60 ஆயிரம் யானை கதை
இந்த தும்பிகளின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை, முன்பெல்லாம் எரிச்சலை கிளப்பிய கும்பல் இப்பொழுது குபீர் சிரிப்புகளை கொடுக்கின்றது
அதாவது சோழர்கள் தெலுங்கர்கள் அவர்கள் இன விரோதிகள் என சொல்லிகொண்டிருகின்றன, இதே வாய்தான் முன்பு சோழன் முப்பாட்டன், ராஜராஜசோழன் 4ம் பாட்டன் என்றெல்லாம் சொன்னது
60 ஆயிரம் யானை கதை எல்லாம் தும்பிகள் சோழனை பற்றித்தான் சொன்னது, இப்பொழுது பல்டி அடிக்கின்றன
வரலாறு என்ன?
சோழர்களில் முற்கால சோழர், இடைக்கால சோழர், சாளுக்கிய சோழர் என பல காலப்பிரிவு உண்டு. இது சேரரிலும் உண்டு பாண்டியரிலும் உண்டு
முற்கால சோழர்களில்தான் செம்பியன் , நலங்கிள்ளி, கிள்ளிவழவன், கோப்பெருஞ்சோழன், கல்லணை கண்ட கரிகாலன் என பலர் வருவார்கள்
சுருக்கமாக சொன்னால் காவேரி பூம்பட்டினம் செழிப்பாக இருந்த காலம் அவை, கண்ணகி காலம்
சிபி சக்கரவர்த்தி, மனுநீதி சோழன், இலங்கையில் ஆண்ட மன்னனான எல்லாளன் எல்லாம் இந்த வகையறா
இவர்களின் ஆட்சி பின்னாளில் ஒய்ந்தது, பூம்புகாரும் கடலில் மூழ்கியது சோழர்கள் வாழ்வில் பெரும் துயர் சூழ்ந்தது
அந்த காலகட்டத்தில் சோழர் அரசை இழந்தனர், பல அரசுகள் பின்பு எழும்பின களபிரர்கள், பல்லவர்கள் என ஆள ஆரம்பித்தனர்
இந்த பல்லவ பேரரசை எதிர்த்துத்தன் பின்னர் விஜயாலய சோழன் என்பவன் இடைக்கால சோழபேரரசினை எழுப்பினான், ஆதித்தன் எனும் பெயர் இக்காலத்திலே வந்தது
மூத்தகுடி எனும் சொல்லே ஆதித்தன் என்பது, இந்த புலிகொடி கூட பல்லவரிடம் இருந்து சோழர் எடுத்தது
விஜயாலயன் வழி வந்த ஆதித்தன் , பராந்தகன் எல்லாம் பல்லவ பகுதிகளை பிடித்து ஆண்டனர் அதாவது சென்னை செங்கற்பட்டு, மகாபலிபுரம் எல்லாம் ஆண்டனர்
செங்கற்பட்டு மாவட்டத்தின் பிரதான ஏரிகள் எல்லாம் இவர்கள் காலத்திலே வெட்டபட்டன
இவர்களின் வாரிசாக வந்தவனே சோழற்குல திலகம் ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும்
அவர்கள் காலத்தில்தான் சோழபேரரசு உச்சம் பெற்றது, தஞ்சை கோவில் எல்லாம் எழும்பியது, கல்லணையிலிருந்து கூடுதல் கால்வாய்கள் எல்லாம் வெட்டபட்டது
தன் பேரரசை காவேரி போன்றே வளமிக்க பகுதிகளான கிருஷ்ணா, கோதாவரி வரை நீட்டித்தனர் இவர்கள்
சோழநாடு சோறுடைத்து என்பது காவேரியால் மட்டும் வரவில்லை செங்கை மாவட்ட ஏரிகள், பாலாறு, தென்பண்ணை, கிருஷ்ணா நதிவரை சோழர்களின் நெற்பூமி இருந்தது
இதில் கிருஷ்ணா நதியினை குறிவைத்த யுத்தத்திலே ஹோய்சாலர்கள், சாளுக்கியருடன் எல்லாம் மோதினார்கள்
இவர்களுக்கு பலத்த சிக்கல்கள் பல்லவர்கள், ஹோய்ச்சாலர்கள் உருவில் வந்தது
புலிகேசி போன்ற சாளுக்கிய மன்னர்கள் சோழர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர்.
இன்னொரு எதிர்ப்பு பாண்டிய சிங்கள உறவில் வந்தது
பாண்டியருக்கும் சிங்களளுக்கும் பலத்த உறவு இருந்தது அதாவது சிங்களருக்கு ஒன்று என்றால் பாண்டியர் வருவார்கள், பாண்டியர் சோழனை தாக்கினால் சிங்களர் வருவார்கள்
சிங்களருக்கும் பாண்டியருக்கும் மண உறவு இருந்தது
இந்த தந்திரத்தை தெலுங்கு மன்னர்களுடன், சாளுக்கிய மன்னர்களுடன் சோழர்களும் செய்தனர், இது அக்கால வழக்கம்
வென்ற மன்னனின் சந்ததி தன்னை கொல்லாமல் இருக்க அங்கு மணம் செய்து உறவாவது அலெக்ஸாண்டர் காலத்து பாணி
அப்படியாக சாளுக்கியர் , ஹோய்சாலர்களுடன் இணைந்த உறவினை சோழர்கள் கொண்டிருந்தனர. ஒரு காலத்தில் சாளுக்கியரும் பல்லவரும் அகற்றபட்டு ஹோய்சாலரும் சோழருமே இருபெரும் அரசுகளை கொண்டிருந்தனர்
தன் பரந்துபட்ட பேரரசை பாதுகாக்க இம்மாதிரி சில விட்டுகொடுத்தல்களும் மணவுறவும் சோழர்களுக்கு தவிர்க்க முடியாததாயிற்று
இந்நிலையில் ராஜராஜ சோழனுக்கு கொள்ளுபேரன் காலத்தில் வாரிசு சர்ச்சை வந்தது, அதில் சாளுக்கிய உறவில் பிறந்த குலோத்துங்க சோழன் மன்னரானான்
இங்கிருந்துதான் சோழர்கள் தெலுங்கர்கள் எனும் சர்ச்சை கிளம்பிற்று
சோழர்கள் நடத்தியது அரசு என்றாலும், வியாபாரங்களை காப்பதில் முன் நின்றனர். பல்லவர் வழியே சென்று மலேயா, இந்தோனேஷியா, கம்போடியா, வியட்நாம் வரை அவர்கள் வியாபாரம் நடந்தது
பெரும் கப்பல்படையினை அவர்கள் நாடுபிடிக்க கொண்டிருந்தவர்கள் அல்ல, வியாபாரத்தில் சிக்கல் என்றால் படையெடுத்து சென்று தீர்ப்பார்கள், இப்பொழுது அமெரிககா செய்கின்றதல்லவா அப்படி
பல்லவர்கள் செய்த கடல் வியாபாரத்தை நொறுக்கவே சோழர்களும் பெரும் கப்பல் படை அமைத்தனர், நாடு பிடிக்க அல்ல.
ஆக சோழர்கள் தெலுங்கர்கள் என்பதெல்லாம் இந்த தும்பிகளின் குருவி மூளையில் உதித்துவிட்ட கற்பனைகள்
செங்கிஸ்கான், அலெக்ஸாண்டரின் பரந்த சாம்ராஜ்யங்கள் ஆங்காங்கே மண உறவுகளை ராஜதந்திரமாக ஏற்றுகொண்டதில் இருந்த தந்திரத்தை சோழர்களும் செய்தனர்
இது அக்கால உலக வழக்கம்
இது புரியாமல் குறுகிய புத்தியில் இருந்துகொண்டு சோழர் இந்திர விழா நடத்தினார்கள், சோழர் ஜல்லிகட்டு நடத்தவில்லை, சோழர் பொங்கல் வைக்கவில்லை அதனால் தமிழரில்லை என்பதெல்லாம் அபத்தம்
பல்லவர் பிடியிலிருந்து சோழ்நாட்டை மீட்டார்கள், பெரும் சாம்ராயத்தை நிறுவினார்கள்
பல்லவர் காலத்தில் இங்கு புத்தமதம் பரவி இருந்தது, சோழர் அதை மறுபடி இந்துமதத்திற்கு திருப்பினார்கள்
தஞ்சை கோவில் அப்படித்தான் பிரமாண்டமாக கட்டபட்டது, சிவனுக்காக கட்டபட்டது, பின் தைபொங்கல் , ஜல்லிகட்டு எல்லாம் நடத்தபட்டது, இந்திர விழா விடைபெற்றது
சோழருக்கும் தெலுங்கருக்குமான உறவில் சோழர் தெலுங்கர்கள் என சொல்லதுணிந்த தும்பிகள் பாண்டியர் சிங்கள உறவினை மறக்கின்றன
பாண்டிய சிங்கள உறவினை முறிக்கவே ராஜராஜ சோழன் ஈழபடையெடுப்பை நடத்தி அனுதாராபுரத்தை எரித்து மும்முடி சோழன் என பட்டம்பெற்றான்
பாண்டியருக்கும் சிங்களருக்கும் இருந்த உறவின் தொடர்ச்சியினையே பின்பு மதுரைக்கு வந்த நாயக்கரும் தொடர்ந்தனர்
நாயக்க எனும் பெயர் சிங்களரில் பெருகி இருப்பது இப்படியே, அவர்கள் மண உறவில் வந்தவர்கள்தான் கண்டி நாயக்கர் வகையறா
இந்த தும்பிகள் கொஞ்ச காலம் முன்பு நாயக்கர்கள் தமிழனத்திற்கு செய்த கொடுமை பாரீர் என கண்டி நாயக்கன் வீடியோ எல்லாம் வெளியிட்டன
ஆனால் நாயக்க சிங்கள உறவிற்கு அடித்தளமிட்டது தமிழர் பாண்டியர் என்பதை மறக்கின்றன
தும்பிகளின் ஆராய்ச்சி எப்பொழுதும் அவமானத்திலேதான் முடியும், காரணம் எதை எல்லாம் பேசகூடாதோ அதை எல்லாம் பேசி அவமானபடுவது தும்பிகளுக்கு புதிதல்ல
இப்பொழுது சோழர் தெலுங்கர் உறவை சொல்வதாக சொல்லி பாண்டியருக்கும் சிங்களருக்கும் இருந்த உறவை வெளிகொண்டுவருவார்கள்
அது எதில் முடியும்?
பாண்டியர் சிங்களவர்கள் என்ற ரீதியில் போய் முடியும்
தெலுங்கருடன் உறவு பாராட்டியதால் சோழர் தெலுங்கரென்றால் நிச்சயம் அதனை சிங்களவனுடன் செய்த பாண்டியர் சிங்களனே..