ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 110 – நினைப்புறுதல் / குறள் : 05″அறமின்கள் சிந்தையி லாதாரத் தைச்சேர்ந்துறுமின்க ளும்முளே யோர்ந்து”இவ்வரி “அறமின்கள் சிந்தையில் ஆதாரத்தை சேர்ந்து அறுமின்களும் தம்முள்ளே ஓர்ந்து” என பொருள்படும்அறம் என்பது இங்கு இறைசக்தி எனும் பொருளிலாகின்றதுசிவனை சிந்தையில் நிறுத்தி யோகத்தில் ஆறு ஆதாரங்களையும் துலக்க வேண்டும், அப்படிபட்ட நிலையில் ஆசைகள் அறுபடும் (அறுமின்), ஆசைகளை அறுத்து உள்ளே தன்னை உள்ளே கவனித்து இறைவனோடு ஒன்றுதல் வேண்டும்சிவ நினைவோடு யோகம் செய்தால் ஆறு சக்கரங்களும் துலங்கும், ஆசைகள் அறுபடும் அந்நிலையில் மனதால் சிவனை உணரமுடியும் என்பது ஒளவையின் போதனையாகும்