55 ஆண்டுகளில் மோசமான ஆட்சி: எஸ்.எம்.கிருஷ்ணா தாக்கு
55 ஆண்டுகளில் மோசமான ஆட்சி: சித்தராமையாவுக்கு எஸ்.எம்.கிருஷ்ணா தாக்கு
இந்த எஸ்.எம் கிருஷ்ணா முன்னாள் காங்கிரஸ்காரர், கன்னட முதல்வராக கூட இருந்தவர், நாட்டின் உயர்ந்த பல பொறுப்புக்களை காங்கிரஸ் சார்பில் வகித்தவர்
அன்னாரோ மத்தியில் காங்கிரஸ் ஆட்சி என்றால் நான் அமைச்சர், மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி என்றால் நான் முதல்வர் எனும் கொள்கையில் வாழ்ந்தவர்
மத்தியில் ஆட்சியில்லை, கன்னடத்தில் இவரை முதல்வராக்கவில்லை எனும் கோபம் இருந்தது, காங்கிரசுக்கும் நேரம் சரியில்லை
பழம் இல்லாத மரத்தில் எந்த வவ்வால் தொங்கும்?, அதுவும் அன்னாருக்கு கவர்ணர், குடியரசு தலைவர் என பல கனவுகள் உண்டு, அவ்வளவுதான் பாஜகவிற்கு ஒரே ஜம்ப்
இதயம் இல்லாமல் கூட வாழ்ந்துவிடும் அரசியல்வாதி, பதவி இல்லாமல் வாழவே மாட்டான்..
இப்பொழுது அன்னார் காங்கிரஸ் கட்சியினை திட்டிகொண்டிருக்கின்றார், சரி இவ்வளவு நாளும் எங்கிருந்தார்? அங்குதான் இருந்தார்
ம்ம்ம்.. கன்னடத்திலும் ஒரு பன்னீர் செல்வம் உருவாகிவிட்டார்.