சசிகலாவும் பன்னீர்செல்வமும் ஆலோசனை நடத்துகின்றார்களாம்…

சசிகலாவும் பன்னீர்செல்வமும் ஆலோசனை நடத்துகின்றார்களாம், என்ன ஆலோசனையாக இருக்கும்?

அவர் நாற்காலிதான் காலி, மற்றபடி அந்த நாற்காலி உனக்கு இந்த நாற்காலி எனக்கு என்பதை தவிர என்ன ஆலோசனையாக இருக்க முடியும்?

அம்மா படத்தை மாற்றிவிட்டு, அம்மா என பெயர் இருக்கும் இடமெல்லாம் “சின்ன” என ஒரு சின்ன மாற்றம் செய்தால் எப்படி இருக்கும் என ஆலோசிக்கலாம்.

யாரேனும் கருப்பு ஆடு கட்சி தாவினால் இருக்கவே இருக்கின்றது வழக்கு, கஞ்சா முதல் மசாஜ் சென்டர் வரை வழக்கு போட்டு தாக்கலாம்,

அம்மா காட்டிய வழி என யோசிக்கலாம்.

இந்த சசிகலா புஷ்பா என்பவரை காணவில்லை, அவர் எங்கு ஆலோசனையில் இருக்கின்றாரோ?

இன்னும் வாய்திறக்கவில்லை, ஆனால் விரைவில் நான் தான் உண்மையான விசுவாசி இவ்வளவு நாளும் துக்கத்தில் இருந்தேன், என அம்மணி வந்து நின்றால் எப்படி இருக்கும்?

சின்ன எம்ஜிஆர், கருப்பு எம்ஜிஆர் , டவுசர் எம்ஜிஆர் என பலர் கிளம்பிய தமிழ்நாட்டில், கருப்பு ஜே, சின்ன ஜே, அடுத்த ஜே என சிலர் வராமலா போய்விடுவார்கள்?

அப்படி வராமல் போனால் ஜே வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்?

இப்படி எல்லாம் சில குழுக்கள் ஆலோசனை செய்ய, ஒரு கும்பல் தலையில் துண்டு போட்டு மூக்கு சீந்தி அழுதுகொண்டிருக்கும் அல்லது மலங்க மலங்க‌ முழித்துகொண்டிருக்கும்?

யாரது?

நாஞ்சில் சம்பத் போல மாற்று கட்சியிலிருந்து ஓடிவந்து இணைந்தவர்கள் நிலை அது, அவர்கள் நிலைதான் பரிதாபம், உண்மையில் ஜெயாவிற்காக அழும் விசுவாசிகள் அவர்கள்தான்.


“நான் கவுன்சிலர் பதவிக்கும் ஆசைபட மாட்டேன், உங்களுக்கு வேலைக்காரியாகவே இருப்பேன், என்னை மன்னித்துவிடுங்கள்” : இது அன்று யாரோ யாருக்கோ எழுதிய மன்னிப்பு கடித வரிகள்.

சரி எஜமானி இப்போது இல்லை அல்லவா, பெட்டி கட்டி கிளம்புங்கள் என யார் கேட்கபோகின்றார்கள்?

கவுன்சிலர் பதவிக்கு ஆசைபடாதவர் பெயர் பொதுசெயலாளர் பதவிக்கு அடிபடுகின்றது.


 சசிகலா புஷ்பா நேர்காணல் 

ஜெயாவிற்கு அஞ்சலி செலுத்தும்பொழுது என்னை கீழே தள்ளினார்கள் : சசிகாலா புஷ்பா அதிரடி பேட்டி

இனி அடிக்க மாட்டார் என்ற தைரியத்தில் அம்மணி வந்திருக்கின்றார். ஆனால் நாமெல்லாம் பார்க்கவில்லை

விடுங்கள் அம்மணி, ராஜாஜி ஹாலில் அவமானபடுத்தபட்டால் பெரும் எதிர்காலம் உண்டாம், அது சென்டிமென்ட்

அடுத்த பொதுசெயலாளராக மூத்த உறுப்பினர்களான‌ பி.எச் பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன், கேபி முனுசாமி, மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன், கண்ணப்பன் போன்றவர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கபட வேண்டும் : சசிகலா புஷ்பா

என்னது? இவர்கள் எல்லாம் கட்சியில் இன்னும் இருக்கின்றார்களா? யாராவது இவர்களை இறுதி அஞ்சலியில் கண்டோமா?

ஓகே இந்த 6 பேரும், இவரும் ஒரு அணியாக திரளுகின்றார்கள் என எடுத்துகொள்வதா? அல்லது இவர்கள் ஏன் அங்கிருக்கவேண்டும் என கொளுத்தி போடுகின்றாரா?

நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்

# ஓஓஓஓ ஒரு தென்றல் புயலாகி வருதே……………

https://youtu.be/9LCJEH28SRY