மாகாண கட்சிகளுக்கு

சுதந்திர இந்தியாவில் மாகாண கட்சிகளுக்கு அனுமதி கொடுக்க கூடாது, அப்படி கொடுத்தால் அது பல்வேறு குழப்பங்களை நாட்டுக்கு கொடுக்கும், ஒவ்வொரு மாகாண கட்சியும் அரசியலுக்காக மாநில குழப்பங்களையும் பிரிவினைகளையும் தூண்டும் அது பெரும் விபரீதத்தை கொடுக்கும் என நேருவிடம் தேசாபிமானிகள் எவ்வளவோ மன்றாடினார்கள்

ஆனால் உலக ஜனநாயகத்தை காக்க பிறந்திருப்பதாக தன்னை கருதிய நேரு அதனை மறுத்தார், அமெரிக்கா பிரிட்டன் என உலக ஜனநாயக தாய்நாட்டிலே மாநில கட்சிக்கு அனுமதி இல்லை, உலகில் எந்த ஜனநாயக நாட்டிலும் அப்படி இல்லை, சிக்கல் நிறைந்த பல இனம் பலமொழி நிறைந்த இந்தியாவில் அப்படி அனுமதித்தால் அது பெரும் குழப்பமாகும் என்ற கோரிக்கையினை நேரு புறம்தள்ளினார்

விளைவு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கட்சி அல்லது பல கட்சி உதயமாயின, மாநில நலன் என சொல்லி அவை பிழைப்புவாத அரசியலும் பிரிவினைவாதத்தையும் தூண்ட ஆரம்பித்தன‌

எதையுமே தாமதமாக உணரும் நேரு திமுகவின் திராவிட நாடு கோரிக்கை இன்னும் பல மாகாணங்களின் பல கோரிக்கைகளை கண்டு அதிர்ச்சியுற்றார் அப்பொழுதும் மாகாண கட்சிமேல் இறுக்கம் காட்டாமல் பிரிவினைவாத தடைசட்டம் கொண்டுவந்துவிட்டு அமைதியானார்

ஆனால் அவர் அனுமதித்த அவரின் மாகாண கட்சிகான அனுமதி அவரின் சொந்த கட்சியினை சாய்க்கும் என்பதை கணிக்க தவறினார், அதுவும் தேசிய பெருங்கட்சி அப்படி சரிவது நாட்டுக்கு நல்லதல்ல எனும் சிந்தனையும் அவருக்கு அறவே இல்லை

ஏன் என்றால் அதுதான் நேரு

அப்படிபட்ட நேருவின் காலத்தில் மாகாண கட்சிகள் மெல்ல துளிர்விட்டு வளர்ந்தன, அவரின் காலத்துக்கு பின் யாரெல்லாமோ வளர்ந்தார்கள்

காங்கிரஸை ஒழித்துகட்டுவது அவர்களின் பொது நோக்கமாய் இருந்தது, காங்கிரஸை ஒழித்து நாட்டை காப்பது அவர்கள் நோக்கம் அல்ல மாறாக இவர்களெல்லாம் கூடி ஒரு ஆட்சி அமைத்து ஊழல் காங்கிரஸை விட அதிக ஊழல் செய்வதும் ஒரு சூதாட்டம் போல் அரசியலை ஆடுவதும் நோக்கமாக இருந்தது

இதனை உள்ளூற வைத்து கொண்டு எல்லோரும் காலம் பார்த்தார்கள் , அக்காலத்தில் காங்கிரஸின் அடுத்த தேசிய கட்சியாக கம்யூனிஸ்டுகள் இருந்தார்கள்

ஆனால் அவர்கள் தேசியமெல்லாம் ரஷ்ய தேசியம், சீன தேசியம், கியூபதேசியம் என்றிருந்தது இந்திய தேசம் பற்றி கவலையே இல்லை

இந்நிலையில் இந்திரா பிரதமரானார் அவர் மாகாண கட்சிகள் மேல் நடவடிக்கை எடுக்கும் முடிவில் இருந்தார்,விடுமா மாகாண கட்சிகள்?

அவர்கள் ஆளாளுக்கு கிளர்ந்து எழுந்தார்கள், காங்கிரஸின் ஏகபோகத்தை முறியடிப்போம் என முரசு கொட்டினார்கள், இதில் காங்கிரசாரே பிரிந்து பல கட்சிகளை கண்டார்கள்

அப்படித்தான் அந்த பீகாரிலும் பல கட்சிகள் உருவாயின, ஊழலும் லல்லுபிரசாத் கோஷ்டி உருவில் வந்தது, இன்னும் அங்கும் தமிழகம் போல ஏகபட்ட கட்சிகள் வந்தன ஐக்கிய ஜனதாதளம் போன்றவையும் வந்தன‌

மும்பையில் சிவசேனா போல மிக குறைந்த எம்.எல்.ஏக்கள் வைத்திருந்த அவரை பாஜக பெரும்பலம் இருந்தும் முதல்வராக்கியது

பாஜகவுக்கும் அவருக்கும் இருந்த உறவு மெல்ல மெல்ல கசந்தது, அதன் காரணம் இயல்பானது

மாநில கட்சிகளுக்கு எப்பொழுதும் தேசிய கட்சிகளை பிடிக்காது, இது நாடு என்றோ தேசியம் முக்கியம் என்றோ அவை கருதாது, தங்கள் மாகாணம் தங்கள் மொழி இனம் மாநில உரிமை என குறுகிய அரசியல் செய்யும் அவை தேசிய கட்சியினை ஏற்காது மாறாக டெல்லியில் தங்களுக்கு பிடி கிடைக்குமா என்றுதான் யோசிக்கும்

இங்கு நாட்டு நலன் முன்னிறுத்தபடாது

இதைத்தான் நேருவிடம் தலையில் அடித்து கொண்டு முறையிட்டும் அவர் அசைந்து கொடுக்கவில்லை, அன்றே உரிய சட்டம் வந்திருந்தால் திமுக முதல் சிவசேனா, டிஆரெஸ் , காஷ்மீரிய கட்சி என இத்தனை நூறு மாகாண கட்சி வந்திருக்காது

அரசியலுக்கு யாரும் வரலாம் ஆனால் தேசியவாதியாக மட்டும் வரலாம் எனும் நிலை என்றோ உருவாகியிருக்கும்

நேருவின் சொதப்பலில் தீரா குழப்பத்தில் நாடு சிக்கி காங்கிரசும் எல்லா மாகாணங்களிலும் சரிந்தபொழுதுதான் தேசம் என்றோ செய்த புண்ணியம் பாஜக வடிவில் வந்தது

நிச்சயம் பாஜக மாநிலகட்சிகளுக்கு வேப்பங்காய், முதலில் காங்கிரஸை சரிக்க அதனை கையில் எடுத்த மாகாண கட்சிகள் காங்கிரஸ் சரிந்து பாஜக விஸ்வரூபமெடுத்ததும் அதை வெறுப்புடன் நோக்க தொடங்கினர்

இது தேசம் முழுக்க நடந்தது, ஒரு காலத்தில் பாஜகவினை கொண்டாடிய திமுக அதனை கண்டு அஞ்சியது, மம்தா, சிவசேனா என எல்லாரும் அலற காரணம் பாஜக தங்கள் மாகாணத்தில் வளர்ந்தால் தங்கள் அரசியல் இருக்காது

ஆனால் அதையும் மீறி பாஜக இன்று பெரும் வளர்ச்சி எல்லா மாகாணங்களிலும் கண்டிருக்கின்றது இன்னும் அது வளர்ந்து மாகாண கட்சிகளை முறிக்கும் என்பது ஒன்றும் ரகசியமல்ல‌

பாஜகவின் வளர்ச்சித்தான் மாநில நலன், மாநில சுயாட்சிஎன்ற போர்வையில் எவ்வளவு சுயநல அரசியல்வாதிகள் இருந்தார்கள், மாநில அரசியலின் முகம் உண்மையில் என்ன என்பதை காட்டிற்று

அந்த முகமூடி பல இடங்களில் கிழிந்த நிலையில் நேற்று நிதிஷ்குமாரின் முகமூடியும் கிழிந்த்திருக்கின்றது

பாஜகவின் உறவை முறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுன் தன் ஆட்சியினை தொடர முடிவெடுத்துள்ளார் அன்னார்

இது 2023ம் ஆண்டு எதிர்கட்சி முகாமில் இப்படி மாகாண கட்சிகள் நிரம்பும் என்பதை காட்டுகின்றது

இனி நடப்பதை காலம் காட்டும்

இந்த காட்சியின் சுருக்கத்தை மகாபாரத காலத்தோடு ஒப்பிடலாம், யாரெல்லாம் அதர்மத்தின் பக்கமோ அல்லது யாரெல்லாம் தர்மத்தை மதிக்கவில்லையோ அவர்கள் ஏகபட்ட பேர் இருந்தார்கள், ஒவ்வொருவராய் அவர்களை தேடி அடையாளபடுத்துவதை விட பாண்டவருக்கு எதிரானவர் என அவர்களை வகைபடுத்தல் கண்ணனுக்கு எளிதாய் இருந்தது

கவுரவர் கூட்டத்தோடு ஒவ்வொருவராய் தானாய் வந்து சேர சிரித்து கொண்டான் கண்ணன், மொத்த அதர்ம கூட்டமும் சேர்ந்துவிட்டதும் இந்த வாய்ப்பை விட கூடாது என சரியாக அடித்து ஒழித்தான் மொத்தமாக ஒழித்தான்

ஆம், எதிரிகளை மொத்தமாக கூட வைத்து அடையாளம் காட்டுவது ஒரு கலை, பாஜக அதை சரியாக செய்கின்றது

எது எப்படியாயினும் ராகுல்காந்தி என்பவரின் நிலை பரிதாபம், கொள்ளுதாத்தா செய்த தவறுக்கு பிராயசித்தமாக இனி ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு காங்கிரஸ் கட்சி தொடங்குவதுதான் அவருக்கு சரி , வேறு வழியே இனி இல்லை

பலமான இந்தியா உருவாக மாகாண கட்சிகளின் பலம் முறியடிக்கபட வேண்டும் அல்லது பாராளுமன்ற தேர்தலில் அவை போட்டியிடாமல் தேசிய கட்சிகள் மட்டும் போட்டியிடும் அளவு சட்டங்களை மாற்ற வேண்டும்

அதுதான் இந்தியாவில் அவசரமான ஒன்று , அதை எவ்வளவு விரைவாக தேசம் செய்யுமோ அவ்வளவுக்கு நாட்டுக்கு நல்லது

அது சுலபமானது அல்ல என்றாலும் தன் இருப்பை தக்கவைக்க அவருக்கு வேறு வழியில்லை,மாகாண கட்சியின் நிலை அதுதான்

சரி, பிஜேபி துணை இல்லாமல் நிதிஷ்குமாரால் ஆளமுடியுமா என்றால் நிச்சயம் சவால்தான், அங்கும் ஒரு ஷிண்டே உருவாகிகொண்டிருக்கலாம்