட்டு மதமாற்றம் நடந்தது இன்னும் என்னவெல்லாமோ நடந்தது
இந்துக்களுக்கு அரச வாய்ப்பு இல்லை, இந்துக்கள் சாட்சி சொன்னால் செல்லாது, இந்துக்கள் வழக்கு நடத்த முடியாது, இந்துக்களுக்கு நிலவரி பலமடங்கு அதிகம், இந்துக்கள் வயலுக்கு பாசனமில்லை என்றும் பலவகை கொடுமைகளை இழைத்தது
இந்துக்கள் மேல் ஜெண்டா (புற இனம்) எனும் கடும் வரி விதிக்கபட்டது, கிறிஸ்தவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கபட்டது, இந்துக்கள் நீதிமன்றம் செல்லமுடியாது, நீதி கோர முடியாது
இன்னும் கடுமையான இறுக்கங்களில் வாழ்ந்தால் கிறிஸ்தவமாகமட்டும் வாழ வாய்ப்பு அளிக்கபட்டது
தேர் திருவிழா, இதர திருவிழா, கொடியேற்றம் என எல்லாமும் நிறுத்தபட்டு இந்துக்களின் தொடர்பே வலையறுக்கபட்டது.
இந்துக்கள் முடிந்தவரை கண்ணீரில் வாழ்ந்து பார்த்தார்கள், அக்காலத்திலும் இந்துக்களாய் நிலைத்திருந்தார்கள்
(இங்கே ஒரு சந்தேகம் எழலாம், இப்பொழுது கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இந்துக்கள் போல் வாழ்கின்றார்கள், மாதாவுக்கு சேலை அந்தோணியாருக்கு கிடா வெட்டு என வாழ்கின்றார்களே அப்படியானால் இதெல்லாம் என்ன என கேள்வி எழலாம்
இக்காலகட்டம் 15ம் நூற்றாண்டு அன்று போர்ச்சுகீசியருக்கு கிறிஸ்தவ போட்டியாளர் இல்லை, பின்னாளில் பிரான்ஸ், பிரிட்டிஷ் மிஷனரிகள் வந்தபொழுது இவர்களும் மாறினர் அப்பொழுதுதான் அதாவது 18ம் நூற்றாண்டில்தான் பல விஷயம் அனுமதிக்கபட்டது
அப்பொழுதும் 1960 வரை லத்தீனே ரோமை கத்தோலிக்க ஆலயங்களில் வழிபாட்டு மொழியாய் இருந்தது)
போர்ச்சுகீசியரின் இந்த அடாவடிகள் அங்கே மட்டும் நிற்கவில்லை, தமிழ்பேசும் பகுதியின் தென்னக பகுதிகள் வடக்கே சில பகுதிகள் என ஆட தொடங்கினார்கள்
மதராஸ் எனும் அவர்கள் மாலுமி இறந்த இடத்தில் மதராசபட்டினம் என ஒரு நகரை உருவாக்க தொடங்கினார்கள். தோமை இந்தியா வந்ததாக கதை கட்டினார்கள்
அந்த மலையில் தோமை இறந்தான் என்றும் அவன் கல்லறை இது எனவும் ஏதேதோ சொல்லி வரலாற்றை மாற்றினார்கள், 1500ம் ஆண்டுக்கு முன் இல்லா குழப்பமெல்லாம் அப்பொழுதுதான் வந்தன
அப்பொழுது தமிழகத்தை ஆண்ட நாயக்க மன்னர்களிடம் கடல்படை இல்லாததால் அதுவரை கடற்கரையில் இருந்த சோழ பாண்டிய வம்சம் ஆப்கானியரால் முடிந்திருந்ததால் வேறு வழியின்றி சங்கு முத்து குளித்தல் போன்ற வியாபாரங்களுக்கு இவர்களை அனுமதித்தனர்
இதனால் தமிழ்பேசும் கடற்கரைகள் எளிதில் போர்ச்சுகீசியரால் வளைக்கபட்டு மதம் மாற்றபட்டது.
அப்படியே இலங்கைக்கு தாவினார்கள் அங்கும் தோமா வந்த கதை உண்டு கடற்கரையோரெங்கும் இந்து ஆலயம் இடித்தல் கட்டாய மதமாற்றம் என தொடர்ந்தார்கள்
கடாரத்தின் மலாக்கா பக்கம் இதையே செய்து சீனாவுக்கும் சென்றார்கள், ஆனால் சீன மன்னன் வலுவாக இருந்ததால் வாலை சுருட்டி மக்காவ் தீவிலே அமர்ந்துகொண்டார்கள்
கோவா பக்கம் இந்துக்களுக்கு நெருக்கடிகள் நீண்டன, சுமார் 3 லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்த பக்கம் அதிதீவிர கொடுமைகள் அரங்கேறின, இதில் இஸ்லாமியரையும் பல இடங்களில் பாடாய் படுத்தினர்
டையூ பக்கம் அவர்கள் செய்த அட்டகாசம் தாளாமல் அன்றைய குஜராத் சுல்தான் துருக்கி சுல்தானிடமே கடற்படை அனுப்ப கோரினான், ஆனால் சுல்தானிய கடற்படையும் போர்ச்சுகல் கடற்படையினை வெல்லமுடியாமல் போனதில் போர்ச்சுகீசிய ஆட்சி நிலைத்தது
சுமார் 3 லட்சம் மக்கள் கொங்கனில் இப்படி சிக்கி கொண்டபொழுது அதில் சுமார் 10% கீழ் கிறிஸ்தவர்களாயிருந்தபொழுது மீதி 90 இந்துக்கள் வாழ்க்கை மிக கொடியதாயிற்று, அப்பொழுது கிறிஸ்தவ எண்ணிக்கை இன்னும் அதிகரித்தது
வாழ்வுக்கும் வசதிக்கும் போர்ச்சுகல் மிரட்டலுக்கும் சுல்தானிய புறக்கணிப்புக்கும் பாதுகாப்புக்கும் அஞ்சி மாறினார்கள்
அப்படி கிறிஸ்தவ எண்ணிக்கை 15% தொட்டது
ஆனால் கிறிஸ்தவம் முழு மகிழ்ச்சியினை அம்மக்களுக்கு தரவில்லை, இந்துக்களின் வேர்களில் மூழ்கியிருந்த அவர்களுக்கு கிறிஸ்துவத்தின் குறைகள் பளிச்சென தெரிந்தன
வேறுவழியின்றி கிறிஸ்துவத்துக்குள் வந்தாலும் தாய் மடி தேடும் குழந்தை போல அவர்கள் தேடினார்கள், காலம் காலமாக தொடர்ந்த சம்பிரதாயம் அவர்களை கிறிஸ்துவத்தில் இருக்கவிடாமல் கலைத்தது
இந்திய கலாச்சாரத்தில் காலம் காலமாய் இருந்தவர்களுக்கு அந்த ஐரோப்பிய கலாச்சாரம் வெறுப்பை கொடுத்தது
அனுதினமும் காலை எழுந்து குளித்து மந்திரம் சொல்லி சூரியனை வணங்கி பூமியினை வணங்கி பசுவினை வணங்கி வாழ்வினை தொடங்கிய இனம் அது, அவர்களுக்கு எல்லாமே தெய்வம்
எக்காரியம் செய்தாலும் நல்ல நாள் பார்த்து நேரம் பார்த்து செய்து பழக்கபட்ட இனம் அது, ஒவ்வொரு காரியத்துக்கும் பூஜைகள் அவசியம்
மஞ்சளும் குங்குமமும் சூடமும் வழிபாடும் அவர்கள் சம்பிரதாயமாயிற்று, காலை எழுந்து பூச்சூடி துளசிமாடம் சுற்றி வாசலில் கோலமிட்டு என்பதெல்லாம் அவர்கள் பாரம்பரியம் அதை தவிர்த்தால் சாவதற்கு சமம் என்ற வலியினை கொடுத்தது
மஞ்சளும் குங்குமம் பூவும் இதர அடையாளங்களும் அவர்கள் ரத்ததில் கலந்தவை, அதனை திடீரென வெட்டிவிட அவர்களால் முடியவில்லை. இந்துவாய் வாழ்ந்துவிட்டு அதை விடமுடியும் என்பது கற்பனைக்கும் எட்டாத விஷயம் அதை அவர்கள் மெல்ல உணர்ந்தார்கள்
திருமணம் முதல் இறப்புவரை அவர்களுக்கு பூஜை உண்டு, விளைச்சல் வந்தவுடன் குலதெய்வ வழிபாடு உண்டு இன்னும் தேர் உண்டு திருவிழா உண்டு கலையும் காட்சிகளும் இசையும் உண்டு
நோய் என்றால் கிராம வைத்தியம் உண்டு , சூட்சும சக்திகளுடன் பேச அதர்வண வேதம் உண்டு யாகம் உண்டு இன்னும் என்னவெல்லாமோ உண்டு
அந்த மதத்தில் இல்லா எதுவுமில்லை என்ற அளவு நிறைவாய் இருந்தது
எப்பொழுது மழைகாலம், எப்பொழுது விளைச்சல் உண்டு இந்த மாதம் இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதை அவர்கள் பஞ்சாங்கம் சரியாக சொல்லிற்று
கிரகங்கள் கிரகணங்கள் என ஒவ்வொரு மனிதனுக்குமான கர்மாவினை அது சரியாக அளந்து சொல்லிற்று
வீடு முதல் அரண்மனை வரை, விளையாட்டு முதல் ராணுவம் வரை அந்த இந்து கலாச்சாரம் உன்னதமான வாழ்வினை அம்மக்களுக்கு கொடுத்திருந்தது, தத்துவம் முதல் ஆன்மீகம் வரை எல்லா விஷயத்திலும் நிறைவு அடைந்திருந்தது
இதில்தான் இந்துஸ்தானம் செழிப்பாய் இருந்தது, செல்வமிக்க நாடாய் இருந்தது அதை தேடித்தான் இக்கூட்டம் ஐரோப்பாவில் இருந்து வந்தது.
அதையெல்லாம் விட்டுவிட அந்த மக்கள் தயாராக இல்லை, கிறிஸ்தவம் தங்களை ஐரோப்பிய அடிமையாக்கி குடியும் கூத்தும் அழுக்கும் கொண்டு ஒரு வாழ்வினை இந்திய கலாச்சாரத்துக்கு பொருத்தமில்லா வாழ்வினை கொடுப்பதாக உணர்ந்தனர்
எதற்கெடுத்தாலும் ஜெருசலேம், வாடிகன் என அவர்கள் அங்கே கவனத்தை திருப்ப தங்கள் குழந்தைகள் குழப்பமான சூழலில் வளர்வதை உணர்ந்தனர், விபரீதங்கள் நடப்பதை உணர்ந்தனர்
இன்னும் கிறிஸ்து பெயரை சொல்லி போச்சுகீசியர் தங்க வேட்டை நடத்தி தங்களை சுரண்டுவதையும், வலுவான தீர்வுகளை கொடுக்கமுடியா அம்மதம் குழம்பி நிற்பதையும் கண்டனர்
பசுவதையும் மாட்டுகறி கொடுமையும் தங்கள் விவசாயத்தை பாதிப்பதை உணர்ந்து அதை நிறுத்த முயன்றார்கள்
கலாச்சார இந்துமதமே தங்களை வாழ வைத்திருகின்றது என்பதை உணர்ந்து மெல்ல மெல்ல கலாச்சார பக்கம் திரும்பினார்கள் ஆனாலும் கிறிஸ்துவினை வணங்க அவர்கள் மறக்கவிலை
இது போர்ச்சுகீசியருக்கு மெல்ல புரிய ஆரம்பித்தது, இந்துக்கள் பல இடங்களில் அதர்வண வேதங்களை நாடுவதை அறிந்தவர்கள் ஐரோப்பிய மந்திரவாதிகளை கொண்டு சில கிறிஸ்தவ கோவில்களை ஸ்தாபித்து என்னவோ சொல்லி சமாளித்து பார்த்தனர்
எனினும் கிறிஸ்துவத்தின் குறைகள் பளிச்சென தெரிந்தன, மக்களிடம் முணுமுணுப்பு வந்தது, அவர்கள் ஜாதகம் பார்த்தல் இதர இந்து கலாசார விஷயம் குலதெய்வ வழிபாடு , தீபமும் மலரும் சாற்றி விக்ரக வழிபாடு என இல்லங்களில் ரகசியமாய் செய்தார்கள்
காலம் காலமாய் பண்டிகைகளை கொண்டாடி மகிழ்ந்த அந்த இனம், விரதங்களை முறையாக அனுஷ்டித்த இனம் அதை விடமுடியாமல் ரகசியமாய் கொண்ட்டாடிற்று
இந்நிலையில்தான் 1540ம் வாக்கில் அந்த துறவி கோவா வந்தான், அவர் அம்மக்கள் பெயருக்கு கிறிஸ்தவர்களாகவும் செயலில் ரகசியமாக இந்து பாரம்பரியத்தில் இருப்பதையும் கண்டான், இப்படியே விட்டால் இவர்கள் கிறிஸ்துவத்தை விட்டு ஓடிவிடுவார்கள் என அஞ்சினான்+மிக கடுமையாக நடவடிக்கை எடுக்கும்படி வாடிகனுக்கு கடிதம் எழுதியவன் அவனே, அம்மக்கள் கிறிஸ்துவத்தில் இருந்து நழுவுவது அவனுக்கு அவ்வளவு வெறுப்பை கொடுத்தது, அவர்களை மிக இழிவுபடுத்திய அவன் தீரா கோபம் கொண்டு “கடும் நடவடிக்கை” எடுக்க கடிதம் எழுதிவிட்டு தமிழக பக்கம் சென்றான்
உண்மையில் போப் அனுப்பிய கண்காணிப்பாளன் அவன், போர்ச்சுக்கல் சொல்வதெல்லாம் உண்மையா? அங்கு நம் ஆட்சி உறுதி செய்யபட்டுவிட்டதா என்றெல்லாம் கண்காணிக்க வந்தவன்
இயேசு சபை துறவியாக வந்து பெரும் விபரீதங்களுக்கு வித்திட்டவன்
அவனேதான் மிகபெரிய கொடூரங்களை ஏற்பட காரணமானவன், இன்று புனித பிரான்ஸிஸ் சேவியர், தென்னகத்தில் தூய சவேரியார் என கிறிஸ்தவர்களால் வணங்கபடும் அந்த துறவி அன்று செய்வித்த காரியங்களின் விளைவு வரலாறு காணா கொடுமையாய் இருந்தது
இம்மக்களை விசாரிக்க “புனித விசாரணை” என ஒரு அமைப்பு ஏற்படுத்தபட்டு அவர்களை விசாரிக்க இருவர் வந்தனர்
அலெக்ஸியோ டயாஸ் பால்கோ , பிரான்ஸிஸ்கோ மார்குயஸ் என்ற இருவரும் அந்த பிரான்ஸிஸ் சேவியர் கொடுத்த அழுத்ததின் பெயரில் அந்த விசாரணையினை தொடங்கினர், அது சாத்தானே நடுங்கும் காட்சியாய் இருந்தது
சந்தேகத்துகிடமான கிறிஸ்தவர்கள் அப்படியே மொத்தமாய் இழுத்துவரபட்டு பெரிய கூடங்களில் அடைக்கபடுவர், கதவுகள் மூடபடும்
அவர்களிடம் கிறிஸ்துவுக்கு துரோகம் புரிந்தீர்களா, அரச சட்டத்தை மீறினீர்களா என விசாரணை கோரபடும், உண்மையினை கண்டறிய அவர்கள் செய்ததுதான் உச்சகட்ட கொடூரம்
வரிசையாக கட்டி வைத்து எரிப்பது, கொதிக்கும் எண்ணெயில் மூழ்கி எடுப்பது என ஒருவகை தீர்ப்புகள்கையினை வெட்டி காலினை வெட்டி அங்கஹீனமாக்குவது ஒருவரை, குதிரை காலில் கட்டி இழுத்து செல்வது இன்னொரு வகை
சிலுவையில் தலைகீழாக அறைதல் எனும் கொடியவகை தண்டனை கொடூரத்தின் உச்சம்.
கூரிய கத்தியால் உடல் முழுக்க தோலை உரித்து விட்டு அப்படியே தீயில் வாட்டி சாகடிக்கும் கொடுமைகள்
ஒரு கண்ணை தோண்டிவிட்டு இன்னொரு கண்ணை தோண்டுவோம் என மிரட்டுவது, நககண்களை பிடுங்கி எடுத்து அதில் மிளகோ உப்போ தேய்ப்பது
கண்களின் இமைகளை கூரிய கத்தியால் வெட்டி எடுத்து சித்திரவதை செய்வது, ஆசன வாயில் கம்பினை திணித்து அந்த கம்பை அசைத்து சுழற்றி சித்திரவதை செய்வது
இந்துக்கள் வணங்கும் நாகத்தையும் அவர்கள் மேல் ஏவிவிட்டு அலறவிட்டு கொன்ற கொடுமையும் ஒரு பக்கம் நடந்தது
பெற்றோர் முன்னால் குழந்தைகளை வதைப்பது, குழந்தைகள் முன்னால் பெற்றோரை எரிப்ப்து என பெரும் கொடுமைகள் செய்தாலு உச்சகட்ட கொடுமை ஒன்று உண்டு
சாணை பிடிக்கும் சக்கரம் போல ஒன்றை பெரிதாக செய்வார்கள் அதில் குற்றவாளியினை கட்டுவார்கள் இடையில் குறுகிய இடைவெளி கற்களுக்கு இடையே இருக்கும்
சக்கரம் சுழலும் பொழுது கால் இடுப்பு என மெல்ல மெல்ல அந்த இடுக்கில் வைத்து நசுக்குவார்கள் எலும்புகளெல்லாம் முறிந்து கழுத்துவரை எல்லாம் நசுங்கி, தலைமட்டும் பரிதாப கோலத்துக்கு வரும் வரை அணு அணுவாய் சுழற்றுவார்கள்
இந்த கொடுமையினை எதிர்த்து சில நேரம் இந்துக்கள் பொங்கி எதிர்தாக்குதல் நடத்துவதும் உண்டு, அப்பொழுது கொல்லபடும் பாதிரிகளை “புனிதர்” என அறிவிப்பார் போப்பாண்டவர்
பெண்களின் நிலை கேட்கவே வேண்டாம், பாவியாகிவிட்ட அவளிடம் எல்லா வகை உணர்ச்சிகளும் மிருகத்தை விட கொடியதாக தீர்க்கபடும்
சில இந்துக்கள் வணங்கிய இந்து கோவில் உறுதி செய்யபட்டால் அங்கு அவர்கள் அழைத்து செல்லபட்டு அங்கிருக்கும் தெய்வம் மேல் துப்பி அவமரியாதை செய்து அவர்கள் கையாலே அதனை உடைக்கும்படி சாட்டையால் அடிப்பார்கள், அவர்களின் ரத்தத்தால் அந்த சிலையோ லிங்கமோ நனையும்படி அடித்துவிட்டு அப்படியே அதை நொறுக்கி போடுவார்கள்
வீட்டில் இந்துக்கள் ரகசிய பிரார்த்தனை செய்வதாக தகவல் வந்தால் வீட்டை எரிப்பார்கள், சிலையினை உடைப்பார்கள்
சிறையில் இருக்கும் சந்தேக கைதிகளுக்கு மலம் ஜலம் கழிக்கும் பாத்திரத்திலே உணவும் தரபட்ட கொடுமை எல்லாம் உண்டு
இன்னும் வார்த்தையிலும் அச்சிலும் வடிக்கமுடியா அக்கிரமங்கள் அங்கு நடந்தன, கோடரி முதல் வாள் வரை கூர்மையினை அவர்களிடமே சோதித்தன, இன்னும் பீரங்கிகளும் பலவும் அவர்களிடமே சக்தியினை காட்டின
இந்த மாபெரும் கொடுமை 1540களில் தொடங்கி பல்லாண்டுகள் நீடித்தன, 1552ல் அந்த பிரான்ஸிச் சேவியர் இறந்தாலும் பாடம் செய்யபட்ட அவர் உடலை கோவாவில் வைத்து கொண்டு “இயேசுவால் அழியா உடல்” என சொல்லி அட்டகாசம் செய்தனர்
(ராமானுஜருக்கே 3 திருமேனி கொண்ட இந்து சம்பிரதாயம் இது என அவர்களுக்கு சொல்ல யாருமில்லை, சொன்னால் புரியும் நிலையிலும் அவர்கள் இல்லை)
புலிக்கு தப்பி நரியிடம் வீழ்ந்த கதையாக அந்த பகுதி மக்கள் அவ்வளவு துயரங்களை அனுபவித்தனர், நரகத்தில் நீங்கள் படும் பாட்டை குறைக்க உங்களை திருத்துகின்றோம் என போர்ச்சுக்கல் துறவிகளும் இரக்கமே இல்லாமல் சொல்லி கொண்டார்கள்
அந்த கொடும் தண்டனைகள், மனுகுலம் கலங்கும் கொடூரங்களெல்லாம் ரோமையர் காலத்து அறிமுகங்கள், தங்கள் ஆட்சியினை நிறுத்த அவர்கள் பயன்படுத்திய வன்மங்கள்
அந்த கொடூரங்களைத்தான் கொங்கனில் தங்கள் ஆட்சியினை நிறுவ போர்ச்சுகீசிய கும்பல் பயன்படுத்திற்று, அதில் கிறிஸ்துவம் இல்லை, அவரின் போதனை இல்லை, அவர் போதித்த அஹிம்சையும் ஆன்மீகமும் இல்லை, மாறாக ஒரு அரசை நிறுவும் படையெடுப்பு கிறிஸ்துவம் எனும் பெயரில் கொடூரமாக நடந்தது
இப்படியெல்லாம் அவர்கள் அந்த 15ம் நூற்றாண்டில் தொடங்கி பல்லாண்டுகள் கொன்ற மக்களின் எண்ணிக்கை பல்லாயிரம் இருக்கலாம்
இவர்களின் ஓலம் யாருக்கும் கேட்கவில்லை, அந்நேரம் பாபர் வந்து தொடங்கிவைத்த போர்கள், தென்னக சுல்தான்களுக்கு இடையே நடந்த போர்கள் என பல போர்களில் சுல்தான்கள் கவனமாக இருந்ததால் இக்குரல் அதுவும் கடற்கரையோர குரல் யாருக்கும் கேட்கவில்லை
1660களில் இந்துக்களை அடித்தால் சிவாஜி வருவான் என்றொரு காலம் வரும் வரை இவர்கள் அட்டகாசம் தொடங்கியது
சிவாஜி எழுந்து காவிகொடியினை பறக்கவிட்டு பிஜப்பூரை அடக்கும்பொழுதுதான் போர்ச்சுகீசிய கும்பல் அடங்க தொடங்கிற்று, முதன் முதலில் அவர்களை அடக்கிய மன்னன் சிவாஜிதான்
அந்த சிவாஜி மொகலாயரிடம் முடக்கபட்டான் என்றதும் பழைய அட்டகாசங்களை போர்ச்சுகீசியர் தொடங்கினர், இப்பொழுது பர்தேஷ் கிராமவாசிகள்
அவர்களின் புராதன சிவாலயத்தை அதாவது ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்டுவந்து கொண்டு ஸ்தாபித்த லிங்கம் அமைந்த கோவிலை, ஆப்கனில் சுல்தான் அட்டகாசத்தில் உடைக்கபட இருந்த லிங்கத்தை கொண்டுவந்து ஸ்தாபித்த லிங்கம்
இப்பொழுது அதைத்தான் குறிவைத்து போர்ச்சுக்கீசியர் நிற்பதாகவும் ஆண்டாண்டு காலம் காத்த அந்த லிங்கத்தை சிவாஜி காத்து தரவேண்டும் என்றும் கேட்க வந்திருந்தார்கள்
(நிச்சயம் சிவாஜி இல்லையென்றால் அவர்களின் அட்டகாசத்தில் கொங்கன் மும்பை இன்னும் பல பகுதிகளெல்லாம் முழ் ஐரோப்பிய மயமாகியிருக்கும் சிவாஜியின் எழுச்சியே அவர்களை அடக்கிற்று
சிவாஜி காலத்தில் பிரிட்டிஷாரும் பிரான்ஸ்காரர்களும் மெல்ல மெல்ல மேலெழ போர்ச்சுக்கல் அட்டகாசம் ஒடுக்கபட்டது இல்லையேல் மாபெரும் அராஜகங்கள் அரங்கேறியிருக்கும்)
சிவாஜி அந்த போர்ச்சுகீசியரின் கொடிய நினைவில் இருந்து மீண்டான் அவன் கண்கள் கசிந்திருந்தன, ஜீஜாபாயினை நோக்கினான்
அவள் சிறுமியாக இருந்தபொழுதிருந்தே இதையெல்லாம் கவனித்தவள், அவள் தந்தை மொகலாய தளபதி எனும் வகையில் இதெல்லாம் தடுத்து நிறுத்தபட கூடாதா என அவரிடம் வரும் கண்ணீர் கதைகளை எல்லாம் அவள் அறிந்திருந்தாள்
இந்நாட்டுக்கு ஆப்கானியம் எவ்வளவு ஆபத்தோ அதைவிட ஐரோப்பிய கிறிஸ்தவ அரசுகளின் தலையீடு மிக மிக பெரும் ஆபத்து என்பதும் அவளுக்கு தெரியும்
மொகலாயருக்கும் இந்துக்களுக்குமான குழப்பத்தில் கிறிஸ்தவ முகமூடியில் ஐரோப்பியர் தலையிட்டு ஆட்சியினை நிறுவ முயன்றதையும் அறிவாள்
எங்கும் முளைக்கும் சிலுவையும் துடைத்து அழிக்கபடும் இந்து அடையாளங்களும் இங்கு பெரும் ஆபத்து என்பதை உணர்ந்திருந்தாள்
அவள் தமிழ்பேசும் பகுதிகளுக்கு தஞ்சாவூருக்கும் ராமேஸ்வரத்துக்கும் சென்றபொழுது இந்த கொடுமைகளை கண்ணார கண்டிருந்தாள், பல கடற்கரைகளில் சிலுவைகள் முளைத்திருந்தன
போர்ச்சுகீசியர் மதராச பட்டினம் முதல் தென்முனை வரை வளைத்திருந்த கடலோரங்களும் அங்கு முழுக்க மாற்றபட்டிருந்த ஐரோப்பியமயபடுத்தலும் அவளால் உணரபட்டிருந்தது
நாயக்க மன்னர்கள், நவாப்களிடம் கடற்படை இல்லா நிலையில் கொழும்பு கிழக்காசியா என எல்லா கப்பல் போக்குவரத்தும் ஐரோப்பியரை நம்பியபொழ்து எளிதாக கடற்கரைகளை அவர்கள் விழுங்கினார்கள்
அங்கு அதுவரை இருந்த கொற்றவை வழிபாடு மாற்றபட்டு கன்னிமேரி புகுத்தபட்டாள், காவல்தெய்வங்களென முனீஸ்வரனும் கருப்பனும் இருந்த இடங்களில் ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் வந்தார்கள், ஆனால் கையில் ஆயுதத்துடன் வந்தார்கள்
யூதருக்க்கு உருவமில்லா தேவதைகள் கூட கிறிஸ்துவத்தில் உருவத்தோடு வந்து மிக்கேல் என்றானது
இங்கு காலம் காலமாக சொல்லபட்ட காயத்ரி மந்திரம் முதல் கடலில் ஏறும்பொழுது சொல்லபடும் மந்திரங்களெல்லாம் மாற்றபட்டு ஐரோப்பிய பரலோக மந்திரம், கன்னிமேரி மந்திரம் என்றாயிற்று
முத்து குளிக்கும்பொழுது சுறா வாயினை கட்டுதல் இன்னும் பல சூட்சும பாதுகாப்பு அளித்தல் என இருந்த இந்து அதர்வண வேதங்கள் ஒழிக்கபட்டு ஐரோப்பிய சூட்சும தொடர்புகள் புகுத்தபட்டன
ராமஜெயம் எழுதிய கரங்களுக்கு “இயேசுவின் ரத்தம் ஜெயம்” என மாற்றம் கொடுக்கபட்டது
தென்னக பண்டிகைகளெல்லாம் மாற்றபட்டன
கொங்கனில் பால கிருஷ்ணன் கோவிலெல்லாம் குழந்தை இயேசு ஆலயமானது, அம்மன் கோவிலெல்லாம் மேரி கோவிலானது
தெற்கே ராஜ காளியம்மன் என்பது ராஜகன்னிமேரி என்றானது, திருமண வரம் அருளும் அம்மன் “திருகல்யாண மாதா” என்றானது
ஐரோப்பாவிலே இல்லா வகை வகையான மேரிக்களும் வகை வகையான புனிதர்களும் இந்து பெயரில் உருவாகி வந்தார்கள்
இந்துக்களின் வழிபாடும் அடையாளமும் முழுக்க ஒழிக்கபட்டன
அதுவரை பிள்ளைகறி கொடுத்த சிறுதொண்ட நாயனாரும் இன்னும் பல நாயனார் பெருமையும் பேசபட்ட பூமி ஆபிரஹாமின் தியாகத்தைம் யோபுவின் கதையினை பேச தொடங்கிற்று
கம்சன் கதையினை சொல்லிகொண்டிருந்த மண், கோலியாத் கதைக்கு சென்றது
தேவாரமும் திருவாசகமும் மறைக்கபட்டு அங்கே பைபிளின் சங்கீதங்கள் அரங்கேறின
எங்கும் சிலுவை எதிலும் சிலுவை என இந்து அடையாளங்கள் ஒழிந்தன, ஓம் நமசிவாய ஒலித்த இடமெல்லாம் “ஆமேன்” “ஆமென்” என ஆட்டுமந்தை குர்ல கேட்டது
முழுக்க முழுக்க அப்பகுதிகள் ஐரோப்பிய மயமாயின , போப் கடவுளுக்கு நிகராக நிறுத்தபட்டு வணங்க வைப்பபட்டார், அவர் எழுதியதெல்லாம் தீர்ப்புகளாயின
இந்துக்கள் அடையாளம் முழுக்க ஒழிக்கபட்டிருந்தது, வளமான கொங்கனிலே அவ்வளவு அட்டகாசம் செய்து இந்துக்களை ஒழிக்கதொடங்கியவர்களுக்கு கடல் வியாபாரம் தவிர ஏதும் வழி இல்லா தென்னக கடலோர மக்களை மதம் மாற்றுவது எளிதாயிற்று
கடல் முக்கியத்துவம் பெற தொடங்கிய காலங்களில் இங்கு இந்து அரசு இல்லாததும் இந்திய அரசர்களிடம் கப்பல் படை இல்லாததுமே இதற்கு முதல் காரணம்
ஆம், அப்படி ஒரு காலம் கோவாவில் 15ம், நூற்றாண்டில் இருந்தது. இந்துமாவீரன் சிவாஜிக்கு முந்தைய காலம் அப்படித்தான் இருந்தது
இதனையெல்லாம் இன்று ஏன் சொல்கின்றோம் என்றால் இன்று அந்த கிளர்ச்சியின் நினைவுநாள்
போர்ச்சுகீசியர் “புனித விசாரணை” என மதமாறிய இந்துக்களை மிக கொடிதாக அழித்து மிரட்டிய கொடுமையினை, மீண்டும் தாய்மதம் திரும்ப அனுமதியாமல் கொன்ற கொடுமைகளை எதிர்த்து சில நேரம் இந்துக்கள் பொங்கி எதிர்த்து தாக்குதல் நடந்தநாள்
ஒரு வகையில் “இந்து புரட்சி நாள்”
ஆம், கோவாவில் போர்த்துக்கீச ஆட்சிக்கு எதிரான இந்துக்களின் கிளர்ச்சி இடம்பெற்றது. 5 இயேசு சபை மதகுருமார், ஒரு ஐரோப்பியர், 14 இந்தியக் கிறித்தவர்கள் கொல்லப்பட்டனர்.
அன்று இந்துக்களுக்கான அரசு இல்லை, இந்துக்களை கொன்றால் மொகலாயமோ பிஜப்பூர் சுல்தானோ கேட்மகாட்டார்கள் என்ற அலட்சியத்தில் கிறிஸ்தவமதத்தில் இருந்து இந்துக்களாக மாற முயன்றவர்களை போர்ச்சுகீசிய பாதிரிகள் எளிதாக கொன்றனர்
அப்படி கொன்றவர்களைத்தான் இந்துக்கள் பதிலுக்கு தாக்கினார்கள், அதனில் ஐந்து பாதிரிகள் செத்தார்கள்
ரோபட்டோ அக்குவியா, அல்போன்சுஸ் பிச்சாவோ, பீட்டர் பெமோ, ஆண்டனி பிரான்ஸிஸ், பிரான்ஸிஸ் அரான்கா என்ற பாதிரிகள் அவர்கள்
இவர்களுக்கு இன்னும் போப் புனிதர் பட்டம் அறிவிக்கவில்லை, 500 ஆண்டுகளாகியும் இன்னும் அறிவிக்கவில்லை ஆனால் சொர்க்கவாசிகள் என அறிவித்திருகின்றார்
ஆக போப்பாண்டவரே புனிதர்பட்டம் கொடுக்க இன்றும் யோசிக்கின்றார் என்றால் அக்காலத்தில் இவர்களின் அட்டகாசம் எவ்வளவு இருந்திருக்கும்?
இந்த கொடுமைகளெல்லாம் இந்துக்களுக்கென ஒரு அரசு இல்லாததால் எழுந்த விளைவு, அதைத்தான் வாளேந்தி அமைத்து கொடுத்தான் வீரசிவாஜி
அவனின் எழுச்சியே கோவா பக்கம் இந்துக்கள் இந்துக்களாக வாழ வழிசெய்தது
இன்று அந்த “இந்து எழுச்சிநாள்” , குங்கோலிம் கிளர்ச்சி என வரலாற்றில் நிலைத்துவிட்ட இந்நாள்தான் கிறிஸ்தவ மதமாற்ற கொடும்கும்பலுக்கு எதிராக தேசம் கண்ட முதல் போராட்டம்