குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 43
இறைமகனாகிய அரசன் ஒன்றை இகழ்ந்தால் குடிமக்களும் அதனை இகழ்வர். அரசன் ஒன்றைப் புகழ்ந்தால் எல்லாரும் அதனைப் புகழ்வர். வலிமை மிக்க மன்னனின் சீர் வழியில் செல்வதே மக்கள் வழி. சீரில் செல்லும் புனை ஓட்டுபவன் செலுத்தும் வழியில்தானே செல்லும்.
அரசனை மக்கள் அப்படியே பின்பற்றி நடப்பார்கள் என்பதால் அரசனானவன் மிக சரியான வழிகாட்டியாக நல்ல விஷயங்களை செய்து வரவேண்டும் என்கின்றார் குமரகுருபரர்
அக்கால மன்னர்கள் நல்ல பக்திமான்களாகவும், பக்தியில் அதிசிறந்தவர்களாகவும் இருந்ததாலே மக்களும் அவர்களை பின்பற்றினார்கள் அதனாலே அழியா ஆலயங்களும் பெரும் இலக்கியங்களும் மாபெரும் ஆன்மீகமும் இம்மண்ணுக்கு கிடைத்தது
அப்படி ஆள்வோரே மக்களின் எல்லா நலனுக்கும் நல் வளர்ச்சிக்கும் அறவாழ்வுக்கும் வழிகாட்டிகள் என்பது பாடலின் பொருள்