5%
காவலில் இருக்கின்றார் ப.சிதம்பரம், அவரை அழைத்து செல்லும் பொழுது அவரின் வழக்கு பற்றி செய்தியாளர்கள் கேட்க , 5% என சொல்லிவிட்டு சென்றிருகின்றார் சிதம்பரம்
செய்தியாளர் என்ன கேட்டார்கள்? இவர் என்ன சொல்லியிருக்கின்றார் பார்த்தீர்களா?
எல்லாம் கலைஞர் கருணாநிதியோடு நெடுநாள் பழகிய பழக்க தோஷம் வேறொன்றுமில்லை.
5% என எதை சொல்கின்றார் சிதம்பரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5% சரிந்ததை சிதம்பரம் குறிப்பிட்டார் என கைதட்டி மகிழ்கின்றது காங்கிரஸ் கூட்டம்

ஆக 5% பொருளாதாரம் சரிய ப.சிதம்பரத்தின் கைதுதான் காரணம் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டி இருக்கின்றது
சிதம்பரத்தின் கைது கண்ட உலக முதலீட்டாளர்கள் பயந்தார்களா? இல்லை சிதம்பரம் மிரட்டி பின் வாங்க வைத்தாரா என்ற கேள்விக்கு இன்னொரு விசாரணையினை சிபிஐ பதிய வேண்டும் போலிருக்கின்றது
அவர் 5விரலை காட்டி 5% என சொல்லியது என்னவென்றால், காங்கிரஸ் இனி 5% கூட தேறாது என சூசகமாக சொன்னதாகவும் எடுத்து கொள்ளலாம்